தமிழகத்தில் ஓய்வுபெற்ற 42 பத்திரிகையாளர்களுக்கு, மாதம் ரூ.12 ஆயிரம் ஓய்வூதியத்துக்கான ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பேரிடர் காலங்களிலும் புயல், மழை, பெருவெள்ளத்தால் பொது மக்கள் பாதிக்கப்படும்போதும் பெரும் விபத்துகள், தொற்று நோய்ப் பரவல்கள் முதலிய சோதனைக் காலங்களிலும் இரவு பகல் பாராது ஓய்வின்றி பணி செய்து, உண்மைச் செய்திகளைத் திரட்டி மக்களிடம் கொண்டு சேர்த்து வரும், பத்திரிகையாளர்களின் […]

தமிழக காவல் துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியின் பொறுப்பை கூடுதலாக அபய்குமார் சிங்குக்கு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக உள்ள வெங்கடராமனுக்கு நேற்று முன்தினம் சுவாசிப்பதில் சிரமம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு சில மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டிஜிபியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் […]

அதிமுக பொதுக்குழுவில் பேசிய அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2026 தேர்தல் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும் என்று தெரிவித்திருந்தார்.. மேலும் திமுகவின் ஊழல் அமைச்சர்கள் உள்ளே போவார்கள் என்றும் கூறியிருந்தார்.. அவரின் இந்த கருத்துக்கு இயற்கை வளம், நீதிமன்றம், சிறைத்துறை அமைச்சர் ரகுபதி காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் ”சிறப்பான ஆட்சியைக் கொடுத்தோம்’ எனச் சோற்றுக்குள் பூசனிக்காயை மறைத்திருக்கிறார் பழனிசாமி. இரண்டு […]

2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. திமுக தங்கள் வலுவான கூட்டணி உடன் ஆட்சியை தக்க வைக்க முனைப்புடன் செயல்பட்டு […]

சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு – செயற்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் பேசினார்.. அப்போது 2026 தேர்தல் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.. தொடர்ந்து பேசிய அவர் “ திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை,  மின்சாரத்துறை, டாஸ்மாக் என அனைத்திலும் ஊழல் நடந்துள்ளது.. இப்போது நகராட்சி நிர்வாக துறையில் நடந்த ஊழல் குறித்து அந்த துறை அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் […]

சென்னை வானகரத்தில் நடைபெறும் அதிமுக செயற்குழு – பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ தீய சக்தி திமுகவை தமிழகத்தில் இருந்து அடியோடு அகற்றவே எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கினார்.. அமைதி, வளம், வளர்ச்சி என்ற ஜெயலலிதாவின் கொள்கையே அதிமுகவின் தாரக மந்திரம்.. நாட்டு மக்களை தான் ஜெயலலிதா தனது வாரிசாக பார்த்தார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சி காலத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் […]

தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திக்க அதிமுக தீவிரமாக தயாராகி வருகிறது.. தேர்தலை ஒட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.. இந்த நிலையில் சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதில் பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 4,500 பேர் […]

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று இரவு திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். சித்த மருத்துவத்துக்கு பல்கலைக்கழகம் அமைப்பதற்கு 25 ஏக்கர் நிலம் மாதவரம் பால்பண்ணை பகுதியில் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக ரூ.2 கோடியில் அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவமனையில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான மசோதா, கடந்த 2022-ம் ஆண்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதல்வர் செயல்படுவார் […]