அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராவதாக திமுகவில் பேசப்பட்டு வருதற்கு உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் என்ன சொல்லியிருக்காருன்னு தெரியுமா? ஆம், கடந்த சில நாட்களாகவே அவர் தனது திரைப்படம் சம்மந்தப்பட்ட பணிகளில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு கட்சி சார்ந்த சில பொது நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வந்தார். இதனால் அரசியல் வட்டாரங்கள் அவர் அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக பேசப்பட்டு வந்தது. இதனிடையே ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் […]

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகர் மனோஜ் சின்ஹா, மாரடைப்பால் காலமானார். சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையின் துணை சபாநாயகராக காங்கிரஸ் எம்எல்ஏ மனோஜ் சின்ஹா மந்தவி செயல்பட்டு வருகிறார். மனோஜ் கன்கீர் மாவட்டம் பானுபிரதாபூர் தொகுதி எம்எல்ஏ ஆவார். இந்நிலையில், 58 வயதான மனோஜ் சின்ஹாவுக்கு நள்ளிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தம்தரி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு […]

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான பண்ணை வீட்டில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு சொந்த ஊரான பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டியில், அவருக்கு பண்ணை வீடு ஒன்று உள்ளது. 10 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் கொண்ட இந்த வீட்டில் எப்போதும் பாதுகாவலர்கள் இருப்பதுடன், காவலுக்காக நாய்களும் உள்ளன. இங்கு கட்சி நிர்வாகிகளின் சந்திப்பு, ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், பண்ணை வீட்டில் வெள்ளிக்கிழமை இரவில் திருட்டு […]

கொடநாடு கொலை , கொள்ளை வழக்குகளில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தீவிரமாகி உள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாம்… மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான  நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் 2017ல் ஏப்ரல் மாதம் 23ம் தேதி கொலை செய்யப்பட்டு கொள்ளை சம்பவம் நடந்தது. இதில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மறு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதில் பல முக்கிய புள்ளிகள் கைதாகலாம் என வட்டாரப் பேச்சுகள் அடிபடுகின்றன. இதனால் எடப்பாடி […]

தமிழக அரசு பொதுத்துறை பணியாளர்களுக்கு அறிவிக்கப்ட்டுள்ள 10% போனசை குறைந்தது 20% ஆக உயர்த்தி வழங்க முன்வர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களில் ரூ.7000 முதல் அதிகபட்சமாக 21,000 வரை ஊதியம் பெறும் ‘சி’ மற்றும் […]

மொத்தம் 68 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சலப் பிரதேசத்தில் சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 8ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சியில் இருக்கிறது. இங்கு பெரும்பான்மைக்கு 35 இடங்கள் தேவை, ஆனால் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 44 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரசால் 21 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. தற்போது, இமாச்சலப் […]

மாணவி சத்யாவை கொலை செய்துவிட்டு தப்பியோடிய சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஈசிஆரில் சதீஷை கைது செய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்படுப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மாணவி சத்யா இறந்த செய்தி கேட்டு அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது, இது […]

கொரோனா பரவலுக்கு தப்லிக் ஜமாத்-தான் காரணம் என கருத்து பதிவிட்ட யூடியூபர் மாரிதாசு என்பவருக்கு எதிராக தமிழக காவல்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழகத்தில் மதுரையை சேர்ந்த பிரபல யூட்யூபர் மாரிதாஸ் திமுகவிற்கு எதிராக தனது கருத்துக்களை முன்வைத்து வருவார் அந்த வகையில் கடந்த 2020-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் மாரிதாஸ் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில், இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவ காரணம் தப்லீக் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் என்ற […]

எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானது முதல் அவருக்கு சாதகமாகவே அனைத்தும் இருந்தது இந்நிலையில் ஒவ்வொருவராக ஓ.பி.எஸ். அணிக்கு தாவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூத்த அரசியல்வாதியான பண்ருட்டி ராமச்சந்திரன் ஓ.பி.எஸ். அணிக்கு சென்றார். இதைத்தொடர்ந்து மைத்ரேயனும் எடப்பாடி அணியில் இருந்து தாவினார். என்னடா ஒவ்வொரு விக்கெட்டா விழுதே என நினைக்கும் வேளையில் தற்போது மேலும் ஒரு குண்டு வெடிக்க உள்ளது. கே.பி.முனுசாமி உள்ளிட்டோரும் ஓ.பி.எஸ். அணியில் சேரப்போவதாக தகவல்கள் கசிந்த […]

பா.ஜ.க. முக்கிய தலைவர்கள் அமித்ஷா , மோடி உள்பட பலரும் இந்தியை கற்க வற்புறுத்தி வரும் நிலையில் தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை தனி வழியில் செல்கின்றார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமெரிக்க பயணத்தை நிறைவு செய்த பின்னர் தமிழகம் திரும்பினார். வழக்கம் போல கமலாலயம் சென்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில் , ’’ இந்தி திணிப்பு என்பதை காங்கிரஸ் திணித்தபோது திமுக 10 ஆண்டுகள் […]