படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு ரூ.66,000 வழங்கும் இந்த அரசு திட்டம் பற்றி தெரியுமா? இந்தியாவின் வேலையில்லாத இளைஞர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய முன்னெடுப்பாக மத்திய அரசு PM இன்டர்ன்ஷிப் திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ரூ.66,000 நிதி உதவியை வழங்குகிறது. இந்த ஊதியத்துடன் கூடிய இன்டர்ன்ஷிப் திட்டம், படித்த ஆனால் வேலையில்லாத நபர்களுக்கு பல்வேறு துறைகளில் நேரடி அனுபவத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, அதே […]

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 65 முறை விமான எஞ்சின் செயலிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், 11 MAYDAY அவசர அழைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகதிடம் (DGCA) இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் 2020 முதல் 2025 வரை, 65 விமான எஞ்சின்கள் செயலிழந்த சம்பவங்களும், 11 ‘மேடே’ அழைப்பு சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இந்த 65 […]

சுங்கக் கட்டணத்தை பாதியாக குறைக்க சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முன்மொழிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய நேடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு சுங்கக்கட்டணம் பெரும் தலைவலியாக உள்ளது. நீண்ட தூர பயணங்களில் ஒவ்வொரு சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.. அவ்வப்போது அரசு இந்த சுங்கக்கட்டணங்களை உயர்த்தி வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.. இந்த நிலையில் வாகன ஓட்டிகளுக்கு ஒரு குட்நியூஸ் வந்துள்ளது.. சுங்கக் கட்டணத்திலிருந்து நிவாரணம் அளிக்க […]

கடந்த ஜூன் 12ம் தேதி AI171 விமானம் விபத்துக்குள்ளான பிறகு செயல்படுத்தப்பட்ட ‘பாதுகாப்பு இடைநிறுத்தத்திற்குப் பிறகு, ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஏர் இந்தியா தனது சர்வதேச விமான சேவைகளை ஓரளவு தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு இடைநிறுத்தத்தின் போது, முழுமையான பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஏர் இந்தியா தனது போயிங் 787 விமானங்களை கூடுதல் சோதனைகளை மேற்கொண்டது. மேலும், பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு வழியாக விமான வழித்தடங்கள் […]

சமோசா, ஜிலேபி மற்றும் லட்டு போன்ற உணவுப் பொருட்களில் எச்சரிக்கை லேபிள் இருக்க வேண்டும் என்று உத்தரவிடவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது இனி சமோசா, ஜிலேபி, லட்டு, பக்கோடா ஆகிய சிற்றுண்டிகளுக்கும் சிகரெட்டை போல எச்சரிக்கை லேபிள் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியதாக நேற்று ஊடகங்களில் தகவல் வெளியானது.. அதாவது இந்த சிற்றுண்டிகளில் உடல்நலத்திற்கு கேடு என எச்சரிக்கை வாசகம் இடம்பெறும் […]

இந்திய ராணுவம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு லக்னோ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான 2022 ஆம் ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரையின் போது இந்திய ராணுவத்தைப் பற்றி அவதூறான கருத்துக்கள் தெரிவித்ததாக சர்ச்சை எழுந்தது.. அப்போது கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல் குறித்து பேசிய அவர், “சீனப் படைகள் நமது வீரர்களைத் தாக்குகின்றன, அதைப் பற்றி யாரும் கேள்வி கேட்கவில்லை” […]