சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்த வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் உடனடியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு செய்த மருத்துவ பரிசோதனையில் இதயத்தின் முக்கியமான மூன்று ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். இதற்கு நடுவே ஓமந்தூரார் மருத்துவமனையில் […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
தமிழ்நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த தவறிவிட்ட திமுக அரசை கண்டிக்கும் விதமாகவும், அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு இருக்கின்ற திமுகவைச் சார்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் இன்று அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அதிமுகவினர் சார்பாக மாபெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதோடு, ஒவ்வொரு பகுதியிலும் தலைமை கழக நிர்வாகிகள் […]
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை துவங்கியது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை துவங்கியது. செந்தில் பாலாஜி இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் குழு மூத்த மருத்துவர் ரகுராமன் தலைமையில் அறுவை சிகிச்சை காவேரி மருத்துவமனையின் ஏழாவது தளத்தில் உள்ள ஸ்கை வியூ என்ற அறையில் அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. அறுவை சிகிச்சைக்கு முன்பு அளிக்கப்படும் அனஸ்தீசியா எனப்படும் […]
6 நாள் பயணமாக இன்று இரவு லண்டன் செல்கிறார் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நரேந்திர மோடி 2014 மே 26 அன்று முதல் முறையாக பிரதமராக பதவியேற்றார், பின்னர் மே 30, 2019 அன்று இரண்டாவது முறையாக பிரதமர் ஆனார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அரசின் 9 ஆண்டுகள் சாதனை குறித்த நாடு முழுவதும் கட்சி […]
கடந்த அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது வேலைவாய்ப்பு முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த வாரம் விசாரணைக்காக அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 3 ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இருதய அறுவை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட […]
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, நாளை காலை இதய அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இருதய நோய் சிறப்பு நிபுணர்களின் கண்காணிப்பில் […]
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையின் போது நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டதில் இதய நாளங்களில் மூன்று அடைப்புகள் இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜிக்கு நாளை காலை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட […]
கோவையைச் சேர்ந்த உமா கார்க்கி என்ற இளம் பெண் சமூக வலைதளங்களில் பாஜகவிற்கு ஆதரவாக தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் பெரியார் கருணாநிதி தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டோர் தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் வலைதளத்தில் அவதூறாக கருத்துக்களை பதிவிட்டதாக கூறி உமா கார்க்கியின் மீது புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில், கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் […]
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என்ற தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரி எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அப்போது நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து முதலில் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது நீதிமன்ற […]
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தொடர் மழை எதிரொலியாக அமைச்சர்களுக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக வட மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேடை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் […]