தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. முக்கிய அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன.. அதன்படி தமிழக பாஜக சமீபத்தில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு 72 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.. அதன்படி 6 தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டர்.. அண்மையில், பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து அவர் அதிரடியாக விலகியது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை […]

தமிழகத்தை பொறுத்த வரை ஆட்சியில் பங்கு என்பது ஒத்துவராது என்று முதல்வர் ஸ்டாலில் தெரிவித்துள்ளார்.. இந்தியா டுடே கருத்தரங்கில் பேசிய முதல்வர் இந்த தகவலை தெரிவித்தார்.. மேலும் திமுகவும், காங்கிரஸும் இணைந்து தான் தேர்தலை சந்திக்கும் எனவும் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.. அரசியலை தாண்டி ராகுல்காந்தி தனது சகோதரர் போன்றவர் என்று முதல்வர் தெரிவித்தார்.. மேலும் “ ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை தற்போது எழவே இல்லை.. அது […]

தமிழ்நாட்டில் நிலவும் பறவைக் காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்த கருத்துக்கள், சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பிய நிலையில், அதற்கு அவரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ‘ஹாஃப்-பாயில்’ சாப்பிட வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தியது முட்டையை குறிப்பிடுவதாகப் பரவலாக புரிந்துகொள்ளப்பட்டது. ஆனால், தனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக அமைச்சர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பறவைகள் அல்லது […]

திமுகவின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 87 வயதை கடந்த நிலையில், வயது மூப்பு சார்ந்த உடல்நலப் பிரச்சனைகளை சந்தித்து வரும் அவர், நேற்று (பிப்ரவரி 10) எதிர்பாராத விதமாக தனது இல்லத்தில் தவறி விழுந்துள்ளார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் விழுந்ததில் ஏற்பட்ட காயங்களுக்கு […]

கரூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் பேசிய சாட்டை துரைமுருகன், 41 உயிர்கள் பறிபோவதற்குக் காரணமானவர்களை முதல் தகவல் அறிக்கையில் (FIR) சேர்க்காமல் கரூர் காவல்துறை மெத்தனமாக செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். “நிஜமான துணிச்சல் இருந்திருந்தால், அந்தத் துயரச் சம்பவத்தின்போது விஜய் கரூரை விட்டு ஓடியிருக்கக் கூடாது” என்று கூறிய அவர், […]

தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத ஒரு திருப்பமாக, அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இந்நிலையில், தனது நீண்டகால அரசியல் சகாவான செங்கோட்டையனின் இந்த முடிவை, அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மிகுந்த மனவேதனையுடனும், அதேசமயம் கடும் விமர்சனங்களுடனும் சாடியுள்ளார். திண்டுக்கல் சீனிவாசன் இது குறித்துப் பேசுகையில், “அதிமுகவில் அமைச்சராகவும், கட்சியின் அசைக்க முடியாத தூணாகவும், எப்போதும் முதலிடத்தில் இருந்தவர் […]

தமிழக அரசியல் களம் 2026 தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், திமுகவின் சீனியர் அமைச்சர்களில் ஒருவரான கே. ராஜகண்ணப்பன் பேசிய பேச்சு, தற்போதைய கூட்டணியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய அவர், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை மிக கடுமையாகச் சாடியுள்ளார். அமைச்சரின் இந்தப் பேச்சு, குறிப்பாக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையையும், சமீபகாலமாக ‘ஆட்சியில் பங்கு’ கேட்டு […]

தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்காக தயாராகி வருகின்றனர். வழக்கமாக மே மாதத்தில் நடைபெறும் தேர்தல், இந்த ஆண்டு ஒரு மாதம் முன்னதாகவே, அதாவது ஏப்ரல் மாதத்திலேயே நடத்தி முடிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிகின்றன. இதற்கு வலுசேர்க்கும் விதமாக, சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் […]

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் பரபரப்பு இப்போதே பற்றிக்கொண்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது. இந்நிலையில், தேர்தலை எவ்விதப் புகாருக்கும் இடமின்றி, வெளிப்படைத்தன்மையுடன் நடத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. தேர்தல் பணிகளில் உள்ளூர் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் […]

தமிழக அரசியல் களத்தில் தொகுதிப் பங்கீடு விவகாரம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, திமுக கூட்டணியில் நிலவும் இழுபறி நிலைக்கு மத்தியில், டெல்லியில் இன்று (பிப்ரவரி 10) ராகுல் காந்தி தலைமையில் நடைபெறவுள்ள ஆலோசனை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் பங்கேற்கும் இந்தச் சந்திப்பில், திமுகவுடனான தற்போதைய கூட்டணிச் சிக்கல்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. காங்கிரஸ் தரப்பில் இந்த […]