நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொதுத்துறையைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்து வருகின்றன. சர்வதேச சந்தையில், 2021ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இதனால், உள்நாட்டில் தலா ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.100யை தாண்டியது. அப்போது தீபாவளி […]

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அரங்கேற்றிய 17 காவல்துறையினர் மட்டுமின்றி  ஆணையிட்ட அரசு அதிகாரிகள் என இதில் சம்மந்தப்பட்ட அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அடுக்கடுக்கான பல கேள்விகளைக் கேட்டு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது. ’’ தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர […]

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 4 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், முன்னாள் ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள், போலீசார் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், ”தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை அதிமுக அரசு உரிய முறையில் கையாளவில்லை. […]

காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கே புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வந்தது காங்கிரஸ் கட்சி இதன் காரணமாக தலைவராக இருந்த ராகுல்காந்தி அப்பதவியைத் துறந்தார். இதையடுத்து இடைக்காலத் தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார். இந்நிலையில் எவ்வளவு காலத்திற்குத்தான் இடைக்காலத் தலைவரை வைத்து கட்சி செயல்படும் என்று பல மாநிலங்களில் இருந்தும் கட்சியினர் கோரிக்கை வைக்கத் தொடங்கினர். இதையடுத்து […]

காங்கிரஸ் தலைவர் தேர்தலில், மல்லிகார்ஜூன கார்கே பெரும்பான்மை ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்காக மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோர் நேரடியாக போட்டியிட்டனர். இதற்கான தேர்தல் நேற்று முன்தினம் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்றது. இந்நிலையில், தேர்தலில் பதிவான ஓட்டுகள் அனைத்தும் இன்று எண்ணப்பட்டது. அனைத்து மாநில வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குச்சீட்டுகள் மொத்தமாக சேர்க்கப்பட்டு அதன் பின் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், […]

புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மருத்துவ படிப்பை தமிழ் மொழியில் வழங்க இருப்பதாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். நாட்டில் கல்வியை மாணவர்கள் அனைவரும் தங்களின் தாய்மொழியில் கற்கும்போது தான் அதன் முழு சாரம்சத்தையும் புரிந்து சிந்திக்க முடியும் என்று பல அறிஞர்களும் கூறுகின்றனர். அதனால், பல மாநிலங்களில் கல்வி வாரியங்களும் தங்களின் மாணவர்களுக்கு தாய்மொழிவைக் கல்வியை அறிமுகப்படுத்த தொடங்கியுள்ளன. அந்த வகையில், மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் முதன் […]

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா, சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை..!! ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்ய சட்ட மசோதாவை அமைச்சர் ரகுபதி  இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் […]

தடையை மீறி போராட்டம் நடத்தியதாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழக சட்டப்பேரவையில் அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இன்று காலை போராட்டம் தொடங்கியது. ஆனால், இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. ஆனாலும், தடையை மீறி எடப்பாடி […]

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட உணவு, ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைத்த விதிமுறைகளுக்கு மீறி இருந்ததால் அவருடைய உடல்நிலை மோசமடைந்திருக்கிறது என ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 613 பக்க அறிக்கையை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில், பல்வேறு முக்கிய விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தில் வெளி உணவு வழங்காமல் மருத்துவமனை உணவு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. […]

உத்தரகாண்ட்‌ மாநிலம்‌ கேதார்நாத்‌ ஹெலிகாப்டர்‌ விபத்தில்‌ உயிரிழந்தவர்களின்‌ குடும்பத்தினருக்கு ஆறுதல்‌ மற்றும்‌ உயிரிழந்தவர்களின்‌ உடல்களை கொண்டுவர நடவடிக்கைகள்‌ எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில்; உத்தரகாண்ட்‌ மாநிலம்‌ கேதார்நாத்தில்‌ நிகழ்ந்த ஹெலிகாப்டர்‌ விபத்தில்‌ 7 பேர்கள்‌ உயிரிழந்தனர்‌. இதில்‌ தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த திருமதி. கலா ரமேஷ்‌, பிரேம்குமார்‌ வாஞ்சிநாதன், சுஜாதாபிரேம்குமார்‌ ஆகிய மூவரும்‌ கேதார்நாத்‌, பத்ரிநாத்‌ ஆகிய இடங்களுக்கு புனிதயாத்திரை சென்றபோது ஹெலிகாப்டர்‌ […]