2008 ஆம் ஆண்டு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவிக்க உள்ளது, இதில் முன்னாள் பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகானில் நெரிசலான பகுதியில் ஒரு பைக்கில் கட்டப்பட்டிருந்த குண்டு வெடித்தில் 6 பேரு உயிரிழந்தனர்.. 101 பேர் காயமடைந்தனர்.. கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் […]

2026 பத்ம விருதுகளுக்கு பரிந்துரை செய்ய ஆகஸ்ட் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 2026 குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் பத்ம விருதுகள்-2026க்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பது 2025, மார்ச் 15 அன்று தொடங்கியது. பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை அனுப்புவதற்கு ஆகஸ்ட் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் தேசிய விருது இணையதளம் (https://awards.gov.in) வாயிலாக மட்டுமே பெறப்படும். பத்ம விபூஷன், பத்ம பூஷன், […]

இந்தியாவில் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது சர்வ சாதாரணமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளில், பனீரில் கலப்படம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவது தொடர்பான ஏராளமான வழக்குகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. பனீர் அதிக அளவில் உட்கொள்ளப்படுவதால், அதன் தேவை அதிகமாக உள்ளது. இதனால்தான் போலி பனீர் தயாரிப்பும் அதிகரித்துள்ளது. நாட்டில் உணவுப் பொருட்களின் தரத்தை கண்காணிக்கும் அமைப்பான FSSAI, கடந்த ஒரு வாரத்தில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் […]

வரும் 01.09.2025 முதல் ஸ்பீட் போஸ்ட் ( விரைவு அஞ்சல்) மூலம் தான் அனுப்ப வேண்டும். பதிவு செய்யப்பட்ட அஞ்சல் சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1 முதல், தபால் துறை, செயல்பாடுகளை நெறிப்படுத்தவும் செயல்திறனை மேம்படுத்தவும், விரைவு அஞ்சல் மற்றும் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் சேவைகளை நினைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முக்கிய பதிவு செய்யப்பட்ட அஞ்சல் அம்சங்களைச் சேர்ப்பதற்கும் கட்டணங்களில் திருத்தம் செய்வதற்கும் வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். […]

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 அப்பாவி மக்களைக் கொன்ற மூன்று பயங்கரவாதிகள், ஆபரேஷன் மகாதேவ் திட்டத்தின் கீழ் நடந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டதாகவும், தாக்குதலில் அவர்களின் தொடர்பு அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் தெரிவித்தார். பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட வலுவான, வெற்றிகரமான மற்றும் தீர்க்கமான ஆபரேஷன் சிந்தூர் குறித்த மாநிலங்களவையில் சிறப்பு விவாதத்தில் ஷா இவ்வாறு கூறினார். இதனுடன், […]

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, எல்லையோர மாவட்டமான பூஞ்சில் பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் பெற்றோரை இழந்த 30 குழந்தைகளை தத்தெடுத்த ராகுல்காந்தி, அவர்களின் கல்வி மற்றும் பராமரிப்பு செலவுகளை ஏற்றுக்கொண்டுள்ளார். ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் எல்லையைத் தாண்டி பயங்கரவாத உள்கட்டமைப்பு மீது இந்திய ஆயுதப் படைகள் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் […]

மத்தியப் பிரதேசத்தின் கட்னி மாவட்ட மருத்துவமனையில் இருந்து ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. ஒரு நகராட்சி குப்பை வாகனத்தில் சடலம் கொண்டு செல்லப்படுவதை அதில் பார்க்க முடிகிறது.. குத்லா காவல் நிலையப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 72 மணி நேரத்திற்குப் பிறகு அடையாளம் காணப்படாத இந்த உடல், தகனத்திற்காக அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.. முறையான சவ வாகனம் அல்லது ஆம்புலன்ஸ் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இரும்பு கம்பியால் இழுத்துச் செல்லப்பட்டு குப்பை வண்டியில் ஏற்றப்பட்டது. […]