குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசிக்கும் 45 வயது பெண் ஒருவர் வீட்டில் அதிர வைக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இவரது வீட்டில் சில காலமாகவே சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் இருந்து வந்துள்ளது. சமையல் அறையில் இருந்த சர்க்கரை பெட்டியில் யாரோ பூச்சி மருந்தை கலந்து வைத்துள்ளனர். அதேபோல, பாத்ரூமில் வழுக்கி விழும் விதமாக அங்கு அடிக்கடி தரை சுத்தம் செய்யும் திரவம் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. இது அந்த பெண்ணுக்கு அச்சத்தை ஏற்படுத்திய […]

உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டாவைச் சேர்ந்த 35 வயதான பல்வந்த் சிங் என்பவர் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தின் குல்ஹாரியாவில் உள்ள சுங்கச்சாவடியில் பணியாற்றி வந்தார். சுங்கக் கட்டணத்தில் பல்வந்த் சிங் 50 ரூபாய் திருடியதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, அந்த இளைஞரை சக பணியாளர்களும், பவுன்சர்களும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த பல்வந்த் சிங், சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், […]

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தமிழகத்தைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் ராணுவ மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜூன் 16ஆம் தேதி பாட்டியாலாவிலிருந்து சங்கரூருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, பக்ரா கால்வாயில் ஒரு பெண் தவறி விழுந்து நீரில் மூழ்கி கொண்டிருப்பதைக் கண்டார். அப்போது அங்கிருந்த யாரும் காப்பாற்ற முன்வராத நிலையில், வேகமாக தண்ணீர் ஓடும் கால்வாயில் குதித்த ராணுவ வீரர் நவநீதகிருஷ்ணன் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் துணிச்சலாக நீரில் […]

பூமியின் சொர்க்கம்’ என்று புகழப்படும் மணிப்பூர்தான், இன்று புகை மண்டலமாய்க் காட்சி தந்துகொண்டிருக்கிறது. இடஒதுக்கீடு தொடர்பாக மெய்டீஸ் இன மக்களைப் பழங்குடியினர் பட்டியலில் இணைத்தால் தங்களுக்கான இடஒதுக்கீடு அவர்களால் பறிக்கப்படும்; அவர்கள் தாங்கள் வசிக்கும் மலைப்பகுதிகளில் நிலங்களைக் கையகப்படுத்தி தங்களை வெளியேற்றக் கூடும் என குக்கி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மணிப்பூரில் ’குக்கி’ என்ற பழங்குடியினத்தவருக்கும், பள்ளத்தாக்குப் பகுதிகளில் வசிக்கும் ’மெய்டீஸ்’ என்ற பழங்குடியினர் அல்லாதவர்களுக்கும் இடையே கடந்த […]

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் தரவுகளை கசியவிட்டதாக பீகாரில் சுகாதார ஊழியர் ஒருவரின் மகனை டெல்லி உளவு பிரிவு போலீஸ் கைது செய்துள்ளது. இந்தியாவில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கியது. தடுப்பூசி செலுத்தும் பணியை சிறப்பாக கையாளவும் யாரும் விடுபடாத வகையில் பணிகளை மேற்கொள்ளும் விதமாகவும் கோவின் (CoWIN) செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த செயலில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள் ஆதார் எண், […]

எதிர்வரும் 2024 ஆம் வருடம் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொது தேர்தலை எதிர் கொள்வதற்கு ஆதம் பாஜக தற்போதைய தயாராகிவிட்டது. அதற்கான வேலைகளையும் தொடங்கி விட்டது என்று நான் சொல்ல வேண்டும் மேலும் இந்த முறையும் பிரதமர் நரேந்திர மோடி தான் என பாஜக தரப்பில் பட்டி, தொட்டி எங்கும் இப்போது இருந்து பிரச்சாரம் தொடங்கி விட்டது. ஒருபுறம் பாஜக சுறுசுறுப்பாக நாடக மன்ற வேலைகளை தொடங்கி செய்து கொண்டிருக்கிற […]

தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக மிகப்பெரிய அரசியலை முன்னெடுத்து வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் அதற்காக பாஜகவிற்கு எதிரான பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியிலும், அவர் ஈடுபட்டு வருகிறார். மேலும் இந்த முயற்சியில் பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதீஷ் குமாரும் ஈடுபட்டு வருவதால் அவருடன் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கைகோர்த்துள்ளார். அதன் ஒரு பகுதியாக பீஹார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுக் […]

‘திருமணமான பெண்ணை ஏமாற்றுவது குற்றம் ஆகாது’ என கர்நாடகா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் பிரஜித். இவருக்கு வயது 28. இந்நிலையில், பிரஜித்துக்கு திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கிப் பழகியுள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக கூறி, அந்த பெண்ணுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர், வெளிநாட்டில் வேலை கிடைத்ததும், அந்த பெண்ணுடன் இருந்த உறவை பிரஜித் முறித்துக் கொண்டார். இதனால், பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த […]

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நகர காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றியவர் சிவகுமார். இவர் மீது போக்சோ வழக்கை தவறாக கையாண்டது, காவல் நிலையத்தில் தொடர்ச்சியாக கையெழுத்து போட வேண்டிய குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டது, கஞ்சா வழக்கில் குற்றவாளிகளை விடுவித்தது என்று பல்வேறு புகார்கள் எழுந்தனர். இந்த குற்றச்சாட்டுகளில் ஆதாரங்களின் அடிப்படையில், இவர் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், இவர் மீது துரை ரீதியான விசாரணை நடந்தது அந்த […]

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரைச் சேர்ந்தவர் பூனம் குமாரி. 27 வயதான இவர், தன்னுடைய கல்லூரித் தோழியான 25 வயதுடைய பிரீத்தி சாகரைக் காதலித்து வந்துள்ளார். அதாவது, இவர்கள் இருவரும் தன்பாலின ஈர்ப்பாளர்கள். இந்நிலையில், பிரீத்திக்கு அவரது வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளது. ஆனால், பூனம் குமாரி நினைவு காரணமாக திருமண ஏற்பாடுகளைத் தட்டிக் கழித்து வந்துள்ளார் பிரீத்தி. ஒருகட்டத்தில் பூனம் குமாரி மற்றும் பிரீத்தி சாகர் இருவருக்கும் இடையே […]