அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் உட்பட 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் சில இடங்களில் ஒரு வாரத்திற்கும் மேலாக சோதனைகள் நீடித்த நிலையில், தற்போது சென்னையில் பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லம், கரூரில் […]

ஸ்மார்ட்போன் திட்டத்தின்கீழ், இலவச ஸ்மார்ட்போன்கள் மற்றும் 3 ஆண்டுகளுக்கு இலவச இன்டர்நெட் வழங்கப்படும் என்று முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் பிரதாப்கரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் அசோக் கெலாட் உரையாற்றினார். அப்போது, ராஜஸ்தானில் கடந்த 70 ஆண்டுகளில் 250 கல்லூரிகள் மட்டுமே திறக்கப்பட்டன. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் 130 பெண்கள் கல்லூரிகள் உள்பட 300 […]

வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசுவதை இனி வருங்காலங்களில் அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; அகில உலகத் தமிழர்கள் போற்றும் ஒப்பற்ற ஒரே அரசியல் தலைவர் ஜெயலலிதா பற்றியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியைப் பற்றியும் தரக்குறைவாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளது அவரது […]

எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்புக்கான அகில இந்திய பொதுக் கலந்தாய்வு நடத்தும் முடிவை திரும்பப்பெற வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினரகன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கையில் ஒட்டு மொத்தமாக தேசம் முழுவதற்கும் கலந்தாய்வு நடத்தும் பட்சத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவம் படிக்கவேண்டும் என்ற ஆசையும், எதிர்பார்ப்பும் நிராசையாகிவிடும் ஆபத்துகள் உள்ளன. மத்திய அரசே பொதுக் கலந்தாய்வு நடத்துவதால் தமிழ்நாட்டில் […]

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய் கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி திரும்பிய மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கடந்த இரண்டு ஆண்டு தேர்ச்சி விகிதம் எப்படி இருந்தது என்று அனைவருக்கும் தெரியும். தற்போது அதனை நடப்பாண்டு முறியடிக்கும் விதமாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இலக்கு நிர்ணயம் செய்து கொண்டு செயல்பட […]

திருச்சி திருவெறும்பூரில் தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் மணியரசனின் 75வது பிறந்தநாள் விழா நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு மணியரசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில், திருவெறும்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “பிரபாகரனுக்கு பிறந்தநாள் கொண்டாடுவதில் […]

முன்னதாக வேலூர் நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா.. அண்ணாமலை தமிழ்நாட்டில் பாஜகவை வழிநடத்துவதைப் பார்த்தால், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் 25 சீட்டுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. கிராமங்கள் எல்லாம் பாஜகவை கொண்டு சென்ற அண்ணாமலைக்கு பாராட்டுக்கள் என்று அமித் ஷா இந்த நிகழ்ச்சியில் பாராட்டி பேசினார். அண்ணாமலைக்கும் எல் முருகனுக்கும் உறவு நன்றாக இல்லை என்று கூறப்படும் நிலையில்தான் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அண்ணாமலையை […]

இலங்கை கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டைமானுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கையின் கிழக்கு மாகாணம் சிங்களம், தமிழ், இஸ்லாமியம் என மூன்று தரப்பு மக்களையும் உள்ளடக்கிய பகுதியாகும். தற்போதைய சூழ்நிலையில் கிழக்கு மாகாண சட்டப்பேரவையும், உள்ளூராட்சி மன்றங்களும் காலாவதியாகி, தேர்தல் நடத்தப்படாமல் ஆளுநர் ஆட்சி நடைபெற்று வருகிறது.இந்நிலையில், இளம் வயதில் ஊவா மாகாண முதலமைச்சர், அமைச்சர், பிரதமரின் இணைப்பு […]

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட அம்மாநில ஆளுநர் தலைமையில் மத்திய அரசு அமைதிக் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவில், மாநில முதலமைச்சர், சில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்தக் குழுவில் முன்னாள் அரசு ஊழியர்கள், கல்வியாளர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் பல்வேறு இனக்குழுக்களின் பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனர்.சுமுகமான உரையாடல், முரண்படும் கட்சிகள்/குழுக்கள் இடையே பேச்சுவார்த்தைகள் உட்பட, மாநிலத்தின் பல்வேறு இனக்குழுக்களிடையே […]

டெல்லியில் நடைபெற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆண்டு விழா நிகழ்வில், தனது மகள் சுப்ரியா சுலேவை செயல் தலைவராக சரத் பவார் அறிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், மூத்த தலைவர்களான சுப்ரியா சுலே மற்றும் பிரபுல் படேல் ஆகியோரை கட்சியின் செயல் தலைவர்களாக அறிவித்துள்ளார். சரத் பவாரின் மருமகனும், மகாராஷ்டிர சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவருமான அஜித் பவார் முன்னிலையில், டெல்லியில் நடந்த கட்சியின் நிறுவன நாள் […]