சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.. அந்த வகையில் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சாலையோர கடை உணவு விற்பனையாளர் சீல் செய்யப்பட்ட எண்ணெய் பாக்கெட்களை நேரடியாக கொதிக்கும் எண்ணெயில் போடுவதைக் காணலாம். பிளாஸ்டிக் மென்மையாகி உடைந்தவுடன், எண்ணெய்யை நேரடியாக பாத்திரத்தில் ஊற்றுகிறார். பஞ்சாபின் லூதியானாவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.. பஜ்ஜி தயாரித்துக்கொண்டிருந்த விற்பனையாளர், எண்ணெய் பாக்கெட்டை எளிதாகத் […]

அமலாக்கத்துறை வஞ்சக எண்ணத்துடன் செயல்பட முடியாது என்று உச்சநீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.. அமலாக்கத்துறையின் (ED)சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகள், கைதுகள், சொத்துக்கள் பறிமுதல் ஆகியவற்றை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிமன்றம் அமலாக்கத்துறையை கடுமையாக சாடி உள்ளது.. இசிஐஆர் எனப்படும், அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்படும் எஃப்.ஐ.ஆர், 5000 பதிவு செய்யப்பட்டுள்ளது.. ஆனால் உங்களால் 10% பேருக்கு மட்டுமே தண்டனை வாங்கி […]

உத்தரகாண்ட் மாநிலம், தாராலியில் கடந்த 5 ஆம் தேதி திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உத்தர்காஷி பேரழிவிற்கு உள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்த நிலையில், பல வீடுகள், ஹோட்டல்கள் ஆகியவை நீரில் அடித்து செல்லப்பட்டன.. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.. இந்த நிலையில் வெள்ளத்தில் காணாமல் போன தங்கள் மகனுடனான கடைசி உரையாடல் குறித்து ஒரு தந்தை உருக்கமாக பேசி உள்ளார்.. நேபாளத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களான காளி […]

இந்தியாவில் கச்சா எண்ணெய் விலைக்கும் சில்லறை எரிபொருள் விலைக்கும் இடையிலான கூர்மையான வேறுபாடு ஒரு முக்கியமான கேள்வியை எடுத்துக்காட்டுகிறது.. குறிப்பாக ரஷ்யாவிலிருந்து கிடைக்கும் எண்ணெய் இறக்குமதியில் இருந்து உண்மையில் யார் பயனடைகிறார்கள்? என்பது தான் மிகப்பெரிய கேள்வி.. 2014 க்கு முன்பு, உலகளாவிய கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 110 டாலராக இருந்தன. அப்போது இந்தியாவில் பெட்ரோல் விலை சராசரியாக லிட்டருக்கு ரூ.70-72 ஆக இருந்தது. இன்று, கச்சா எண்ணெய் […]

மூத்த குடிமக்களுக்கு தங்குமிடம், ஊட்டச்சத்து, மருத்துவ உதவிகள் உள்ளிட்ட வசதிகளை கட்டணமின்றி மத்திய அரசு அளித்து வருகிறது. தேசிய மக்கள் தொகை ஆணையம் அமைத்துள்ள மக்கள் தொகை கணிப்புகள் குறித்த தொழில்நுட்ப குழுவின் அறிக்கையின்படி 2011-ம் ஆண்டு முதல் 2036-ம் ஆண்டுக்கு இடையேயான காலகட்டத்தில் மொத்த மக்கள்தொகையில் மூத்த குடிமக்கள் (60 வயது மற்றும் அதற்கு மேல்) விகிதம் 2011-ம் ஆண்டில் 10 கோடியாக அதிகரித்த நிலையில், 2036-ம் ஆண்டில் […]

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான என்கவுன்டர் ஏழாவது நாளாக தொடர்கிறது. இதுவரை ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளான் மற்றும் நான்கு ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தின் அகல்-தேவ்சர் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏழாவது நாளாக தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. இந்தநிலையில், நேற்று புதன்கிழமை (ஆகஸ்ட் 6, 2025) இரவு முழுவதும் கடுமையான துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு நாள் முழுவதும் […]

பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து எந்த அரசியல் கட்சியும் இதுவரை ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஆகஸ்ட் 6-ம் தேதி அன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து இதுவரை எந்தவொரு அரசியல் கட்சியும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்றும், உரிமை கோரல் தொடர்பான எவ்வித மனுவும் பெறப்படவில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. […]