நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி (74) திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று (அக்டோபர் 23) அதிகாலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பொன்னுசாமி மறைவு செய்தி திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் […]

அறுவடை செய்யப்பட்ட நெல் தொடர்மழையால் கூடுதலான ஈரப்பதம் இருப்பது தவிர்க்க முடியாதது. இதை உணர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும். பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் பருவ மழையின் விளைவாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் […]

விவசாயிகளிடம் பெறப்பட்ட நெல்லில், அரிசி அரவையின் போது கலக்கப்பட வேண்டிய செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி அளிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் தான் நெல் மூட்டைகள் தேங்க காரணம் என தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; தமிழகத்தில் இந்த ஆண்டு வரலாற்றில் இல்லாத வகையில் நெல் விளைச்சல் அதிகம். தஞ்சாவூர் மாவட்டத்தை பொருத்தவரையில் இந்த ஆண்டு 299 நேரடி நெல் கொள்முதல் […]

தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்ட விவசாயிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சந்திக்கிறார். கடந்த 16-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் அன்று முதல் 3 நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. கடந்த 19-ம் தேதி மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் இருந்து திருவாரூர், தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பாதிப்புகள், […]

பீகார் தேர்தல், 2025 தேர்தலுக்கு முந்தைய மற்றும் வாக்குப்பதிவு நாளில் அச்சு ஊடக விளம்பரங்களுக்கு எம்சிஎம்சி மூலம் முன்கூட்டிய சான்றிதழ் பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2025 பீகார் சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான அட்டவணையையும், 8 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு தேதி நவம்பர் 6, 2025 (வியாழக்கிழமை), நவம்பர் 11, 2025 (செவ்வாய்க்கிழமை) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நியாயமான பிரச்சார சூழலை உறுதி செய்வதற்காக, […]

தொடர் மழையால் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அரசு சார்பில் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார் விருதுநகர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களுடன் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் […]

கல்வி உரிமைச் சட்டத்தின்படியான மாணவர் சேர்க்கையை புதிதாக நடத்தி, தகுதியுடைய அனைவரும் பயனடைவதை  தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்ப்பதற்கான தமிழக அரசு விடுத்த அறிவிக்கை படுதோல்வி அடைந்துள்ளது. தனியார் உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில்  இந்தத் திட்டத்தின்படி  சேர்க்கப்பட வேண்டிய இடங்களில் பாதியளவுக்கும் […]

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது பேசிய அவர் “ தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவன் நினைத்தாலும் தவெகவை காப்பாற்ற முடியாது.. அதிமுக – தவெக கூட்டணி சேர வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம்.. எனவே தகுந்த நேரத்தில் சரியான முடிவு எடுப்பவர் தான் சரியான தலைவர்.. சரியான முடிவை எடுக்காததால் தான் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அரசியல் எதிர்காலம் […]