இன்று காலை 10 மணி அளவில் அமைச்சர் செந்தில் பாலாஜி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார். போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சென்னை வீடு உள்பட இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் 20 மணி நேர விசாரணைக்குப் பிறகு இன்று நள்ளிரவு அமைச்சர் செந்தில் பாலாஜியை […]

அமலாக்கத் துறையின் சோதனை மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கரூர் மற்றும் சென்னை வீடுகளில் நடந்த சோதனை நிறைவடைந்தது. இன்று அதிகாலையில் சென்னை பசுமைவழிச்சாலை வீட்டிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்து அழைத்துச் செல்வதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் பன்னோக்கு […]

உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் செந்தில்பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று காலையிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டு நிலையில் அதிகாலை 2 மணி அளவில் விசாரணைக்காக கைது செய்ய அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர். வீட்டிலேயே செந்தில் பாலாஜிக்கு லேசான மயக்கம் ஏற்பட்ட நிலையில், நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. சோதனையின் […]

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வழங்கிய ஒரு பேட்டி அதிமுக வட்டாரத்தில் கடுமையான எதிர்ப்பை கிளப்பி இருக்கிறது. அந்த பேட்டியில் அண்ணாமலை தெரிவித்ததாவது தமிழகத்தில் பல்வேறு ஆட்சிகள் ஊழல் நிறைந்தவையாக இருந்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதனால் தான் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது நாட்டில் ஊழல் மிகுந்த மாநிலங்களில் தமிழகத்திற்கு முதல் இடம் என்று கூட சொல்லலாம் என அவர் கூறினார். […]

பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என அதிமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் நிர்வாகிகள் ஒன்று இணைந்து தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா தொடர்பாக அண்ணாமலை பேசியதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அண்ணாமலை தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் மேலிடத்தில் அதிமுக தலைமை புகார் வழங்கியிருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. இதற்கு சரியான தீர்வு வழங்கப்படவில்லை. என்றால் கூட்டணியை மறு பரிசீலனை செய்வது தொடர்பாக முடிவு செய்யப்படும் என்று எதிர்க்கட்சித் […]

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேச எந்த தராதரமும் யோக்கிதையும் அண்ணாமலைக்கு இல்லை என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த செய்தியாளர் சந்திப்பில், ”ஊழலைப் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாதவர் அண்ணாமலை. நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது கவுன்சிலராகவோ இல்லாத அண்ணாமலை மீது அவரது சொந்த கட்சிக்காரர்களே ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். சமுதாயத்தில் சாராயம் விற்பவர்கள், […]

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வழங்கிய ஒரு பேட்டி அதிமுக தரப்பை கொந்தளிக்க வைத்து இருக்கிறது. அதாவது அந்த பேட்டியில் அண்ணாமலை பேசியிருப்பதாவது, தமிழகத்தில் பல்வேறு ஆட்சிகள் ஊழல் நிறைந்தவையாக இருந்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதனால் தான் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது. நாட்டில் ஊழல் மிகுந்த மாநிலங்களில் தமிழகத்திற்கு முதலிடம் என்று கூட சொல்வேன் என்று அவர் கூறியிருக்கிறார். இந்த நிலையில் […]

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியால் பரபரப்பு ஏற்பட்டது. மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மற்றும் கரூரில் உள்ள அவரது இல்லங்களில் மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்புடன் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும் […]

குரூப் 4 பணியிடங்களை இரு மடங்காக அதிகரிக்க வேண்டும் என்றும் ஆண்டுக்கு 1.5 லட்சம் அரசு வேலை வழங்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ஆம் நாள் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கையை, 10,117 இடங்கள் என்பதில் இருந்து உயர்த்த வேண்டும் என்ற […]

சென்னை பசுமை வழி சாலையில் இருக்கின்ற அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை 8.30 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் துணையுடன் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வங்கி பரிவர்த்தனை குறித்து விசாரணை மேற்கொள்ள எஸ்பிஐ வங்கி அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டனர் அமைச்சர் செந்தில் பாலாஜி நடை பயிற்சிக்காக வெளியே சென்று இருந்த நிலையில் அமராக்கத்துறை […]