முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் தனது 75வது வயதில் காலமானார். ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவ் தனது 75வது வயதில் காலமானார். அவரது மறைவு செய்தியை அவரது மகள் சுபாஷினி ஷரத் யாதவ் ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். ஜேபி இயக்கத்தின் முக்கிய முகங்களில் ஒருவரான சரத் யாதவ் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்தார். அவர் குருகிராமில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். […]

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் இன்று சந்தித்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 9ஆம் தேதி உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையில் இடம்பெற்ற சில பகுதிகளை படிக்காமல் தவிர்த்தார். இதனால், ஆளுநருக்கு எதிராக, முதலமைச்சர் முக.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை முதலமைச்சர் வாசித்துக் கொண்டிருக்கும் போதே, ஆளுநர் ஆர்.என்.ரவி […]

தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையில் இடம்பெற்ற சில பகுதிகளை படிக்காமல் தவிர்த்தார். இதனால், ஆளுநருக்கு எதிராக, முதலமைச்சர் முக.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை முதலமைச்சர் வாசித்துக் கொண்டிருக்கும் போதே, ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். தமிழ்நாடு அரசின் உரையை முழுமையாக படிக்காதது, பேரவையில் தேசிய கீதம் இசைக்கும் முன்பாகவே ஆளுநர் வெளியேறியது உள்ளிட்ட விவகாரங்களை அவை விதிமீறல்களாக […]

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்காக பிரதமர் மோடி போராடி வருகிறார். ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகம், தமிழ்நாடு இரண்டும் ஒன்றுதான். முக.ஸ்டாலின் அவர்கள் பலமுறை தமிழகம் என்று பேசியிருக்கிறார். ஆளுநர் தமிழகம் என்று குறிப்பிட்டது ஒன்றும் […]

உத்தரபிரதேச அரசு லக்னோவில் 144 தடையை அமல்படுத்தி உள்ளது. வரவிருக்கும் திருவிழாக்கள், தேசிய நிகழ்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகளை மனதில் கொண்டு. லக்னோவில் பிப்ரவரி 10 ஆம் தேதி வரை 144 தடை அமலில் இருக்கும் என்று மாநில அரசு தனது தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. குடியரசு தினம், மகர சங்கராந்தி மற்றும் பல அரசு நுழைவுத் தேர்வுகள் போன்ற நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு லக்னோவில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. […]

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் விரிவாக பதிலளித்து வருகின்றனர். பரபரப்பாக அவையின் அலுவல்கள் நடைபெற்று வரும் நிலையில், திமுக எம்.எல்.ஏ உதய சூரியன் எழுப்பிய கேள்வியும் அதற்கு அமைச்சர் தெங்கம் தன்னரசு அளித்த பதிலும் சட்ட சபையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. அந்த வகையில், திமுக எம்.எல்.ஏ. பேரவையில் எழுந்து கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். ”ஒரு பழமொழி சொல்வார்கள்.. காலையில் […]

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அருகே சோழபுரம் பகுதியைச் சேர்ந்த திருஞானசம்பந்தம் என்ற 53 வயது நபர் பாமக முன்னாள் பேரூர் தலைவராக பதவி வகித்து வருகின்றார். இவருக்கு 42 வயதில் வனிதா என்ற மனைவியும், ஸ்ரீமதி, ஸ்ரீ ராம் என்ற பிள்ளைகளும் இருக்கின்றனர். திருசம்பந்தத்திற்கும் ராஜேந்திரன் என்பவருக்கும் பல ஆண்டுகளாக நில தகராறு ஏற்பட்டு வந்தது. சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட தகராறு திருஞானசம்பந்தத்தை ராஜேந்திரன் குடும்பத்துடன் சேர்ந்து […]

திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு அவ்வப்போது உடல்நல பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த மாத இறுதியில் திடீர் காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். துரைமுருகன் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது உடல் நலனில் […]

ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-விடம் திமுக இன்று முறையிட உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையில் இடம்பெற்ற சில பகுதிகளை படிக்காமல் தவிர்த்தார். இதனால், ஆளுநருக்கு எதிராக, முதலமைச்சர் முக.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை முதலமைச்சர் வாசித்துக் கொண்டிருக்கும் போதே, ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். தமிழ்நாடு அரசின் உரையை […]

சேலம் பெரியார் பல்கலைக் கழக முறைகேடு விவகாரத்தில் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல், இடஒதுக்கீட்டு விதிகள் பின்பற்றப்படாதது உள்ளிட்ட 13 குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி தலைமையில் விசாரணைக்குழு அமைத்து தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. பெரியார் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் பொறுப்பேற்றுக் […]