மத்திய பட்ஜெட் 2026–27 மூலம், புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகளில் பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் விளைவாக, இந்தியா முழுவதும் சிகரெட் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த புதிய வரி அமைப்பு பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. 2017 முதல் நடைமுறையில் இருந்த GST + இழப்பீடு செஸ் (Compensation Cess) முறையை இந்த பட்ஜெட் முழுமையாக மாற்றியுள்ளது. புதிய வரி முறையின்படி, சிகரெட்டுகள் மற்றும் பிற […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
“உண்மையான காதலன் ஒருபோதும் தனது காதலியின் அந்தரங்கப் படங்களை எடுத்து, அவளை மிரட்ட மாட்டான்” என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வழக்கின் பின்னணி என்ன..? காதலிப்பதாக கூறி ஒரு பெண்ணுடன் பழகிய நபர், அந்தப் பெண்ணின் நம்பிக்கையை பெற்று நெருக்கமாக இருந்துள்ளார். அந்த தருணங்களை பெண்ணுக்குத் தெரியாமல் ரகசியமாகப் புகைப்படம் எடுத்துக்கொண்ட அவர், தனது காம இச்சையைத் தீர்த்துக்கொள்ள அந்தப் படங்களையே ஆயுதமாக மாற்றியுள்ளார். நான் சொல்வதற்குக் கட்டுப்படாவிட்டால் […]
பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண்மணி, தனது 23 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். படிப்பு தேவைக்காக தனது மகளுக்கு அவர் செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால், அந்த இளம்பெண் தனது காதலனுடன் மணிக்கணக்கில் செல்போனில் பேசி வந்ததை அறிந்த தாய், கண்டிக்கும் விதமாக மகளின் செல்போனைப் பறிமுதல் செய்துள்ளார். சில நாட்களுக்குப் பிறகு அந்த செல்போனை சரிபார்த்தபோது, அதில் இருந்த காட்சிகளை கண்டு அவர் நிலைகுலைந்து போனார். அந்த இளம்பெண், […]
மேற்குவங்க மாநிலத்தின் பிரபலமான சமூக வலைதள விமர்சகர் ஷாமிக் அதிகாரி, பாலியல் வன்கொடுமை புகாரில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ‘நான்சேன்’ (Nonsense) என்ற பெயரில் இயங்கி வரும் இவரது சமூக வலைதளப் பக்கங்கள், அரசியல் நையாண்டிகளுக்கும், அரசு நிர்வாகத்திற்கு எதிரான காரசாரமான விமர்சனங்களுக்கும் பெயர் பெற்றவை. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளை கடுமையாக சாடி வந்த […]
மேற்கு வங்க மாநிலத் தேர்தல் ஆணையம் மற்றும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. மேற்கு வங்க சிறப்பு விசாரணை அறிக்கை (SIR) மீதான விசாரணையின் போது, இந்தியத் தலைமை நீதிபதி (CJI) சூர்ய காந்த், சிறப்பு விசாரணை அறிக்கைச் செயல்பாட்டில் எந்தத் தடையையும் உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்பதைத் தெளிவுபடுத்தினார். தேவைப்படும் இடங்களில் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும், ஆனால் எந்தத் தடைகளும் […]
முன்னாள் மத்திய அமைச்சரான சரத் பவார் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. தொண்டை தொடர்பான பிரச்சனைகள் மற்றும் இருமல் காரணமாக புனேயில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். என்சிபி (எஸ்பி) கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு தொண்டை தொற்று ஏற்பட்டிருப்பதால், அவர் ரூபி ஹால் கிளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்படுவதாக அவரது நெருங்கிய உதவியாளர் ஒருவர் தெரிவித்தார். ரூபி ஹால் கிளினிக்கின் தலைமை இருதயநோய் நிபுணரும், நிர்வாக அறங்காவலருமான […]
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவையில் பேச அனுமதிக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேயின் அலுவலகத்தில் […]
தேசியத் தலைநகர் டெல்லியில் உள்ள 9 பள்ளிகளுக்கு திங்கள்கிழமை அன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.. மின்னஞ்சல்கள், அழைப்புகள் மூலம் இந்த மிரட்டல் வந்தது.. இது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரிடையே பீதியை ஏற்படுத்தியது. அன்று பிற்பகல் 1:11 மணியளவில் ஒரு வெடிப்பு நிகழும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.. இந்தச் செய்திகள் காலை 8:30 மணி முதல் 9:00 மணிக்குள் பெறப்பட்டன என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.. அதைத் தொடர்ந்து, […]
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே, தனது 17 வயது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவன் மற்றும் மாமியாரை கொலை செய்ய துணிந்த பெண்ணின் செயல், அந்தப் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சித்தூரைச் சேர்ந்த கவிதாவிற்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் அவருக்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக ரகசியமாக நீடித்த இந்த விவகாரம், கவிதாவின் கணவர் […]
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் 3 சிறுமிகள் அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் தற்போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு, சேத்தன் குமாருடன் ‘லிவ்-இன்’ முறையில் வாழ்ந்த பெண் ஒருவர் மொட்டை மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தார். அப்போது தற்கொலை என்று முடிக்கப்பட்ட அந்த வழக்கிற்கும், தற்போதைய சிறுமிகளின் மரணத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என துணை ஆணையர் நிமிஷ் பாட்டீல் தலைமையிலான குழு […]

