கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்லூரியில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் உள்ள ஒரு சட்டக் கல்லூரிக்குள் ஒரு சட்ட மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் மாணவர் மற்றும் இரண்டு கல்லூரி ஊழியர்களால் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மூவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் ஜூன் 25 ஆம் […]

700க்கும் மேற்பட்ட கிளைகளில் சுமார் 8.5 லட்சம் போலி கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன என்பது சிபிஐ சோதனையில் தெரியவந்துள்ளது. சைபர் மோசடி மற்றும் ‘டிஜிட்டல் கைது’ வழக்குகளை தடுக்கும் வகையில் ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, உத்தரகாண்ட் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள 42 இடங்களில் ஆபரேஷன் சக்ரா-5 என்ற பெயரின் சிபிஐ சோதனை மேற்கொண்டது. போலி வங்கிக் கணக்குகள் மூலம் மக்களை ஏமாற்றிய குற்றவாளிகளின் மறைவிடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. […]

143 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவில், பிறப்புச் சான்றிதழ் என்பது ஒரு குழந்தையின் அடையாளம், குடியுரிமை, கல்வி மற்றும் அரசு சேவைகள் போன்றவற்றிற்கான முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. இந்நிலையில், இந்தியாவின் பதிவாளர் ஜெனரல் (RGI) ஒரு முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளார். ஜூன் 12, 2025 தேதியிட்ட ஒரு அதிகாரப்பூர்வ கடிதத்தில், RGI அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி: “புதிய குழந்தைகளின் பிறப்பை பதிவு செய்யும் நடவடிக்கையை மருத்துவமனையில் இருந்தபடியே முடிக்க, […]

நாடு முழுவதும் இரயில் கட்டணத்தை உயர்த்துவது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை என ரயில்வே இணையமைச்சர் சோமண்ணா விளக்கம் அளித்துள்ளார். நாடு முழுவதும் பொது மக்கள் அதிகமாக ரயில் பயணங்களையே விரும்புகின்றனர். நெடுந்தூரத்தையும் குறைந்த நேரத்தில் கடந்துவிடுவதோடு, பேருந்து கட்டணத்தை விட மிக மிக குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுவதுதான் இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது. மேலும், ரயில்களின் எண்ணிக்கையை மத்திய அரசு அதிகப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன. இந்த […]

மேகாலயாவிற்கு தேனிலவுக்கு சென்ற ராஜா ரகுவன்ஷி என்பவரை அவரது மனைவி சோனம் கொலை செய்த சம்பவத்தை போன்று தெலுங்கானாவிலும் மற்றொரு பயங்கர திட்டமிட்ட கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருமணமாகி ஒரே மாதத்தில் தேதேஸ்வர் என்ற இளைஞரை அவரது மனைவி ஐஸ்வர்யா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த பின்னணி குறித்து பார்க்கலாம். தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தை சேர்ந்தவர் தேஜஸ்வர் (வயது 32) தனியார் […]

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஆறு மாதங்களுக்குப் பிறகு ஜூலை முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் முக்கிய வரி விகித மாற்றங்கள் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 12% ஜிஎஸ்டி வரி அடுக்கை நீக்குவது அல்லது குறைப்பது தொடர்பான விவாதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி, வருமான வரி மற்றும் சுங்கத் துறைகளின் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். […]

தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) பகுப்பாய்வின்படி, கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்திய இளைஞர்களிடையே தற்கொலை தான் இறப்புக்கான இரண்டாவது முக்கிய காரணமாக இருந்து வருகிறது. 2020–2022 காலக்கட்டத்தில் மட்டும் தற்கொலைகள் 17.1% இளம் மரணங்களுக்குக் காரணமாக இருக்கின்றன. இதில் சாலை விபத்துகள் முதல் இடத்தையும் தக்கவைத்துள்ளன. ஆனால், நாட்டின் மொத்த இறப்புகளில் தற்கொலை விகிதம் வெறும் 5% மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகளவில், இளைஞர்களின் மரணத்திற்கு மூன்றாவது பொதுவான […]