காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய், கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெளியாகும் தகவல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இத்தகைய பேச்சுவார்த்தைகளை முதலமைச்சர் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரியில் தமிழகத்திற்கான உரிய நீரைத் திறந்துவிட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுகளை கர்நாடக அரசு ஒருபோதும் மதித்து நடந்துகொள்வதில்லை என சாடினார். காவிரி […]

தமிழகத்தின் காவிரி நீர் உரிமைகளை நிலைநாட்ட தவறியதோடு, டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளதாக கூறி தவெக அரசை கண்டித்து, வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தஞ்சாவூரில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேட்டூர் அணை திறக்கப்படாததால் குறுவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டு, சுமார் 14 லட்சம் விவசாயிகள் வரை ரூ.2,500 கோடி அளவிற்கு இழப்பைச் சந்தித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், […]

தமிழக அரசியலில் மேகதாது அணை விவகாரம் மீண்டும் பூதாகரமாக உருவெடுத்துள்ள நிலையில், ஆளும் த.வெ.க அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே கடுமையான வார்த்தைப் போர் வெடித்துள்ளது. மேகதாது விவகாரத்தில் திமுக முன்வைக்கும் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தவெக அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”மேகதாது அணை விவகாரமானது கடந்த 2026 மே 10-ஆம் தேதிக்குப் பிறகுதான் தொடங்கியது என்பதைப் போல திமுக தலைமை பேசி […]

டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாக தமிழகம் முழுதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று (ஜூலை 29) தீவிர சோதனை நடத்தினர். இந்த சூழலில் டாஸ்மாக் நிறுவன முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட 7 பேர் மீதான எப்.ஐ.ஆர் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே சென்ற திமுக ஆட்சியின் போது டாஸ்மாக் நிறுவனத்தில் 1000 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பி […]

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி நியமன ஆணைகளை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவத்தையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து […]

தமிழ் திரையுலகில் நட்சத்திர நடிகர்களாக வலம் வருபவர்கள் அரசியலில் களம் காண்பதும், அது குறித்த விவாதங்கள் எழுவதும் வாடிக்கையான ஒன்றுதான். அந்த வகையில், தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமும், முதல்வர் மற்றும் தவெக தலைவருமான விஜய்யின் ஜோதிடராக அறியப்படும் ராதன் பண்டிட், முன்னணி நடிகர் தனுஷின் அரசியல் எதிர்காலம் குறித்து கூறியுள்ள கணிப்புகள் தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தனியார் சேனலுக்கு அவர் அளித்த நேர்காணலில், […]

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ், பொதுச்செயலாளராக வடிவேல் இராவணன் மற்றும் பொருளாளராக திலகபாமா ஆகியோர் மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் தமிழக நலன் மற்றும் கட்சி வளர்ச்சி சார்ந்த மொத்தம் 31 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுக்குழுவில் உரையாற்றிய அன்புமணி ராமதாஸ், மருத்துவர் ஐயாவின் கொள்கைகளை வென்றெடுத்து 2031-ஆம் ஆண்டில் பாமக ஆட்சியை அமைப்பதே […]

தமிழகத்தில் உள்ள சுமார் 37,595 அரசுப் பள்ளிகளில் பயிலும் 52 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மதிய உணவுத் திட்டத்தில் மாற்றத்தை கொண்டுவர தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. தற்போதைய சூழலில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 46 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இலவச மதிய உணவுத் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். தற்போது இவர்களுக்கு வெஜிடபிள் பிரியாணி, தக்காளி […]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் எழுந்த ஒற்றைத் தலைமை மோதலால் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து ‘அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழு’வை தொடங்கி, மீண்டும் அதிமுகவில் இணைய ஓபிஎஸ் தொடர்ந்து விருப்பம் தெரிவித்து வந்த போதிலும், எடப்பாடி பழனிசாமி அதற்கு முற்றிலும் முற்றுப்புள்ளி வைத்தார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் கூட்டணி அமைக்க முன்வந்த எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸை மீண்டும் இணைக்கும் பேச்சுக்கே […]

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பற்றி சமூக வலைதளங்களில் தரக்குறைவாகப் பேசியதாக எழுந்த புகாரில், பிரபல யூடியூபர்களான பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சைபர் கிரைம் போலீசாருக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும், பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான அறிக்கையை அடுத்த நாளே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் ஆணையிடப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தாக்கல் செய்த […]