குஜராத்தின் கண்ட்லா விமான நிலையத்தில் இருந்து Q400 ரக டர்போப்ராப் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று மும்பை நோக்கிப் புறப்பட்டது. விமானத்தின் வலதுபுற ஜன்னல் இருக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவர், டேக் ஆஃப் ஆகும் காட்சியைக் காணொளியாகப் பதிவு செய்துள்ளார். விமானம் ஓடுபாதையில் வேகமாக வந்தபோது, வலதுபுறத்தின் ஒரு சக்கரம் கழன்று விழுந்துள்ளது. விமானத்தில் மொத்தமாக நான்கு சக்கரங்கள் இருக்கும். வலதுபுறத்தில் ஒரு சக்கரம் கழன்ற நிலையில், விமானம் எப்படித் தரையிறங்கும் […]

மகாராஷ்டிர மாநிலம் போர்ஜினி கிராமத்தை சேர்ந்த சஞ்சீவாணி என்ற பெண்ணுக்கு, கோலேகாவ் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவருடன் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், இந்த திருமணத்திற்கு முன்பே, லகான் பண்டாரே என்பவரை சஞ்சீவாணி காதலித்து வந்துள்ளார். மேலும், திருமணத்திற்கு பிறகும் இவர்களின் கள்ளத்தொடர்பு நீடித்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில், சஞ்சீவாணி தனது காதலன் லகான் பண்டாரேயை தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். பின்னர், இருவரும் ஒரு அறைக்குள் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, […]

மிசோரமின் முதல் ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இது வடகிழக்கு இந்தியாவின் இணைப்புக்கான ஒரு பொறியியல் அற்புதம் மற்றும் மாற்றத்திற்கான ஒரு படியாகும். இன்ற் பிரதமர் மோடி மிசோரமின் சாய்ராங் நிலையத்திலிருந்து முதல் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது மாநில தலைநகரான ஐஸ்வாலில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ளது. ஒவ்வொரு மாநில தலைநகரையும் ரயில் மூலம் இணைக்கும் நீண்டகால தொலைநோக்குப் […]

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் வேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம், ஹோலேநரசிபுரா தாலுகாவின் மொசலே ஹோசஹள்ளியில் வெள்ளிக்கிழமை கணேஷ் விசர்ஜன் ஊர்வலத்தின் போது, வேகமாக சென்ற லாரி திடீரென கூட்டத்திற்குள் புகுந்து கோர விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் […]

மேகாலயாவின் முன்னாள் முதல்வர் டான்வா டேத்வெல்சன் லாபாங் (Donwa Dethwelson Lapang), தனது 91 வயதில் காலமானார். ஏப்ரல் 10, 1934 அன்று பிறந்த லாபாங், ஒரு சாலைத் தொழிலாளியாகவும், பள்ளி துணை ஆய்வாளராகவும் தனது வாழ்க்கையை தொடங்கினார். தன்னுடைய கடும் உழைப்பின் மூலம் படிப்படியாக முன்னேறி, 1992 முதல் 2008-ஆம் ஆண்டு வரை மேகாலயாவின் முதல்வராக 4 முறை பதவி வகித்துள்ளார். 1972-ஆம் ஆண்டு, நொங்போ தொகுதியிலிருந்து சுயேட்சை […]

மும்பை கோரைக்கான் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், மாநகராட்சி நீர் வழங்கல் துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஊர்மிளா (44) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், ஊர்மிளாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கணவர் வீட்டில் இல்லாதபோது அவரை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். இதற்கிடையே, ஊர்மிளாவின் மகளின் காதலன் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றபோது, அவருடனும் ஊர்மிளாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களும் உல்லாசமாக […]

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு நல்ல செய்தியை அறிவித்துள்ளது. 2025 செப்டம்பர் மாதத்திலிருந்து, விலைவாசி உயர்வை சமாளிக்க நிதியுதவி அளிக்கும் வகையில், அரசு அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலைத்தொகை (DR) உயர்த்தவுள்ளது. பல்வேறு ஊடக அறிக்கைகளின்படி, இந்த உயர்வு சுமார் 6 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் சில சந்தர்ப்பங்களில், இது 7 சதவீதம் வரை கூட உயரக்கூடும். இதன் மூலம் அரசு ஊழியர்களின் சம்பளங்கள் அதிகரிக்கும் […]

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த கார் ஓட்டுநர் விட்டல், 3 திருமணங்கள் செய்து கொண்ட நிலையில், 4 ஆண்டுகளுக்கு முன்பு வனஜாக்-ஷி என்பவருடன் நட்பாக பழகி, பிறகு காதலில் விழுந்துள்ளார். வனஜாக்-ஷிக்கும் ஏற்கனவே இரு திருமணங்கள் நடந்துள்ள நிலையில், விவகாரத்தாகியுள்ளது. இதையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் கணவன் – மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். ஆரம்பத்தில் இவர்களின் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், விட்டலின் குடிப்பழக்கம் […]

பெங்களூருவை சேர்ந்த மாணவி, தனது சகோதரியை சந்திப்பதற்காக ஹைதராபாத் சென்றுள்ளார். அங்கிருந்து ஒரு தனியார் பேருந்தில் தனியாக பெங்களூரு திரும்பும்போது, பேருந்தில் இருந்த கிளீனர், மாணவி தனியாகப் பயணிப்பதை கண்டுள்ளார். பின்னர், இரவில் பேருந்தில் பயணிக்கும்போது, ஜன்னலை மூடுவதாக சொல்லி கிளீனர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, தனது தாயிடம் தொலைபேசியில் விவரத்தை கூறியுள்ளார். அப்போது, தொலைபேசியில் சார்ஜ் குறைந்ததால், அதை சார்ஜ் செய்ய […]

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மறைந்த தாயார் ஹீராபென் மோடியைப் போன்ற கதாபாத்திரங்களைக் காட்டும் வகையில், AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவை பீகார் காங்கிரஸ் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது. யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பகிரப்பட்ட அந்த வீடியோவில், “சஹாபின் (மதிப்புக்குரியவர்) கனவுகளில் ‘அம்மா’ தோன்றுகிறார். சுவாரஸ்யமான உரையாடலைப் பாருங்கள்” என்று இந்தியில் ஒரு தலைப்பு இருந்தது. மேலும் வீடியோவில், பிரதமர் மோடியைப் போன்ற ஒரு கதாபாத்திரம் […]