8வது ஊதியக் குழுவில் ஓய்வூதியதாரர்களின் நிலையான மருத்துவ கொடுப்பனவை ரூ. 1,000 இலிருந்து ரூ. 3,000 ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனவரி மாதம் 8வது ஊதியக் குழு அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய உயர்வு குறித்து பல ஊகங்கள் எழுந்துள்ளன. இருப்பினும், இப்போது கவனம் சம்பளத்தில் மட்டுமல்ல, […]

அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்ய திட்டமிட்டுள்ளேன் என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் நடந்த ‘சஹ்கார் சம்வாத்’ நிகழ்ச்சியில் பேசிய அவர், பொது வாழ்க்கையிலிருந்து விலகியவுடன், இயற்கை விவசாயத்தில் கவனம் செலுத்தவும், வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் போன்ற இந்து நூல்களைப் படிக்க அதிக நேரம் செலவிடவும் விரும்புவதாகக் கூறினார். இயற்கை வேளாண்மை என்பது ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் மிகவும் உதவியாக இருக்கும் ஒரு […]

டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். டெல்லி-என்சிஆரில் இன்று காலை 9.04 மணியளவில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நொய்டா, குருகிராம், ஃபரிதாபாத் மற்றும் அருகிலுள்ள பிற பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஹரியானாவின் ஜஜ்ஜாரிலிருந்து வடகிழக்கே 4 கிமீ தொலைவில் இருந்தது மற்றும் 14 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் அளவு […]

கேரளாவின் கல்வி துறையில் மாற்றத்தைத் தூண்டும் வகையில் இயக்குநர் வினேஷ் விஸ்வநாத் இயக்கிய திரைப்படம் ‘ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்’ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் சுயாட்சி தேர்தலையும், சமூக அடையாள வேறுபாடுகளை நீக்கும் முயற்சியையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம், சினிமாவை தாண்டி கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அந்த படத்தில் ஒரு வகுப்பறை காட்சி மிகுந்த கவனத்தை ஈர்த்தது. அந்த வகுப்பில் மாணவர்கள் அரை வட்டமாக அமர்ந்திருக்க, […]

தானேவில் மாணவிகளுக்கு மாதவிடாய் சோதனை செய்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தனியார் பள்ளி முதல்வர் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில், ஷாஹாபூரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தநிலையில் கடந்த செவ்வாய் கிழமை அன்று காலையில், பள்ளியின் கழிவறையில் ரத்தக் கறை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், 5 முதல் […]

மதம் மாறாத ஆத்திரத்தில் லக்னோ லுலு மாலில் பணிபுரியும் பெண் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளம்பெண், லக்னோவில் உள்ள லுலு மாலில் பணிபுரிந்து வருகிறார். அதே மாலில் அயோத்தியில் உள்ள கோசியானா பஹர்கஞ்ச் ராம்நகரைச் சேர்ந்த மேற்பார்வையாளராக பர்ஹாஸ் (Farhaz) என்பவரும் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்திய […]