விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டியிலிருந்து தரவுகள் மீட்டெடுக்கப்பட்டு பதிவிறக்கம் செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே உள்ள ஒரு சில நிமிடங்களிலேயே மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் உட்பட 270 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் இருந்த ஒரே […]

அமர்நாத் யாத்திரைக்கு ஒரு வாரம் முன்னதாக, இன்று ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை ஏற்பட்டது. ஆபரேஷன் பிஹாலி என்ற குறியீட்டு பெயரிடப்பட்ட இந்த என்கவுண்டர் பற்றிய தகவலை பாதுகாப்புப் படையினர் பகிர்ந்து கொண்டனர், இந்த நடவடிக்கை தற்போது பிஹாலி பகுதியில் நடந்து வருவதாகக் கூறினர். எனவே இந்த இடத்தின் பெயரே இந்த நடவடிக்கைக்கு பெயரிடப்பட்டது. ராணுவம் மற்றும் காவல்துறையினரின் கூட்டு நடவடிக்கையின் இந்த […]

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதல் பற்றி எதுவும் இல்லாததால், கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுப்பு. சீனாவின் கிங்டாவோ நகரில் நடைபெற்ற SCO (Shanghai Cooperation Organisation) பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து எந்தவொரு குறிப்பும் இல்லாததை தொடர்ந்து, இந்தியா கூட்டறிக்கையில் கையெழுத்திட மறுத்துள்ளது. இந்த மாநாட்டில், இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இந்திய பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் […]

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம், ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறுவதற்கான காப்பீட்டை மத்திய அரசு வழங்குகிறது. இந்தியாவில் மருத்துவ செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, குறிப்பாக தனியார் மருத்துவமனைகளைச் சார்ந்திருப்பவர்களுக்கு அல்லது நாள்பட்ட நோய்களை நிர்வகிப்பவர்களுக்கு மருத்துவ செலவுகள் குறிப்பிடத்தக்க நிதிச் சுமையை ஏற்படுத்துகின்றன. இந்தச் சிரமத்தைக் குறைக்க, இந்திய அரசு ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா […]

உத்தரகாண்டின் கோல்திர் பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் மாயமாகி உள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டத்தின் கோல்திர் பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து அல்கநந்தா ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், சுமார் 7 பேர் காயமடைந்துள்ளனர், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். கர்வால் பிரிவு ஆணையர் வினய் சங்கர் பாண்டே […]

பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார். சீனாவின் கிங்டாவோவில் இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்றும், SCO உறுப்பினர்கள் பயங்கரவாதத்தைக் […]

முஸ்லிம் பெண்கள் குலா மூலம் தங்கள் திருமணத்தை முடிக்க முழு மற்றும் நிபந்தனையற்ற உரிமையைக் கொண்டுள்ளனர் என்று தெலுங்கானா உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பில் கூறியுள்ளது. மேலும், இதற்கு கணவரின் ஒப்புதல் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்லது. குலா என்பது இஸ்லாமிய சட்டத்தின் கீழ் விவாகரத்து செய்யும் ஒரு வடிவமாகும், குலா (Khul’) என்பது இசுலாம் சமயத்தில் கணவனுடன் சேர்ந்து வாழ மனைவிக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் மனைவி கணவனை திருமண முறிவு […]

2026ம் கல்வியாண்டில் இருந்து 10ம் வகுப்பு வாரியத் தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) அறிவித்துள்ளது. தேசிய கல்விக்கொள்கை 2020 அடிப்படையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வை பயமின்றி எழுதும் வகையில் பொதுதேர்வு நடைமுறையில் மாற்றம் கொண்டு வரும் வகையில் ஒரு வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், 10ம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்தலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. […]

திருமணம் செய்து கொண்ட திருநங்கைக்கு குடும்ப வன்முறை புகார் அளிக்க உரிமை உண்டு என்று ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 498A இன் கீழ், ஒரு பெண் தனது கணவர் அல்லது கணவரின் உறவினர்களால் வன்முறைக்கு ஆளானால் புகார் அளிக்க உரிமை உண்டு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருநங்கைகளுக்கு அத்தகைய பாதுகாப்பு பொருந்தாது என்ற வாதத்தை நீதிபதி வெங்கட ஜோதிர்மயி பிரதாபா […]

சென்னையைச் சேர்ந்த 30 வயது ரோபாட்டிக்ஸ் என்ஜினியர் ஒருவர், 11 மாநிலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட ரெனே ஜோஷ்லிடா என்ற பெண் பல போலி இமெயில் ஐடிகளை உருவாக்கி, பல மாதங்களாக ரகசியமாக இருக்க VPNகள் மற்றும் டார்க் வெப்களைப் பயன்படுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தனது முன்னாள் சக ஊழியர் ஒருவரை சிக்க வைப்பதற்காக அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர்.. ரெனே […]