டெல்லி செங்கோட்டை வளாகத்தில் நடந்த சமண மத சடங்கின் போது, ​​சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஒரு கலசம் திருடப்பட்டது. இந்த கலசம் 760 கிராம் தங்கத்தால் ஆனது, அதில் 150 கிராம் வைரங்கள், மாணிக்கங்கள் மற்றும் மரகதங்கள் பதிக்கப்பட்டுள்ளன. தகவல்களின்படி, தொழிலதிபர் சுதிர் ஜெயின் ஒவ்வொரு நாளும் வழிபாட்டிற்காக இந்த கலசத்தை கொண்டு வருவார். செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மக்களவை […]

பெட்ரோல் மற்றும் டீசல் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.. அதாவது, பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருள் பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்படுமா என்பது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.. பெட்ரோல், டீசல் விரைவில் ஜிஎஸ்டிக்குள் வருமா ? பிரபல ஆங்கில செய்தி ஊடகத்திடம் பேசிய நிர்மலா சீதாராமனிடம், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மதுபானங்கள் எதிர்காலத்தில் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவரப்படுமா என்ற கேள்வி […]

ஹிமாசல பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 355 பேர் உயிரிழந்துள்ளனர்‌ என மாநில அவசரகால நடவடிக்கை மையம் தெரிவித்துள்ளது. இமயமலையையொட்டிய ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக பலத்த மழையால் பெருவெள்ளமும் நிலச்சரிவுகளும் நேரிட்டுள்ளன. அண்டை மாநிலமான பஞ்சாபும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹிமாசல பிரதேசத்தில் கடந்த ஜூன் 20-இல் இருந்து இதுவரை 45 மேகவெடிப்புகள், 95 பெருவெள்ளங்கள், 132 பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டு, […]

கடும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார். கடந்த சில வாரங்களாக வடமாநிலங்களான உத்தராகண்ட், சத்தீஸ்கர், ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஜம்மு – காஷ்மீரில் கனமழை பெய்து வருகிறது. இருப்பினும், ஆங்காங்கே மேக வெடிப்பு காரணமாக திடீரென மழை கொட்டித்தீர்க்கிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது. கொட்டித்தீர்க்கும் மழையால், முக்கிய சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவை பலத்த சேதமடைந்துள்ளன. […]

மத்தியப் பிரதேசத்தின் பரபரப்பான நகரான போபாலில், ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் நடந்த கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரோஷினி என்ற இளம்பெண் தனது காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணையில் வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ரோஷினிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த டெய்லர் முபின் கானுக்கும் நட்பு ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. இருவரும் ரகசியமாகச் சந்தித்து, தங்கள் காதலை வளர்த்துள்ளனர். ரோஷினியின் தாய்க்கு […]

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உல்லாசத்திற்கு ஆசை காட்டி வரவழைத்து, ஒருவரை கத்தி காட்டி மிரட்டிப் பணம் பறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தச் செயலில் ஈடுபட்ட 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப் குமார் (27) என்பவர், குந்தாப்புராவில் அப்துல் சவத் (28) என்பவருடன் நட்புறவு கொண்டிருந்தார். இந்த நட்பின் மூலம், அப்துல் சவத் அஸ்மா (42) என்பவரை சந்தீப் குமாருக்கு அறிமுகம் […]

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் ஒரு வியாபாரியின் குடும்பத்தில் நடந்த விசித்திரமான சம்பவம், தற்போது ஊர் முழுவதும் பேசும் பொருளாக மாறியுள்ளது. திருமணமாகி ஒரு வருடம் கழித்து, கணவனும் மனைவியின் தங்கையும் காதலித்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன், காசிபூரைச் சேர்ந்த ஒரு வியாபாரிக்கு, அம்ரோஹாவைச் சேர்ந்த வியாபாரியின் மூத்த மகளுடன் திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணமான ஒரே ஆண்டில், மருமகனுக்கும் அவரது மனைவி தங்கையான […]

ஜிஎஸ்டி வரியை குறைத்ததன் மூலம் பொது மக்களுக்கு நிவாரணம் அளித்த மோடி அரசு தற்போது ஏற்றுமதியாளர்களுக்கு குட்நியூஸ் வழங்க தயாராகி வருகிறது.. சமீபத்தில் மத்திய அரசு ஜிஎஸ்டி விகிதங்களை குறைத்த நிலையில், ட்ரம்பின் புதிய வரி விதிப்பால் சிரமங்களை எதிர்கொள்ளும் ஏற்றுமதியாளர்களை ஆதரிக்க மோடி அரசாங்கம் இப்போது நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. அமெரிக்க நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட அதிக இறக்குமதி வரிகளைச் சமாளிக்க சிரமப்படும் ஏற்றுமதியாளர்களுக்கு அரசாங்கம் ஒரு […]

மும்பையில் சுமார் 400 கிலோ RDX வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட 34 மனித வெடிகுண்டுகள் இருப்பதாக காவல்துறையினருக்கு மிரட்டல் வந்தது.. இதையடுத்து மும்பையில் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. மும்பையில் உள்ள 34 வாகனங்களில் சுமார் 400 கிலோ RDX வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டுள்ள “மனித குண்டுகள்” இருப்பதாகவும், ஒட்டுமொத்த நகரத்தையும் உலுக்கும்” பயங்கர வெடிப்புகள் ஏற்படும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.. வாட்ஸ்அப்பில் போக்குவரத்து காவல்துறை உதவி எண்ணுக்கு இந்த […]

கர்நாடக மாநிலம் மாண்டியா மணிக்கண்ணஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியை தீபிகா வெங்கடேஷ் கவுடா (28), மர்மமான முறையில் காணாமல் போனார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவரது உடல் மலையடிவாரத்தில் உள்ள புதரில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவரது கணவர் லோகேஷ் மற்றும் கிராம மக்கள் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, கழுகுகள் வட்டமிடுவதைக் கண்டு, சந்தேகம் அடைந்து உடலை கண்டுபிடித்தனர். தீபிகா ஒரு ஆசிரியை மட்டுமல்ல, இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்ஸரும் ஆவார். அவரது […]