குருகிராமில் நடந்த நில விவகாரம் தொடர்பான ஊழல் வழக்கில், தொழிலதிபரும், காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வாத்ரா, சட்டவிரோத முறையில் ரூ.58 கோடி வருமானம் பெற்றதாக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது. இந்த நிதிகளை ராபர்ட் வாத்ரா சட்டவிரோதமாக பெறப்பட்டதாகக் குறிப்பிட்ட அமலாக்கத்துறை, இந்த நிதியை வதேரா அசையா சொத்துக்களை வாங்கவும், முதலீடுகளை செய்யவும், கடன்கள் மற்றும் முன்பணங்களை வழங்கவும், அவருடன் தொடர்புடைய குழு நிறுவனங்களின் பாக்கிகளைத் […]

முன் அறிவிப்பு இல்லாமல், விசாரணை நடத்த வாய்ப்பு இல்லாமல் மற்றும் தகுதிவாய்ந்த அதிகாரியிடமிருந்து நியாயமான உத்தரவு இல்லாமல் பீகார் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து எந்த பெயரும் நீக்கப்படாது என்று இந்திய தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. துணை தேர்தல் ஆணையர் சஞ்சய் குமார் தாக்கல் செய்த கூடுதல் பிரமாணப் பத்திரத்தில், உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்படாது என்று தேர்தல் ஆணையம் […]

திரிபுராவில், தெலியாமுராவில் பள்ளி ஒன்றில், கழிப்பறை சென்ற ஒரு மாணவன், அங்கு தலையில்லாத, சிதைந்த கருப்பு நிற உடல் இருந்ததை கண்டு அலறியுள்ளான். அதன்பின் அந்த இடத்துக்கு சென்ற மேலும் 3 மாணவிகளும் இதே காட்சியை கண்டதாக கூறப்படுகிறது. தற்போது 4 பேரும் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அங்கு அமானுஷ்ய நடமாட்டம் உள்ளதாகவும், குறிப்பாக பாத்ரூமில் மர்மம் உள்ளதாகவும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். திரிபுராவின் தெலியாமுராவில் பன்னிரண்டாம் வகுப்புப் பள்ளியில் […]

பிரதமர் நரேந்திர மோடி புது டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் பள்ளி குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் நிகழ்வை கொண்டாடினார்.. சகோதர சகோதரிகளுக்கு இடையேயான உன்னதமான பிணைப்பை சித்தரிக்கும் வகையில், பிரதமரின் மணிக்கட்டில் குழந்தைகள் வண்ணமயமான ராக்கிகளை கட்டினர்.. இதுதொடர்பான வீடியோவை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. “இன்று மிகவும் சிறப்பு வாய்ந்த ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்தின் சிறப்பம்சங்கள் இங்கே. நமது பெண் சக்தியின் தொடர்ச்சியான நம்பிக்கை […]

இந்திய தேர்தல் ஆணையம் (ECI), தேர்தல் முறையில் ஒழுங்கு மற்றும் பொறுப்புணர்வு கொண்டு வரும் நோக்கில், இந்திய முழுவதும் அல்லது சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்றாததற்காக, 334 பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை (RUPPS) தேர்தல் ஆணையம் சனிக்கிழமை பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கையால் தமிழ்நாட்டை சேர்ந்த 22 ககட்சிகளும் தடை செய்யப்பட்டுள்ளது. இக்கட்சிகள் கடந்த 6 ஆண்டுகளில் எந்தவொரு தேர்தலிலும் பங்கேற்காததுடன், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட முகவரிகளில் அவற்றின் […]

டெல்லி தம்பதியினர் தங்கள் மகளை உளவு பார்க்க முயன்ற சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறி உள்ளது.. தனியார் துப்பறியும் பணியாளரான தன்யா பூரி இதுகுறித்து பேசி உள்ளார். இதுதொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது.. என்ன நடந்தது? ஒரு பாட்காஸ்ட் நேர்காணலில், பேசிய தன்யா பூரி “டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு பெண்ணுக்கு காதலன் இருப்பதாக அவரின் பெற்றோருக்கு அடிக்கடி சந்தேகம் இருந்தது, ஆனால் அப்பெண் அதைச் சொல்லவில்லை. […]