மின் கட்டண எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிவாயு உருளை இணைப்பு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும் என்று 2016-ம் ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது. அப்போது அதற்கு கண்டனம் தெரிவித்த அப்போதைய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடன் மின்சார இணைப்பு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட […]

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி மிகவும் பலம் வாய்ந்ததாக இருப்பதாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தேர்தலை பொருத்தவரை தமிழ்நாட்டில் கட்சி, கூட்டணி பலம் மற்றும் சின்னம் தான் ஜெயிக்கும் என்றார். திமுக- காங்கிரஸ் கூட்டணி பலமாக இருப்பதாகக் கூறிய அவர், இன்னும் இரண்டு மூன்று கட்சிகள் திமுக கூட்டணியில் சேர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தார். கூட்டணி பலமாக இருந்து, கூட்டணி தலைமையும் பலமாக […]

15 ஆண்டுகள் நிறைவடைந்த இந்திய அரசின் அனைத்து வாகனங்களும் பயன்பாட்டில் இருந்து நீக்கம் செய்யப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த 2014ஆம் ஆண்டில் தேசிய பசுமை தீர்ப்பாயம், 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்களை பொது இடத்தில் நிறுத்த தடை விதித்தது. அதைத்தொடர்ந்து, 2018 அக்டோபரில், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் மற்றும் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களை இயக்க […]

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் சிறந்த வழக்கறிஞர்கள் மூலம் வலுவான வாதங்களை உச்சநீதிமன்றம் முன்பு எடுத்து வைக்க அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தின் கலாச்சாரப் பெருமையினை நிலை நிறுத்திடும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டி அமைந்துள்ளது. ஜல்லிகட்டிற்கு தடை வந்த போது அவசர சட்டம் கொண்டு வந்து தடையை நீக்கியது அதிமுக அரசு. திமுக அங்கம் வகித்த மத்திய அரசு 2011-ம் ஆண்டு […]

கட்சித் தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை கட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கட்சியை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்காக மாவட்டம் தோறும் பொது கூட்டங்களை நடத்தி, ஆளும் அரசின் தவறுகளையும் சுட்டிக்காட்டி வருகிறார். இது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் சிதம்பரத்தில் பாஜகவினரின் சார்பாக பொதுக்கூட்ட நிகழ்ச்சி […]

தொழில் முறை ஆங்கிலத் தேர்வு எழுத உள்ள செவிலிய மாணவ – மாணவியரின் தேர்வு கட்டண சுமையை குறைக்கும் விதமாக, தலா 7,500 ரூபாய் வழங்க முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் செவிலியர் பணிக்கு தொழில் முறை ஆங்கிலத்தேர்வு கட்டாயமாகி உள்ளது. இத்தேர்வை எழுதுவதற்காக தமிழக செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளில் இளநிலை இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் 481 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு […]

விளம்பர பேனர் ஒன்றிற்கு சுமார் 611 ரூபாய் மட்டுமே செலவு ஆனதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசு விளம்பர பேனர் ஒன்றுக்கு ரூ.7,906 செலவு செய்வதாக குற்றச்சாட்டை வைத்திருந்தார். இதற்கு அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், விளம்பர பதாகைகள் நிறுவியது குறித்து, அனைத்து மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட விவரங்களின்படி அச்சடிக்கும் பணியில் எந்தவொரு தனியொரு நிறுவனமும் ஈடுபடுத்தபடவில்லை. மேலும் மாநிலம் […]

திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகன்தான் சூர்யா சிவா. இவர், திமுகவில் பதவி கிடைக்காததால், அங்கிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்து கொண்டார். மேலும் அண்ணாமலைக்கு மிகவும் நெருங்கிய நபராக தன்னை மாற்றிக் கொண்டார். திமுகவில் தான் எந்த ஒரு பதவியும் கிடைக்கவில்லை, பாஜகவில் ஏதேனும் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்த்தார். அந்த வகையில் சிறுபான்மையினர் தலைவராக இவருக்க பதவி கொடுப்பார்கள் என்று பலரும் எண்ணினர். ஆனால் சிறுபான்மையினர் அணி தலைவராக […]

திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன்தான் சூர்யா சிவா. இவர், திமுகவில் பதவி கிடைக்காததால், அங்கிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்து கொண்டார். மேலும் அண்ணாமலைக்கு மிகவும் நெருங்கிய நபராக தன்னை மாற்றிக் கொண்டார். திமுகவில் தான் எந்த ஒரு பதவியும் கிடைக்கவில்லை, பாஜகவில் ஏதேனும் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்த்தார். அந்த வகையில் சிறுபான்மையினர் தலைவராக இவருக்கு பதவி கொடுப்பார்கள் என்று பலரும் எண்ணினர். ஆனால் சிறுபான்மையினர் அணி தலைவராக […]

காங்கிரஸ் கட்சியில் எம்.எல்.ஏ. ரூபி மனோகரனை தற்காலிகமாக நீக்கி, ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15ஆம் தேதி கே.எஸ்.அழகிரி – ரூபி மனோகரன் தரப்புக்கு இடையே மோதல் நடைபெற்றது. இந்த மோதல் சம்பவத்திற்கு நாங்குநேரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ரூபி மனோகரன் தான் காரணம் என்பதால் அவரைக் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் […]