உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் நடந்த ஒரு வினோதமான சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, லக்னோவிலிருந்து பரேலிக்கு சென்ற ரயில் மத்தியா மந்திர் அருகே வந்தபோது, ​​ஒரு பயணி ரூ.100 மற்றும் ரூ.500 நோட்டுகளை ஜன்னலுக்கு வெளியே தூக்கி வீசினார். இந்தக் காட்சியைக் கண்ட உள்ளூர்வாசிகள், நோட்டுகளை சேகரிக்க விரைந்தனர். இந்த சம்பவம் ஃபரித்பூர் பகுதியில் நடந்தது. ரயில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தபோது, ​​ஒரு […]

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் ‘பண்ணை வீட்டில் நிர்வாண விருந்து’ என்ற அறிவிப்பு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் நடக்கும் இத்தகைய கேளிக்கை நிகழ்ச்சிகள் தற்போது இந்தியாவிலும் நிகழ்ந்து வருகிறது. பெங்களூரு போன்ற நகரங்களில் ஏற்கனவே ரேவ் பார்ட்டிகள் என்ற பெயரில், போதைப்பொருள் மற்றும் ஆபாச நடனங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், ராய்பூரில் செயல்பட்டு வரும் சில பிரபல கிளப்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இணைந்து, […]

தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் தரத்தை மேம்படுத்த திட்ட முன்மொழிவுகள் விதிமுறைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கடுமையாக்கியுள்ளது. இது குறித்து தேசிய நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் ஒட்டுமொத்த செலவுகளைக் குறைக்கவும், தாமதங்களைத் தவிர்க்கவும் மற்றும் திட்டங்களை செயல்படுத்தலின் தரங்களை மேம்படுத்தவும், ஒப்பந்ததாரரின் தகுதிகளுக்கான விதிமுறைகளை வலுப்படுத்தும். மேலும் திட்ட செயல்படுத்துதலில் இணக்கத்தை அமல்படுத்துவதையும், நிதி சமர்ப்பிப்புகளில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட […]

தேசிய கல்வி உதவித் தொகைக்காக விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 2025 செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2025-26 கல்வியாண்டில் தேசிய கல்வி உதவித் தொகைக்காக, தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதி வாய்ந்த மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 2025 செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் 2025 ஜூன் 2, முதல், விண்ணப்பிப்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், முதலில் ஒரு முறை பதிவை நிறைவு செய்து அதன் பிறகு […]

பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளையொட்டி, உலகம் முழுவதிலுமிருந்து தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர் . துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா, பிரதமர் மோடியின் படத்தால் ஒளிரச் செய்யப்பட்டது . புர்ஜ் கலீஃபாவில் ” பிறந்தநாள் வாழ்த்துக்கள் ” என்று எழுதி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு , இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி , […]

ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம், புங்கனூரில் 6 ஆம் வகுப்பு மாணவிக்கு அவரது ஆசிரியர் உடல் ரீதியான தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.. இதனால் அந்த மாணவிக்கு மண்டை ஓட்டில் முறிவு ஏற்பட்டது. சாத்விகா நாகஸ்ரீ என அடையாளம் காணப்பட்ட சிறுமியின் தலையில் அவரது இந்தி ஆசிரியர் சலீமா பாஷா, ஸ்டீல் லஞ்ச் பாக்ஸ் உடன் இருந்த பையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. வகுப்பில் ஏதோ குறும்பு செய்ததால் கோபமடைந்த ஆசிரியர், […]

மத்தியப் பிரதேச மநிலம் போபால் பகுதியில் இரண்டு சகோதரர்கள் தங்கள் அண்ணியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையிடம் அளித்த புகாரில், தனது கணவரின் உடல்நலம் சரியாவதற்காக சில சடங்குகள் செய்ய வேண்டும் என்று கூறி, அவரது சகோதரர்கள் தன்னை ஏமாற்றியதாக தெரிவித்துள்ளார். கணவர் மருத்துவ சிகிச்சைக்காக வெளியே சென்றிருந்தபோது, இரவு நேரங்களில் அவர்கள் என்னுடைய அறைக்குள் நுழைந்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தனர். […]

ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான பாலிஹர்சந்தி கோயிலில், காதலன் கண் முன்னே காதலி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் கிளப்பியுள்ளது. கோயிலுக்குச் சென்ற ஒரு மாணவியும் அவரது காதலனும், அருகில் அமர்ந்திருந்தபோது ஒரு கும்பல் அவர்களை நெருங்கியது. அந்த கும்பல், இருவரையும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து, அவற்றை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டியுள்ளது. ஆனால், காதலர்கள் பணம் […]

அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட மூளைத் தொற்று நோயான முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (PAM) நோயின் பாதிப்புகள் கேரளாவில் அதிகரித்துள்ளது.. இதையடுத்து கேரள சுகாதார அதிகாரிகள் உள்ளனர். இந்த தொற்று ‘மூளையை உண்ணும் அமீபா’ என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இது நெய்க்லீரியா ஃபோலேரியாவால் ஏற்படுகிறது. இந்த ஆண்டு, கேரளாவில் 61 பேருக்கு இந்த பாதிப்பு பதிவாகி உள்ளது.. இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.. கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், […]