மணிப்பூரில் வன்முறை பதற்றம் நிலவுவதால், அடுத்த ஆண்டு பிப்ரவரி 13ம் தேதிவரை குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிள்ளது. மணிப்பூரில் மே 2023 முதல் மெய்தி மற்றும் குக்கி-ஜோ சமூகங்களிடையே இனக்கலவரம் நடந்து வருகிறது. இதில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி 13 அன்று பாஜக முதலமைச்சர் பைரன் சிங் ராஜினாமா செய்த பிறகு மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பாராளுமன்ற […]

இந்திய பிரதமராக தொடர்ச்சியாக அதிக நாட்கள் பணியாற்றியவர்களில், இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்து நரேந்திர மோடி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். மூன்று பதவிக் காலங்களாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று இன்றுடன் 4,078 நாட்கள் நிறைவடைகிறது. அதனடிப்படையில் இந்திய பிரதமராக தொடர்ச்சியாக அதிக நாட்கள் பணியாற்றியவர்களில், இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்து நரேந்திர மோடி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அதாவது, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1964 முதல் […]

மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோர்களின் உடல்நிலையை கவனிக்க 30 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெற்றோர்களை கவனிக்க அரசு ஊழியர்கள் விடுப்பு எடுக்க ஏதேனும் வழிமுறை உள்ளதா என்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்; மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு, 20 நாட்கள் அரைச் சம்பள விடுப்பு, 8 நாட்கள் தற்செயல் […]

புதிய தேசிய கூட்டுறவு கொள்கையை வெளியிட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, 50 கோடி குடிமக்களை செயலில் உள்ள கூட்டுறவு உறுப்பினர்களாக மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ளதாகக் கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை (ஜூலை 25) புதிய தேசிய கூட்டுறவு கொள்கை 2025 ஐ வெளியிட்டார். முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் 48 உறுப்பினர்களுடன் அனைத்து பங்குதாரர்களுடனும் பேசி இந்தக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தக் […]

இந்தியாவில் விமானப் பயணங்களில்போது ஏற்படும் தொடர் தொழில்நுட்பக் கோளாறுகள் குறைந்தபாடில்லை. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை (ஜூலை 2025) நாட்டின் பல்வேறு விமான நிறுவனங்களிலிருந்து 2000க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதாக DGCA-விடம் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான தகவலை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பி.க்களின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த புள்ளிவிவரங்களில் மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், ஏர் இந்தியா […]