ChatGPT Go Free என்பது இந்தியாவில் உள்ள பயனர்களுக்காக OpenAI நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு புதிய இலவச சேவையாகும். இதன் மூலம் எந்தக் கட்டணமும் இல்லாமல் ChatGPT எனும் மேம்பட்ட AI சேட் கருவியை பயன்படுத்த முடியும். ChatGPT Go Free என்றால் என்ன? யார் இதைப் பெறலாம், எப்படிப் பெறுவது, மற்றும் கவனிக்க வேண்டிய முக்கிய நிபந்தனைகள் ஆகியவை குறித்து பார்க்கலாம்.. ChatGPT Go Free என்றால் என்ன? […]

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் மகேந்திர ரெட்டி தனது மனைவி டாக்டர் கிருத்திகா ரெட்டியை அதிகளவு மயக்க மருந்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.. கடந்த மாதம் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த கொலை தொடர்பான புதிய தகவல் வெளியாகி உள்ளது.. தனது மனைவியை கொலை செய்த சில நிமிடங்களுக்குப் பிறகு தனது காதலிக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்தச் செய்தியில் […]

இந்திய மின்னணு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய கணினி அவசர எதிர்வினை அணியும் (CERT-In), கூகுள் குரோம் (Google Chrome) பிரவுசர் பயனர்களுக்காக அதிக தீவிரத்தன்மை கொண்ட பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், சில குறைபாடுகள் (vulnerabilities) ஹேக்கர்களுக்கு தூரத்திலிருந்தே கணினி பாதுகாப்பை மீறி, முக்கிய தகவல்களை திருடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை 2025 அக்டோபர் 30 (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டது. எச்சரிக்கையின் முக்கிய அம்சங்கள்: […]

குஜராத் மாநிலம் ஜூனாகாத் மாவட்டத்தில் உள்ள ஷோபாவத்தல கிராமத்தில் விபாபென் என்ற பெண், தனது கணவரை கொரோனா பெருந்தொற்று காலத்தில் இழந்த பிறகு, 22 வயதான ஷிவம்கிரி மற்றும் 15 வயதான மற்றொரு மகனுடன் வசித்து வந்தார். ஷிவம்கிரி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்ய, அவரது தம்பி எலெக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது. எனினும், இளைய மகனுக்கு இருந்த குடிப்பழக்கம் காரணமாக வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு […]

கோவையில் 20 வயது கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து வேதனை தெரிவித்த தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் பிரியங்க் கனூங்கோ, தமிழக அரசைக் குற்றம் சாட்டி, “பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கங்களுக்கு இன்னும் எத்தனை நிர்பயாக்கள் தேவைப்படும்?” என்று கேள்வி எழுப்பினார். கோயம்புத்தூரில் 20 வயது கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் முழு நாட்டையும் […]

யுனைடெட் கிங்டம் நாட்டின் லெஸ்டரில் வசிக்கும் 40 வயதான விஸ்வாஸ் குமார் ரமேஷ், கடந்த ஜூன் 12 அன்று குஜராத் மாநிலம் அஹமதாபாத் அருகே ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபர் ஆவார். அந்த விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர். அந்த துயரமான சம்பவத்துக்குப் பல மாதங்களுக்குப் பிறகு, ரமேஷ் தான் உயிருடன் இருப்பதை ஒரு மேஜிக் என்றும், ஏர் இந்தியா விமான விபத்தில் […]

பெங்களூரு கேஜி ஹள்ளியில் உள்ள பில்லண்ணா கார்டனைச் சேர்ந்தவர் ரேணுகா. திருமணமான இவருக்கு ஒரு குழந்தை இருந்த நிலையில், கருத்து வேறுபாட்டால் கணவருடன் விவாகரத்துப் பெற்றுப் பிரிந்தார். தனியாக வசித்து வந்த ரேணுகாவுக்கு, பைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் அம்பேத்கர் என்கிற குட்டா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நட்பு, நாளடைவில் நெருக்கமான காதலாக மாறியது. குட்டா, ரேணுகாவைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறியதால், இருவரும் நெருங்கிப் பழகி, ரேணுகாவின் […]

ஜெய்ப்பூரின் ஹர்மாடா பகுதியில் உள்ள லோஹா மண்டி அருகே இன்று பயங்கர விபத்து ஏற்பட்டது.. ஒரு அதிவேக டிப்பர் லாரி 17 வாகனங்கள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.. 10 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.. காயமடைந்தவர்களில் 3 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது இந்த மூவரும் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.. காலியாக இருந்த […]

சைபர் குற்றவாளிகள் அரசு, போலீஸ் அல்லது விசாரணை அதிகாரிகள் என தங்களை போலியாக காட்டி, குறிப்பாக மூத்த குடிமக்களை “டிஜிட்டல் கைது” எனும் பெயரில் ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், இதுபோன்ற குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப் போவதாக உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. நாட்டில் இதுவரை சுமார் ரூ.3,000 கோடி வரை மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளதாகவும், இது மிகக் கவலைக்கிடமான நிலை என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது. டிஜிட்டல் […]