ரயில்வே கேட் அமைந்திருக்கும் லெவல் கிராசிங் பகுதிகளில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு 11 முக்கிய நடைமுறைகளை பின்பற்றும் படி இந்திய ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் கடந்த 8-ம் தேதி பள்ளி வாகனம் மீது பாசஞ்சர் ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியம் ஒரு காரணமாக என சொல்லப்படுகிறது. மேலும் இந்த கேட்டில் இன்டர்லாக்கிங் செய்யப்படாமல் இருந்தது மற்றொரு காரணம் அதிகாரிகள் […]

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் தனது தந்தையாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். ராதிகா கொலை குறித்த தகவல்கள் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளன. ஹரியானாவின் குருகிராமில் வசித்து வரும், இந்தியாவின் வளர்ந்து வரும் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் நேற்று கொலை செய்யப்பட்டுள்ளார். ராதிகாவின் தந்தை தீபக் யாதவ் தனது மகளை ரிவால்வரால் சுட்டுக் கொன்று கொடூரமாக கொலை செய்துள்ளார். 25 வயதான இவர், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இந்தியாவுக்காக […]

இந்தியாவில் உயர்நிலைப் பள்ளி கட்டணங்கள் குறித்து CoinSwitch நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆஷிஷ் சிங்கால் கேள்வி எழுப்பி உள்ளார். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது இன்று நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு மிகப்பெரிய பொருளாதார அழுத்தமாக மாறிவிட்டது. CoinSwitch மற்றும் Lemonn நிறுவனங்களின் இணை நிறுவனர் ஆஷிஷ் சிங்கால் சமீபத்தில் ஒரு LinkedIn பதிவில், இந்தியாவில் உயர்நிலைப் பள்ளி கட்டணங்கள் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். அவரின் பதிவில் “ 30% கட்டண […]

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் (25) தனது சொந்த தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் 25 வயதான ராதிகா யாதவ். மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனையான இவர் குருகிராமின் செக்டார் 57 இன் சுஷாந்த் லோக்-கட்டம் 2 இல் உள்ள வீட்டில் ராதிகா தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று நண்பகல் 12 மணியளவில் ராதிகாவை அவரின் தந்தை […]

8வது ஊதியக் குழுவில் ஓய்வூதியதாரர்களின் நிலையான மருத்துவ கொடுப்பனவை ரூ. 1,000 இலிருந்து ரூ. 3,000 ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனவரி மாதம் 8வது ஊதியக் குழு அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய உயர்வு குறித்து பல ஊகங்கள் எழுந்துள்ளன. இருப்பினும், இப்போது கவனம் சம்பளத்தில் மட்டுமல்ல, […]

அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்ய திட்டமிட்டுள்ளேன் என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் நடந்த ‘சஹ்கார் சம்வாத்’ நிகழ்ச்சியில் பேசிய அவர், பொது வாழ்க்கையிலிருந்து விலகியவுடன், இயற்கை விவசாயத்தில் கவனம் செலுத்தவும், வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் போன்ற இந்து நூல்களைப் படிக்க அதிக நேரம் செலவிடவும் விரும்புவதாகக் கூறினார். இயற்கை வேளாண்மை என்பது ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் மிகவும் உதவியாக இருக்கும் ஒரு […]

டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். டெல்லி-என்சிஆரில் இன்று காலை 9.04 மணியளவில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நொய்டா, குருகிராம், ஃபரிதாபாத் மற்றும் அருகிலுள்ள பிற பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஹரியானாவின் ஜஜ்ஜாரிலிருந்து வடகிழக்கே 4 கிமீ தொலைவில் இருந்தது மற்றும் 14 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் அளவு […]