தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களைப் பெற அசல் ரேஷன் அட்டையை கையில் வைத்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என்றும், கார்டின் மென்பொருள் நகல் (Soft copy) அல்லது அட்டை எண் இருந்தாலே போதுமானது என்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்குப் பதிலளித்து பேசிய அமைச்சர், மாநிலம் முழுவதும் தற்போது […]

மேகதாது அணை திட்டம் கர்நாடகாவுக்கானது அல்ல, அது தமிழ்நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டும் பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை முன்னிறுத்தியுமே திட்டமிடப்பட்டுள்ளது என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற 31-வது தென்மண்டல கவுன்சில் கூட்டத்தின் நிறைவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாதுவில் அணை கட்டப்படுவதன் மூலம் கர்நாடகாவிற்கு வெறும் 5 டிஎம்சி குடிநீர் மட்டுமே பயன்படுத்தப்படும் […]

சென்னையை அடுத்த கோவளத்தில் நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் மாநாட்டின் நிறைவுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் நிர்மல்குமார், தொகுதி மறுவரையறை, முல்லைப் பெரியாறு மற்றும் காவிரி விவகாரங்கள் குறித்து தமிழக அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். தென் மாநில முதல்வர்கள் பங்கேற்ற இம்மாநாட்டில் ஒவ்வொரு மாநிலத்தின் அடிப்படைத் தேவைகள், சவால்கள் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், தமிழகத்தின் மின்சாரம் மற்றும் வாகனப் பயன்பாட்டுத் தேவைகள் […]

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இலவச கார் வழங்கப்படும். தனி உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியம், எரிபொருள் படி ஆகியவற்றுக்காக மாதம் ரூ.1 லட்சம் கூடுதலாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். கார் இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் கார் வழங்கினால் கூட அதில் ஒரு நியாயம் உண்டு. […]

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தித் திராவிடர் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கும் நீட் தேர்வுக்கு எதிராகத் திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம் மற்றும் மகளிர் பாசறை சார்பில் கடந்த ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 2 வரை தமிழகம் […]

சென்னையை அடுத்த கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற 31-வது தென்மண்டல கவுன்சில் மாநாட்டில், நதிநீர் உரிமைகள், நியாயமான நிதிப்பகிர்வு, நீட் விலக்கு மற்றும் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மிக விரிவாகவும் ஆணித்தரமாகவும் தனது கருத்துக்களைப் பதிவு செய்தார். கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் சதீசன், தெலங்கானா துணை முதலமைச்சர் […]

சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீண்டும் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளார். இனி இதுபோன்ற கருத்துகளை பேசமாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொன்முடி, தனது பேச்சு யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக ஏற்கனவே மன்னிப்பு கேட்டதாகவும், தற்போது மீண்டும் உளமாற வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார். மேலும், தன்னை எதிர்த்து வழக்கு தொடர்ந்த […]

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது தவெக – திமுக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் வெடித்தது. சட்டப்பேரவை நிகழ்வுகளின் போது இருதரப்புக்கும் இடையே காரசாரமான கருத்து மோதல்கள் எழுந்தன. அப்போது எழுந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், திமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்தின் மாண்பையும், மரபையும் காற்றில் பறக்கவிட்டு, அமைச்சர்களையும் சக உறுப்பினர்களையும் நோக்கி ‘வாடா, போடா’ என ஒருமையில் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசி வருவதாக கடும் கண்டனம் தெரிவித்தார். […]

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் என்.ஆனந்த், கடந்த கால அரசியல் கணிப்புகளை தவிடுபொடியாக்கி மக்கள் தவெக மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார். சட்டசபையில் துறை சார்ந்த விவாதங்களுக்குப் பதிலளித்துப் பேசிய அவர், முதலமைச்சர் விஜய்யுடன் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மிக நெருக்கமாகப் பழகி வருவதை நினைவுகூர்ந்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சாதி, […]

திரையுலகின் முன்னணி நட்சத்திரமும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் கதாநாயகனாக நடித்து, அவரது திரையுலகப் பயணத்தின் கடைசி திரைப்படமாக உருவான “ஜனநாயகன்” திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. விமர்சன ரீதியாகக் கலவையான கருத்துகளைப் பெற்றபோதிலும், ரசிகர்களாலும் ஆதரவாளர்களாலும் திரையரங்குகளில் இத்திரைப்படம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரவேற்பைப் பெற்றது. அனிருத் இசையமைப்பில் […]