இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தலையில் ஏற்பட்ட காயத்துக்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நல்லகண்ணு ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மூத்த தலைவர் ஆவார். இவர் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளராக இருந்தவர். 1924-ம் ஆண்டு பிறந்தவர். தமிழகத்தின் மூத்த அரசியல் கட்சி தலைவராக உள்ளவர். இந்த நிலையில் கடந்த 22-ம் தேதி வீட்டில் தவறி கீழே விழுந்ததில் தலையில் […]

மதுரையில் சமீபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த மாநாட்டிற்கு வந்த விஜய்யை காண, லட்சக்கணக்கான தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் கூடியிருந்தனர். இந்த மாநாட்டிற்கு மொத்தம் 2500 ஆண் பவுன்சர்களும், 500 பெண் பவுன்சர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேடையில் யாரும் ஏறிவிடக் கூடாது என்பதற்காக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால், சில ரசிகர்கள் ஆர்வத்தால் கட்டுப்பாடுகளை மீறினர். […]

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், மதுரையில் 2-வது மாநில மாநாடு நடத்தி முடித்தப் பின் கொண்டாட்டத்தில் உள்ளார். இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த மாநாட்டில் விஜய் பேசியது பல அரசியல் கட்சியினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முதலமைச்சர் முக.ஸ்டாலின் பிரதமர் மோடி குறித்து இந்த மாநாட்டில் நேரடியாகவும், கடுமையாகவும் விமர்சனம் செய்தார். அதேபோல், திமுக – பாஜகவை தொடர்ந்து தற்போது […]

தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யக் கூடாது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தனியாரிடமிருந்து ரூ.80,000 கோடி செலவில் 2,200 மெகாவாட் மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்முதல் செய்ய இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி பல கேள்விகளை எழுப்புகிறது. ஆட்சி அமைப்பதற்கு முன்பு ‘தனியாரிடம் மின்சாரம் வாங்குவதை குறைத்து மாசற்ற மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 20,000 மெகாவாட் […]

அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 30-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளை பல்வேறு அரசியல் கட்சிகள் இப்போதே தொடங்கியுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தொகுதிவாரியாக பிரச்சாரத்தையே கடந்த ஜூலை மாதம் தொடங்கிவிட்டார். 3-ம் கட்ட பிரச்சாரத்தை நேற்றுடன் நிறைவு செய்த பழனிசாமி. செப்டம்பர் 1-ம் தேதி முதல் 4-ம் கட்ட பிரச்சாரத்தை மதுரையில் தொடங்குகிறார். இதனிடையே வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி […]

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் ஆட்டோ வாங்க ரூ.75,000 மானியம் வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்; என்று தலைப்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாநில அளவில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று திருச்சி காந்தி மார்க்கெட் அருகே வெல்லமண்டி வீதியில் பேசிய அவர்: திருச்சி மாநகராட்சிக்கு அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி […]

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.. அந்த வகையில் இன்று அவர் திருச்சியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. அப்போது மக்களிடையே உரையாற்றிய அவர் “ திமுக ஆட்சியில் கட்டுமானப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்துவிட்டது.. கனவில் தான் வீடு கட்டும் நிலை உள்ளது. கட்டுமானப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என திமுக […]

தமிழக பாஜக முன்னாள் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் “ வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சாலைப்பேட்டை பகுதியில் தனியாருக்கு சொந்தமான வீட்டின் கட்டிடத்தில், கடந்த 5 ஆண்டுகளாக, போதிய வசதிகள் இன்றி இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில், 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக, இந்தக் கட்டிடத்தின் ஒரு பகுதி சுவர், இன்று அதிகாலையில் […]

மதுரை மாநில மாநாட்டிற்கு நன்றி தெரிவித்து விஜய் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் “ என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,வணக்கம். மகோன்னதம் கொண்டு மனம் நிரம்பித் ததும்பி வழியும் மறக்க முடியாத் தருணங்கள் தந்த மதுரை மாநாட்டு வெற்றிக்கான நன்றிக் கடிதம் இது. விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடான ‘வெற்றிக் கொள்கைத் திருவிழா’ என்னை நெகிழ வைத்தது. […]