பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1,500 ரொக்க பணம் உயர்த்தி வழங்கலாமா என்பது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமை செயலகத்தில் 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் தொகுப்புக்களை குறைத்து பணம் உயர்த்தி வழங்கலாமா என்பது குறித்த ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு […]

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருடம் தோறும் தமிழக அரசின் சார்பாக தமிழக மக்களுக்கு ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பொங்கல் பரிசு தொகுப்போடு 1000 ரூபாய் பணமும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் சென்ற வருடம் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற நிலையில், பொங்கல் பரிசு தொகுப்போடு 1000 ரூபாய் பணம் வழங்கப்பட்டு வந்தது மட்டும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் […]

மர்ம நபர்களால் வெட்டப்பட்ட பாஜக நிர்வாகியை மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சென்று நலம் விசாரித்தார். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதாக தனது முகநூல் பக்கத்தில் வீடியோவை பா.ஜ.க நிர்வாகி துரை தனசேகர் பதிவிட்டுள்ளார். திருக்கழுகுன்றம் காவல் நிலையத்திற்க்கு பா.ஜ.க நிர்வாகி தனசேகர் மற்றும் கஞ்சா வியாபாரம் செய்யும் நான்கு பேரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். இரு தரப்பினரையும் விசாரணை செய்தனர். விசாரணை முடிந்த பின்னர் […]

வருகின்ற 21-ம் தேதி ஓபிஎஸ் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் 80 சதவீதத்திற்கு மேல் நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டு விரைவில் பொதுக்குழு நடைபெறும் என ஓபிஎஸ் கூறியிருந்தார். சட்டப்போராட்டம் ஒருபுறம் இருக்கக் களத்தில் எடப்பாடி தரப்பை எதிர்ப்பதற்கு பன்னீர்செல்வம் அணியினர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கையாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இது […]

அரசு பள்ளிகளில் கட்டமைப்புகளை உருவாக்கும் வகையில் ‘நம்ம ஸ்கூல்’ பவுண்டேஷன் என்னும் புதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார். இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; தமிழகத்தில் அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கு அரசுப் பள்ளிகளில் பயின்று தற்போது பல்வேறு தொழில் நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்களும், தொழிலதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்களும், தொழில் நிறுவனங்கள், […]

சென்னை தலைமை செயலகத்தில் இன்று மாலை 5:00 மணி அளவில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. தமிழக அமைச்சரவையில் புதிதாக கடந்த 14-ம் தேதி உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்றார். மேலும், அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.அமைச்சர் பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.அமைச்சர் ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத் துறையும், அமைச்சர் மதி […]

அதிமுக முன்னாள் நகர கவுன்சிலரான சேகர், எம்.ஜி.ஆர். சிலையிடம் கடிதத்தைக் கொடுத்துவிட்டு கண்ணீர் மல்க கட்சியை விட்டு விலகினார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்தவர் சேகர். இவர் எம்ஜிஆர் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து உறுப்பினராக இருந்து பின்னர் 3 முறை சீர்காழி நகர மன்ற உறுப்பினராகவும், அதிமுக மாவட்ட பிரதிநிதியாகவும், கூட்டுறவு சங்க இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார். அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டங்களில் பலமுறை கலந்து கொண்டு சிறை […]

தமிழக பாஜக தலைவரின் கைக்கடிகாரம் தான் தற்போது பேசு பொருளாகியுள்ளது, சுமார் 3 லட்சம் மதிப்புள்ள அந்த கடிகாரம் ரபேல் விமான பாகங்களில் இருந்து செய்யப்பட்டுள்ளது, எளிமை இன்றி தன்னை காட்டிக்கொள்ளும் அண்ணாமலை அவர்கள் எப்படி 3 லட்சம் மதிப்புள்ளா கடிகாரத்தை வாங்கினார் போன்ற கடுமையான விமர்சனங்களை திமுக உள்ளிட்ட பல தரப்பினர் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்நிலையில் தமிழா பாஜக தலைவர் அண்ணாமலை தனது டீவீட்டில் திமுகவினரை சீண்டியுள்ளார். […]

ராகுல் காந்தியின் இந்திய தேசிய ஒற்றுமை யாத்திரையில் மநீம தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து நடைபயணத்தை செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி ராகுல் துவங்கினார். இதையடுத்து, கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா, தற்போது ராஜஸ்தான் மாநிலம் சென்றுள்ளது. ராகுல் காந்தியின் நடைபயணம் நாடு முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது. அவரது […]

விலை இரு மடங்காக இருந்தாலும் இந்திய பொருட்களையே மக்கள் வாங்க வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். சீன பொருட்களை நாட்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். இது தொடர்பாக கெஜ்ரிவால் மேலும் அவர் கூறுகையில், ”இந்தியா மீது தாக்குதல் நடத்தும் சீனாவிடம் இருந்து இறக்குமதியாகும் பொருட்களை, பாஜக தலைமையிலான மத்திய அரசு ஏன் தொடர்ந்து அனுமதிக்கிறது? சீன பொருட்களை […]