உரிமம் இல்லாத பார்கள் மூலம் பல்லாயிரம் கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், முதல்வரின் குடும்பத்துக்குப் பணம் சென்றதாக செய்திகள் வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சென்னையில் எதிர்க்கட்சித தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியார்களை சந்திதார். அப்போது பேசிய அவர்,”மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது. போக்குவரத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் பணம் பெற்றது தொடர்பாக ஏற்கனவே அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. செந்தில்பாலாஜி […]

அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி, அவரது மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகளில், நீதிபதி சக்திவேல் விலகியுள்ளார். சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால், நேற்றிரவு கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனது கணவரை அமலாக்கப் […]

உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பான் தப்பை செய்தவன் தண்டனை அனுபவிப்பான் என்பதை மூதாதையர்கள் கூறியுள்ளனர் இது யாராக இருந்தாலும் அமைச்சராக இருந்தாலும் அது பொருந்தும். தான் தூய்மையானவன் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு அவருக்கு உள்ளது ஆனால் இதற்கு திமுக துணை போக கூடாது. செந்தில் பாலாஜி நிரூபிக்கும் வரையில் அமைச்சர் பொறுப்பில் இருந்து அவர் விலகி இருக்க வேண்டும் , செந்தில் பாலாஜி யை அமைச்சரவையில் இருந்து தமிழக அரசு […]

மத்திய அரசு பட்ஜெட்டை தவிர புதுச்சேரி மாநிலத்திற்கு ரூ1,500 கோடியை மத்திய அரசு கொடுத்துள்ளது. உலக நாடுகள் இந்தியா மீது மரியாதை வைத்துள்ளது. சமூகநீதியை பற்றி ஸ்டாலின், நாராயணசாமி பேசினார்கள் ஆனால் பிரதமர் மோடியின் சமூக நீதிக்கு உண்மையான எடுத்துக்காட்டு ஓ.பி.கமிஷனுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் கொடுக்கப்பட்டது தான், பட்டியலின மற்றும் சிறுபான்மை இனமக்களை குடியரசு தலைவராக்கி பாஜக அழகுபார்த்தது. சமூக நீதி பேசும் தமிழகத்தில் பட்டியலின மக்கள் கோயிலுக்கு போக […]

அமைச்சர் செந்தில் பாலாஜி கைதை கண்டித்து கோவையில் கண்டன பொதுக்கூட்டம்.! திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் மதசார்பற்ற கட்சியின் தலைவர்கள் பங்கேற்பு – கோவையில் நடைபெற்ற செயற்குழுவில் அறிவிப்பு. கோவை டாடாபாத் அருகே உள்ள கோவை மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதை கண்டித்து அவசர செயற்குழு நடைபெற்றது மாநகர மாவட்ட செயலாளர் நா கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழுவில் 70-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இந்த […]

அமைச்சர் செந்தில் பாலஜிக்கு இன்று பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெறும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான முந்தைய அதிமுக ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் போக்குவரத்துத்துறை முறைகேடு குற்றச்சாட்டை அடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள், அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் இருந்து […]

சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி, போட்டியிட்டு தோல்வியை தழுவி நிலையில், அடுத்ததாக 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்றும் சில மாதங்களே உள்ள நிலையில், இப்போதே அனைத்து கட்சிகளும் யூகங்கள் வகுத்து தங்களுடைய கட்சிப் பணியை துவங்கியுள்ளனர். வேட்பாளர்கள் சேர்க்கை மற்றும் மாநாடு நடத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். ஓபிஎஸ் தரப்பில் சமீபத்தில் திருச்சியில் மிகப்பெரிய மாநாடு நடந்து முடிந்த நிலையில், […]

நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலையை கண்காணிக்க எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு சென்னை வரவுள்ளதாக் கூறப்படுகிறது. தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் வீட்டில் நேற்று அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும் சோதனை நடந்தது. அது போல் தலைமைச் செயலகத்தில் உள்ள செந்தில் […]

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி சுயநினைவோடு இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் வீட்டில் நேற்று அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும் சோதனை நடந்தது. அது போல் தலைமைச் செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அறையிலும் சோதனை நடந்தது. இதைத் தொடர்ந்து சென்னையில் […]

பாலாஜியின் கைது நடவடிக்கையை தொடர்ந்து சட்டவல்லுநர்களுடன்‌ முதல்வர்‌ ஸ்டாலின்‌ சென்னையில்‌ உள்ள தனது இல்லத்தில்‌ ஆலோசனை மேற்கொண்டுள்ளார்‌. அமைச்சர்‌ செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில்‌ அவசர ஆலோசனையில்‌ ஈடுபட்டு வருகிறார்‌. செந்தில்பாலாஜி முக்கிய துறைகளின்‌ அமைச்சராக இருப்பதால்‌, மாற்று ஏற்பாடுகள்‌ குறித்தும்‌ ஆலோசனையில்‌ ஈடுபட்டுள்ளதாக தகவல்‌ வெளியாகியுள்ளது. போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சென்னை வீடு உள்பட […]