இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து புதிய இருசக்கர வாகனங்களுக்கும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஏபிஎஸ் (Anti-lock Braking System) பிரேக்கிங் முறை கட்டாயமாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் விரைவில் வெளியிட உள்ளது. ஏபிஎஸ் என்பது, வாகன ஓட்டுநர் அவசர நிலையில் திடீரென பிரேக் அடிக்கும்போது, சக்கரங்கள் லாக் ஆகாமல் தடுக்கக்கூடிய ஒரு […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும் மாரடைப்பு காரணமாக ஏற்படும் திடீர் இறப்புகளின் அதிகரிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) ஆகியவை பெரியவர்களிடையே ஏற்படும் திடீர் மரணங்கள் குறித்து நடத்திய விரிவான ஆய்வுகளை மேற்கோள் காட்டி அமைச்சகம் இந்தக் கூற்றை முன்வைத்தது. சுகாதார மற்றும் குடும்ப நல […]
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் பைக் டாக்ஸி சேவை தொடர்பான முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதல்கள் 2020 இல் புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி இனி மாநில அரசுகள், வெள்ளை போர்டு பைக்களை Rapido, Ola மற்றும் Uber போன்ற பகிரப்பட்ட பயணத்திற்கான அனுமதிக்கும் கட்டமைப்பை வழங்குகிறது. புதிய வழிகாட்டுதல்களின் கீழ், போக்குவரத்து அல்லாத மோட்டார் சைக்கிள்களுக்கு அங்கீகாரம் அளிக்க மாநில அரசுகள் தினசரி, […]
பாலியல் நோக்கம் இல்லாமல் ஒரு பெண்ணிடம் ‘ஐ லவ் யூ’ என்று சொல்வது பாலியல் துன்புறுத்தல் எனக் கருத முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 2015ஆம் ஆண்டு சிறுமியிடம் ஐ லவ் யூ என கூறிய 35 வயது நபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை முதலில் நாக்பூர் நீதிமன்றம் விசாரித்தது. கடந்த 2017ல் போக்சோ சட்டத்தின் கீழ் அந்த நபரைக் குற்றவாளி […]
ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு குவாட் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து குவாட் குழுவின் (அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா) வெளியுறவு அமைச்சர்கள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர். கண்டிக்கத்தக்க செயலுக்கு பின்னால் இருப்பவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தினர். மேலும் “ எல்லை தாண்டிய […]
1990களில் தென்னிந்தியாவில் பல வெடிகுண்டு மற்றும் கொலை வழக்குகளில் தொடர்புடைய தீவிரவாதி அபுபக்கர் சித்திக், 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் திருநெல்வேலியைச் சேர்ந்த முகமது அலியும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை தமிழ்நாடு தீவிரவாத தடுப்பு பிரிவு (ATS) பல மாதங்களாக மேற்கொண்ட தீவிர கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருக்கிறது. இருவரும் தற்போது சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, நீதிமன்றக் காவலில் […]
உத்தரப்பிரதேசத்தில் சாக்கடையில் விழுந்த நாய்க்குட்டியை காப்பாற்றியபோது எதிர்பாராதவிதமாக கடித்ததை அலட்சியமாக விட்டதால் கபடி வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹரில் உள்ள ஃபரானா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரிஜேஷ் சோலங்கி, கபடி வீரரான இவர், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுவருகிறார். இந்தநிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, அதாவது மார்ச் மாதத்தில் அவரது கிராமத்தில் சாக்கடையில் விழுந்த நாய்க்குட்டியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத […]
மத்திய பணியாளர் தேர்வாணையம் பன்முகத் திறன் (தொழில்நுட்பம் அல்லாத) பணி மற்றும் ஹவில்தார் பணிக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பன்முகத் திறன் (தொழில்நுட்பம் அல்லாத) பணியாளர் மற்றும் ஹவில்தார் பணிக்கான தேர்வு 2025 குறித்து மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு நிறுவனங்கள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்களில் பன்முகத்திறன் பணியாளராக […]
இந்தியாவில் பல வரலாற்று கோட்டைகள் உள்ளன, அவற்றில் ஆழமான மர்மங்கள் சூழ்ந்துள்ளன. இங்கு ஆட்சி செய்த மன்னர்கள் தங்கள் ராஜ்யத்தைப் பாதுகாக்க கோட்டைகளைக் கட்டினார்கள். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கோட்டைகளும், தனித்துவமான அம்சங்களையும் வரலாற்றுக் கதைகளையும் பெருமைப்படுத்துகின்றன. மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள முருத் என்ற கடற்கரை கிராமத்தில் இதேபோன்ற ஒரு கோட்டை அமைந்துள்ளது, இது முருத் ஜஞ்சிரா கோட்டை என்று அழைக்கப்படுகிறது . கடல் மட்டத்திலிருந்து 90 அடி […]
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனின் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பக்கவாதம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் இதய நோய் நிபுணர்கள் தலைமையிலான குழு, அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் ரத்த அழுத்தம், சிறுநீரக செயல்பாடு சீராக இல்லை எனவும், […]

