ரயிலில் எச்சரிக்கைச் சங்கிலியைப் பார்க்கும் போதெல்லாம், ஒவ்வொரு பயணிக்கும் எழும் கேள்வி என்னவென்றால், அதை இழுத்தால் என்ன நடக்கும் என்பதுதான். ஆனால் இது வேடிக்கையாக இல்லை. இது ரயில் பயணிகள், பாதுகாப்பு மற்றும் பிற பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தும். எந்த காரணமும் இல்லாமல் ரயிலில் எச்சரிக்கைச் சங்கிலியை இழுத்தால், நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். இதுகுறித்து பார்க்கலாம்.. ரயிலில் எச்சரிக்கைச் சங்கிலி 150 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் பொறியாளர் ஜார்ஜ் […]

தெரு நாய்கள் தொடர்பான வழக்கு தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறியதற்காக மேற்கு வங்கம், டெல்லி மற்றும் தெலங்கானா தவிர அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. அடுத்த விசாரணை நாளான நவம்பர் 3 ஆம் தேதி அதிகாரிகள் ஆஜராகவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்தது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா […]

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதியான நீதிபதி சூர்யா காந்தை தலைமை நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.. அடுத்த தலைமை நீதிபதியை நியமிக்கும் செயல்முறையை இந்திய தலைமை நீதிபதி (CJI) பூஷண் ஆர். கவாய் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். மூப்பு அடிப்படையில் இந்தப் பதவிக்கு அடுத்த இடத்தில் உள்ள நீதிபதி காந்த், நவம்பர் 23 ஆம் தேதி நீதிபதி கவாய் ஓய்வு பெறும்போது பதவியேற்கத் தகுதி பெறுவார். அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டதும், […]

குஜராத் மாநிலம் ஜாம்நகர் நகரில் உள்ள ஒரு கடைக்கு வெளியே சிறுமி ஒருவரிடம் முதியவர் ஒருவர் தகாத முறையில் நடந்துகொண்ட சம்பவம், சமூக வலைதளங்களில் வீடியோவாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அருவருக்கத்தக்க சம்பவம், செப்டம்பர் 23ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை சுமார் 4.30 மணியளவில் ஜாம்நகரின் அப்னா பஜார் பகுதியில் நடந்துள்ளது. அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த சிறுவன், சிறுமியை அருகில் அழைத்த முதியவர், அவர்களுடன் விளையாடுவது […]

இந்திய நிதி அமைப்பில் வெளிப்படைத்தன்மை, நுகர்வோர் பாதுகாப்பு, மற்றும் அமைப்புரீதியான பொறுப்புணர்வை மேம்படுத்தும் நோக்குடன், இந்திய ரிசர்வ் வங்கி தனது மிகப்பெரிய சீர்திருத்த முன்மொழிவுகளில் ஒன்றான வரைவு 238-ஐ வெளியிட்டுள்ளது. கடன் வழங்குதல், EMI விதிமுறைகள், கிரெடிட் கார்டு விதிமுறைகள் மற்றும் வங்கி சேமிப்பு நடைமுறைகள் எனப் பல முக்கிய அம்சங்களில் இது மாற்றங்களை கொண்டுவர உள்ளது. நுகர்வோரைப் பாதுகாக்கும் புதிய விதிகள் : பொதுமக்கள் கருத்துகளுக்காக நவம்பர் 10ஆம் […]

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டம், வாடா தாலுகாவுக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் கணவர் இல்லாத நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை, அவருக்கு அறிமுகமான நபர் ஒருவர் ஏமாற்றி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று இரவு, அந்தப் பெண்ணின் கணவர் இல்லாத நேரத்தில், அவருக்குத் தெரிந்த நபர் ஒருவர் வீட்டிற்கு வந்துள்ளார். அவர், அப்பெண்ணின் கணவர்தான் அழைப்பதாக கூறி, ஊருக்கு […]

பெங்களூரு கெங்கேரி அருகே உல்லால் உபநகர் பகுதியில் வசித்து வரும் சீனிவாஸ் சுவாமி என்பவர், தன்னை ஒரு மந்திரவாதி என்று கூறிக்கொண்டு, பேய் பிடித்தவர்களை விடுவிப்பதாக சொல்லிவந்தார். இவரை நம்பிப் பலரும் இவரது வீட்டிற்கு வந்து சென்றதால், இவர் அடிக்கடி இரவில் பூஜை என்ற பெயரில் சத்தமாக மந்திரங்களை ஓதுவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். சம்பவத்தன்று நள்ளிரவில் சீனிவாஸ் சுவாமி, ஸ்பீக்கரை வைத்துக்கொண்டு ‘ஹ்ரீம்.. ஹ்ரீம்.. ஹ்ரூம்.. பட்.. பட்…’ போன்ற […]

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் கட்பால் பகுதியைச் சேர்ந்தவர் சுதர்ஷன் (எ) ரவிராஜ் ரஞ்சித் ஜாதவ் (45). கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி, மதன்வாடி பகுதியில் உள்ள ஒரு மேம்பாலத்திற்கு அடியில் கருப்புக் கம்பளியில் சுற்றப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. காவல்துறையின் தகவல்படி, சுதர்ஷன் தனது மனைவி தீபாளியை (30 வயது) இரும்புக் கம்பியால் தலையில் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து, மனைவியின் கொலையை […]

ஆந்திராவில் நேற்று அதிகாலை நடந்த கொடூரமான பேருந்து விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்… பேருந்தில் இருந்த வேறு சில பயணிகளைக் காணவில்லை.. எனவே அவர்களும் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது. பேருந்து தீப்பிடித்து எரிந்தபோது அவசரி வழி கண்ணாடியை உடைத்து வெளியேறியதால் பலர் உயிர் தப்பினர்.. இந்த நிலையில் இந்த விபத்து தொடர்பாக பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.. அந்த பேருந்து சுமார் […]

கர்நாடகா மாநிலம் பெங்களூருவின் அசோக் நகர் பகுதியில் உள்ள தோல் சிகிச்சை மையம் ஒன்றில், சிகிச்சைக்காக சென்ற இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட மருத்துவரை கைது செய்தனர். தோல் ஒவ்வாமை சிகிச்சைக்காக 21 வயதுடைய அந்த இளம்பெண் தனியாக கிளினிக்கிற்கு சென்றுள்ளார். அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர், பரிசோதனை என்ற பெயரில் […]