தமிழக ஆளுநரை அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் சமிபத்தில் திமுக சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் ரவிக்கு எதிராக அக்கட்சியின் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மிரட்டல் விடுத்தார். மேலும் ஆளுநர் ரவி சட்டமன்றத்தில் உரை நிகழ்த்திய போது பேப்பரில் எழுதி கொடுத்த படி படித்திருந்தால் அவர் காலில் பூப்போட்டு அனுப்பியிருப்போம். ஆனால், தமிழகத்தில் இந்தியாவுக்கு சட்டத்தை எழுதிக் கொடுத்த எங்கள் முப்பாட்டன் அம்பேத்கர் […]

பாஜகவை கண்டித்து வரும் 27ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக நடிகை காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார். நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார். அண்மையில் அண்ணாமலையின் தலைமையின் கீழ் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், அண்ணாமலையின் ஒப்பதலின்படி […]

பஞ்சாப்பில் இன்று காலை ராகுல் காந்தி பாதயாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. சந்தோக்சிங் சவுத்ரி மாரடைப்பால் மரணமடைந்தார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, உத்தரப்பிரதேசம் ஆகிய 11 மாநிலங்களில் நடைபயணம் செய்த பிறகு ராகுல் காந்தி கடந்த 10-ந்தேதி […]

திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு அவ்வப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது. கடந்த 11ஆம் தேதிதான் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். இந்நிலையில், இன்று மீண்டும் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் துரைமுருகன் […]

தமிழக பாஜகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம், விரைவில் களத்தில் சந்திப்போம் என தெரிவித்துள்ளார். நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார். அண்மையில் அண்ணாமலையின் தலைமையின் கீழ் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், மாநில தலைவர் அண்ணாமலையின் ஒப்பதலின்படி காயத்ரி ரகுராம், […]

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆவின் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், 30 பணியாளர்களுக்கு நேரடியாக ஊக்கத்தொகையை வழங்கினார். ஆவின் பணியாளர்களுக்கு இந்தாண்டுக்கான பொங்கல் பண்டிகை ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரியும் 1,325 பணியாளர்களுக்கு ரூ.12.58 லட்சம், மாவட்ட ஒன்றியங்களில் பணிபுரியும் 2,969 பணியாளர்களுக்கு ரூ.28.47 லட்சம் மற்றும் […]

ஒரு காலத்தில் தமிழகத்தில் பாஜக என்ற கட்சி இருக்கிறதா? என்று கேட்கும் அளவிற்கு பாஜகவின் வளர்ச்சி தமிழகத்தில் படுமோசமாக இருந்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தில் அதிமுக இருந்தாலும் கூட, மக்கள் மத்தியில் எதிர்க்கட்சி என்றால் பாஜக தான் என்று சொல்லும் அளவிற்கு தமிழகத்தில் அந்த கட்சி வளர்ச்சியை அடைந்திருக்கிறது. இதற்கு முழுமுதற் காரணம் பாஜகவின் மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை தான் என்று சொன்னால் அது […]

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ’Z’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய, மாநில உளவுப்பிரிவு தகவல் அளித்துள்ளது. ஏற்கனவே, அண்ணாமலைக்கு Y பிரிவு பாதுகாப்பில், 2 தனிப்பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 11 பேர் கொண்ட ஆயுதம் ஏந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் மாநில போலீசார் ஆகியோர் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இதுவரை Y பிரிவு […]

அரசுப் பணிகளில் சேர தமிழ் மொழி கட்டாயம் என்ற சட்ட மசோதாவை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார் . தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கடந்த 2016ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை தாக்கல் செய்தார். அதில், தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றிருந்து, பணியில் அமர்ந்திருந்தாலும் பணியில் சேர்ந்த தேதியில் இருந்து 2 ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி […]

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 2023-2024ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் 27 அமர்வுகளாக 66 நாட்கள் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். முதல் அமர்வு ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரையும், இரண்டாவது அமர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 6 வரையும் நடக்கிறது. பிப்ரவரி 14 […]