நாட்டில் மொத்தம் 1,78,184 ஆயுஷ்மான் சுகாதார மையங்கள் செயல்பாட்டில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மையங்கள் மூலம் சுகாதார பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்தும் வகையில், ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார மையங்களில் விரிவான சுகாதார சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. நோய்த் தடுப்பு முறைகள், தொற்று மற்றும் தொற்றாத நோய்களுக்கான சிகிச்சைகள், குழந்தைகள் நலன் மற்றும் இதர சுகாதார சேவைகளும் இந்த மையங்களில் வழங்கப்படும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. […]

உ.பி.யின் ஹாப்பூரில் உள்ள ஹோட்டலில் கணவரின் காதலியுடன் காபி குடிப்பதை பார்த்த மனைவி, அந்த பெண்ணை நடுரோட்டிலேயே கடுமையாக தாக்கினார்.. உத்தரபிரதேச மாநிலம் ஹப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் தனது கள்ளக்காதலியை சந்திக்கச் சென்ற திருமணமான நபர் ஒருவரை அவரது மனைவி கையும் களவுமாகப் பிடித்தார். அந்த நபரின் மனைவிக்கும் அவரது கள்ளக்காதலிக்கும் இடையே நடந்த மோதலின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. தனது கணவரை வேறொரு பெண்ணுடன் பார்த்த […]

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய கர்நாடக முன்னாள் எம்.பி பிரஜ்வால் ரேவண்ணாவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பணிப்பெண்ணை பண்ணை வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தது, வீடியோ எடுத்து மிரட்டியது உள்ளிட்ட பல புகார்கள் கர்நாடக முன்னாள் எம்.பி பிரஜ்வால் மீது குவிந்தது.. ஹாசன் மாவட்டம், ஹோலேநரசிபுராவில் உள்ள ரேவண்ணா குடும்பத்தின் கன்னிகாடா பண்ணை வீட்டில் பணிபுரிந்த 48 வயது பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக அவர் மீது […]

திருமண உறவில் ஏற்படும் பிரச்சனையின் போது கூறப்படும் உணர்வுப்பூர்வமான குற்றச்சாட்டு அவதூறாகுமா? இதுகுறித்து மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.. விவாகரத்து மற்றும் பராமரிப்பு வழக்குகளில் தன்னை ஆண்மையற்றவள் என்று கூறி தனது நற்பெயரை கெடுத்ததாக கணவர் ஒருவர் குற்றம்சாட்டி உள்ளார்.. இந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.. ஆண்மைக்குறைவு குற்றச்சாட்டு, விவாகரத்து அல்லது பராமரிப்பு […]

காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இன்று பாஜக அரசு மற்றும் நாட்டின் தேர்தல் செயல்முறை மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.. தொடங்கினார், 2024 பொதுத் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். டெல்லியில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு வருடாந்திர சட்ட மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, “ஒரு மக்களவைத் தேர்தலில் எவ்வாறு மோசடி செய்ய முடியும்? அல்லது எப்படி மோசடி செய்யப்படலாம் என்பதை […]

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத மையங்கள் மீது இந்தியா நடத்திய பதிலடித் தாக்குதலான ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை பகவான் மகாதேவருக்கு அர்ப்பணித்தார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் ஒரு பிரிவான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) 26 பேரைக் கொன்றதற்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரையும், அதைத் தொடர்ந்து ஆபரேஷன் மகாதேவையும் தொடங்கியது. வாரணாசியில் ஒரு பொதுக் […]

வரும் செப்டம்பர் மாதத்துடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு 75 வயது ஆக உள்ளதால், அவர் ஓய்வு பெறவேண்டும் என எதிர்கட்சிகள் கூறிவரும் நிலையில், புதிய பிரதமரை தேர்வு செய்வதில் ஆர்எஸ்எஸ் தீவிரமாக உள்ளதாகவும், அடுத்த பிரதமர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவராக இருப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜவில் 75 வயதானதும் தலைவர்கள் அரசியலில் இருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள். 2019 மக்களவை தேர்தலின்போது, 75 வயதுக்கு மேற்பட்ட பாஜ தலைவர்களுக்கு பலருக்கு சீட் […]

தேர்தல் ஆணையம் வாக்குகளை திருடுவதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டிய நிலையில், ஆணையம் இதற்கு பதிலளித்துள்ளது.. எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் ஆணையம் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்.. இந்த நிலையில் இன்று தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி ” இந்திய தேர்தல் ஆணையம் மிகப்பெரிய வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளது.. தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதற்கான வெளிப்படையான […]