பிரதமர் மோடியின் விமர்சகர் என்று அறியப்படும் முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து பாஜகவும், மோடியையும் விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்த விவாதத்தில் பிரதமர் மோடி பேசியதை சுப்பிரமனியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுப்பிரமணிய சுவாமி “ மோடி ஒரு மூளை வளர்ச்சி இல்லாதவர். வீரர்களையும் சில ஜெட் விமானங்களையும் […]

இந்தியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் தெரிவித்துள்ளது.. ரஷ்யாவில் இன்று காலை ஏற்பட்ட சக்திய்வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்பட்டது.. ரஷ்யாவின் கம்சட்காவின் கிழக்கு கடற்கரையில் இன்று அதிகாலையில் 8.8 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால், வீடுகளில் இருந்து அலறியடித்துக் கொண்டு பொதுமக்கள் வெளியேறினர். ரஷ்யாவின் வரலாற்றில் கடந்த 70 ஆண்டுகளில் பதிவான மோசமான […]

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் இருந்து 6.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐ பிஎல் 2025 ஜெர்சிகள் திருடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக 40 வயதுடைய பாதுகாப்புக் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட காவலர் ஃபரூக் அஸ்லம் கான், 261 ஜெர்சிகளைத் திருடிச் சென்றதாகவும், ஒவ்வொன்றும் சுமார் […]

வயிற்றில் வாயு மற்றும் எரிச்சல் தொடர்பான பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படும் Ranitidine என்ற மருந்தில் புற்றுநோயை உண்டாக்கும் கூறுகள் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக மத்திய மருந்து தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு (Central Drugs Standard Control) எச்சரிக்கை விடுத்துள்ளது. நம்முடைய வீட்டில் வைத்திருக்கும் மருந்துகளை சிறிய உடல் நல பிரச்சனைகளுக்கு பயன்படுத்துவது பலமுறை நடக்கிறது. ஆனால் இதைச் செய்வது எவ்வளவு ஆபத்தானது தெரியுமா?. இதுபோன்ற சூழ்நிலையில், வீட்டில் வைத்திருக்கும் எந்தவொரு மருந்தையும் […]

வருமான வரி மசோதா, 2025 தற்போதுள்ள வரி விகிதங்களில், குறிப்பாக நீண்டகால மூலதன லாப வரி (Long-Term Capital Gains – LTCG) தொடர்பான வரி விகிதங்களில் எந்தவித மாற்றங்களும் முன்மொழியப்படவில்லை என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. நிதி ஆண்டிற்கான புதிய வரி விதிகள் படி, 2025-26 ஆண்டுக்கான வருமான வரி தாக்கலில், நீண்டகால லாபங்களுக்கு (LTCG) சில முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி உங்கள் நீண்டகால முதலீட்டிற்கு […]

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில், பணியில் இருந்த மருத்துவர் தூங்கிக் கொண்டிருந்ததால், சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்ததாக வீடியோ வைரலாகி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த திங்கள் கிழமை மாலை விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் சுனில் என்பவர் லாலா லஜபதி ராய் நினைவு (LLRM) மருத்துவக் கல்லூரியின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, […]

நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடந்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று மக்களவையில் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ பயங்கரவாதத்தை மண்ணோடு மண்ணாக ஒழித்துக் கட்டுவோம்.. பயங்கரவாதிகளே யோசிக்காத அளவுக்கு தண்டனை வழங்கப்படும்.. பயங்கரவாததை ஒழிப்பது என்பது நாங்கள் தேசத்திற்கு அளித்த வாக்குறுதி.. அந்த வாக்குறுதி ஆபரேஷன் சிந்தூர் மூலம் நிறைவேற்றப்பட்டது..” என்று தெரிவித்தார். சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவின் பக்கத்தைப் பார்க்க முடியாதவர்களுக்கு ஒரு […]