தமிழ்நாட்டில் உள்ள பெண் சுய உதவிக்குழுக்களுக்கு நல்ல செய்தி ஒன்றை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பெண்களுக்கு முன்னேற்றம் கொடுக்க வேண்டும் என்று பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படியே, தமிழ்நாட்டில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு […]

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கையை சித்தரிக்கும் அருங்காட்சியகம், நூலகம் இன்று திறக்கப்பட உள்ளது. திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடியில் 7,000 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் இன்று திறக்கப்பட உள்ளது. இந்த கலைஞர் கோட்டத்தை பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைக்க உள்ளார். அதேபோல முத்துவேலர் நூலகத்தை பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைக்க இருக்கிறார். […]

தமிழக அரசு இணையதளத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயருக்கு கீழ் இருந்த துறைகள் நீக்கப்பட்டிருக்கிறது சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அவரை நீதிமன்றம் ஜூன் மாதம் 28ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இதனை அடுத்து நிர்வாக காரணத்திற்காக அமைச்சர் செந்தில் பாலாஜி கவனத்திற்கு கீழ இருந்த மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை உள்ளிட்ட […]

மதுரையைச் சேர்ந்த மக்கள் சமூகநீதி பேரவை சார்பில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க முயன்றுள்ளனர். இதற்காக அவரிடம் அனுமதி பெற்று கடந்த சனிக்கிழமை மாலை பெங்களூருவில் உள்ள முதல்வரின் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.அப்போது முதல்வர் சித்தராமையாவிற்கு வாழ்த்து தெரிவிக்க தங்க முலாம் பூசிய 4 அடி உயரத்திலான பெரியார் உருவம் தாங்கிய சமூகநீதி செங்கோல் மற்றும் நினைவுப் பரிசுகளுடன் அவர்கள் முதல்வர் சித்தராமையா இல்லத்திற்கு சென்றுள்ளனர். அப்போது […]

இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), வரும் ஜூன் 20ம் தேதியில் இருந்து 24ம் தேதி வரை அமெரிக்காவில் (US) சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதற்காக ஏர் இந்தியா ஒன் (Air India One) விமானத்தில் அவர் பறக்கவுள்ளார். இந்த விமானம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி. எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்பட வேண்டிய தேவையே இல்லாமல், இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு பறக்கும் திறன் ஏர் இந்தியா ஒன் […]

தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறையின் கைது நடவடிக்கையின் போது நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு அங்கே அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது இதய நாளங்களில் 3 அடைப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் […]

ஐயா கக்கன் வழியில் எளிமையான அரசியலை முன்னெடுத்துச் செல்ல அனைவரும் உறுதி ஏற்ப்போம் என பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டிவி தொடர்பாக அவர் தன்னுடைய வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது சுதந்திரப் போராட்ட வீரரும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடைய அமைச்சரவையில் அமைச்சராக சிறப்பாக பணியாற்றி வந்தவரும் ஆலய நுழைவுப் போராட்டத்தை முன்னெடுத்து வர்களில் ஒருவருமான ஐயா கக்கன் பிறந்த தினம் இன்று எனக் கூறியுள்ளார். நேர்மை மற்றும் எளிமையின் […]

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிற்படுத்தப்பட்டோர் அமைச்சர் ராஜகண்ணப்பன் – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் எம்.பி. நவாஸ் கனி ஆகியோர் பங்கேற்றனர். விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். பரிசளிப்பு விழாவிற்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் வந்த பிறகும் நீண்ட நேரமாகியும் மக்களவை உறுப்பினரான நவாஸ் கனி வரவில்லை […]

கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த தொடங்கிய அந்த நிமிடம் முதலே தமிழகத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. சற்றேற குறைய 17 மணி நேரம் நடைபெற்ற அந்த சோதனையின் முடிவில் புதன்கிழமை நள்ளிரவு 2 மணி அளவில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையினரால் கைது செய்யப்படுவதற்கான ஆணையை அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழங்கினர். ஆனால் அவர் அந்த ஆணையைப் பெற மறுத்ததால் […]

காவேரி மருத்துவமனை மருத்துவர்களை தொடர்பு கொண்டு அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்த விவரங்களை சேகரித்து வருவதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையின் கைது செய்துள்ளனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்ற போது செந்தில்பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு […]