கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ இறுதியாண்டு படித்து வந்த 20 வயது மாணவி ஒருவருக்கு, கல்லூரியில் அவர் வராததால் வருகைப் பதிவு குறைவாக இருந்துள்ளது. இதே கல்லூரியில் பேராசிரியராகவும், பி.சி.ஏ பிரிவின் தலைவராகவும் சஞ்சீவ் குமார் மண்டல் (45) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். குறைவான வருகைப் பதிவு குறித்துப் பேசுவதற்காகவும், தன் வீட்டில் மதிய உணவு சாப்பிட வருமாறும் அந்த மாணவிக்கு சஞ்சீவ் குமார் […]

உத்தரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் மாமியாருடன் மருமகன் கள்ளக்காதல் உறவு வைத்திருந்த விபரீதத்தின் உச்சமாக, மனைவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஸ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பிரமோத் என்பவருக்கும், சிவானி என்ற பெண்ணுக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான புதிதில் இவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்த நிலையில், சமீப காலமாக இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனைகள் வெடித்தன. இந்தப் பிரச்சனைக்கு முக்கியக் […]

வழக்கறிஞர்களாக 7 ஆண்டுகள் பயிற்சி முடித்த நீதித்துறை அதிகாரிகள், பார் ஒதுக்கீட்டின் கீழ் மாவட்ட நீதிபதிகளாக முடியும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வை வழிநடத்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் “நீதித்துறையில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர்கள், ஏற்கனவே பார் நீதிபதிகளாகப் பணியில் அமர்வதற்கு முன்பு மாவட்ட நீதிபதிகளாக நியமிக்கப்பட தகுதியுடையவர்கள்” என்று தெரிவித்தார்.. அரசியலமைப்பின் விளக்கம் பழக்கவழக்கமாக இல்லாமல் இயல்பானதாக இருக்க […]

டெல்லியின் மதங்கிர் பகுதியில் தினேஷ் – சாதனா என்ற தம்பதி வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.. இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில் 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.. சாதனா தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.. இந்த நிலையில் இரவில் தூங்கிக் கொண்டிருந்த தனது கணவர் மீது சாதனா கொதிக்கும் எண்ணெயை ஊற்றி, பின்னர் அவர் மீது மிளகாய்ப் பொடியைத் தூவியுள்ளார். தனது 6 மாத மகள் […]

கோல்ட்ரிஃப் இருமல் சிரப்பால் 20 குழந்தைகள் இறந்ததாக தொடரப்பட்ட வழக்கில் அந்த மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை மத்திய பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவில் காய்ச்சல் மற்றும் இருமல், சளி பிரச்சனையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிரப் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை எடுத்துக்கொண்ட குழந்தைகள் திடீரென உயிரிழந்திருக்கின்றன. அதேபோல இராஜஸ்தானில், முதலமைச்சரின் இலவச மருத்துவ திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இருமல் மருந்துகளை உட்கொண்டதால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததுடன், பலர் […]