கரூர் மாவட்ட அதிமுக அவை தலைவர் திரு.வி.க கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அடுத்த நாளில் அதிமுக மாவட்ட ஐடி விங் இணைச் செயலாளர் சிவராஜ் திமுக பிரமுகர் ஒருவரால் கடத்தப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டு மீட்கப்பட்டார். இந்த நிலையில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாகவும், திமுக அரசை கண்டித்து கரூரில் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று […]

அண்ணாமலையால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் விலகி இருக்கும் நிலையில், பாஜகவில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ”பாஜகவில் இருந்து விலகும் முடிவை கனத்த இதயத்துடன் எடுக்கிறேன். இந்த முடிவை எடுக்க காரணம் அண்ணாமலை தான். அண்ணாமலையின் தலைமைக்கு கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அண்ணாமலை பற்றி நான் இனி கவலைப்பட மாட்டேன். அண்ணாமலை […]

பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். இந்த முடிவை கனத்த இதயத்துடன் எடுக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் காயத்ரி ரகுராமிற்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. கட்சியில் சீனியர்களுக்கு எதிராக அண்ணாமலை செயல்படுவதாகவும், அண்ணாமலை வந்த பின் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் காயத்ரி ரகுராம் விமர்சனம் வைத்து வந்தார். அண்ணாமலைக்கு எதிராக ட்விட்டரில் கடுமையான […]

இளம்பெண்ணை 12 கி.மீ. காரில் இழுத்து சென்ற 5 குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லி மாநிலம் காஞ்சவாலா பகுதியில் பலினோ காருக்கு அடியில் சிக்கி அஞ்சலி என்கிற 20 வயது பெண் ஒருவர், சுமார் 12 கி.மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரில் பயணம் செய்த 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பலியான பெண்ணின் […]

பணி நீட்டிப்பு பெறாத ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் போது கடந்த இரண்டு ஆண்டுகளாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். அதன்படி, சுமார் 2,300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பணிக்காலம் கடந்த 31ஆம் தேதியுடன் […]

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அந்த கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் அடிப்படை உறுப்பினராக வானதி சீனிவாசனின் நேரடி அரசியல் பயணம் 1993 இல் தொடங்கியது. பாஜக சார்பில் இவர் நூற்றுக்கணக்கான போராட்டங்களில் பங்கெடுத்திருந்தாலும், தமிழகத்தில் மதுபான கடைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தி இவர் முன்னெடுத்த போராட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. இதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடர்ந்து அதில் இவர் வெற்றியும் பெற்றுள்ளார். […]

விளையாட்டு துறை அமைச்சர் சந்தீப் சிங் மீது பெண் பயிற்சியாளர் பாலியல் புகார் அளித்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஹரியானாவில் விளையாட்டு துறை அமைச்சர் சந்தீப் சிங் மீது பெண் பயிற்சியாளர் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த பாலியல் குற்றச்சாட்டு சம்பவம் தொடர்பாக முதலமைச்சரிடம் தான் பொறுப்பேற்றுக் கொண்டிருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் . எனது இமேஜை கெடுக்க முயற்சி […]

முன்னாள் முதலமைச்சர் நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் மூன்று பேர் உயிரிழப்பு. ஞாயிற்றுக்கிழமை குண்டூர் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் என் சந்திரபாபு நாயுடு நடத்திய பொதுக்கூட்டத்தின் போது மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். குண்டூர் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் […]

தமிழகத்தில் பாஜக கூட்டணி இல்லாமல் போட்டியிட திமுக தயாரா..? என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பக்கத்தில் சவால் விடுத்துள்ளார். சமிபத்தில் தனியார் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக தனித்து நின்றால், அவர்களால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. பாஜக வளர்ந்து வருவதைப் போல் ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்படுவதாக கூறினார். இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் பாஜக […]

எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்படுவார் என்றும், அதன் பிறகு பாஜகவுக்கு சிக்கல் ஏற்படும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த சில மாதங்களாக நடந்து வரும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் ஒருமித்த கருத்துக்கு வர முடியாமல் எதிர்க்கட்சிகள் தோல்வியடைந்தன. இந்த […]