இலங்கை கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டைமானுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கையின் கிழக்கு மாகாணம் சிங்களம், தமிழ், இஸ்லாமியம் என மூன்று தரப்பு மக்களையும் உள்ளடக்கிய பகுதியாகும். தற்போதைய சூழ்நிலையில் கிழக்கு மாகாண சட்டப்பேரவையும், உள்ளூராட்சி மன்றங்களும் காலாவதியாகி, தேர்தல் நடத்தப்படாமல் ஆளுநர் ஆட்சி நடைபெற்று வருகிறது.இந்நிலையில், இளம் வயதில் ஊவா மாகாண முதலமைச்சர், அமைச்சர், பிரதமரின் இணைப்பு […]

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட அம்மாநில ஆளுநர் தலைமையில் மத்திய அரசு அமைதிக் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவில், மாநில முதலமைச்சர், சில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்தக் குழுவில் முன்னாள் அரசு ஊழியர்கள், கல்வியாளர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் பல்வேறு இனக்குழுக்களின் பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனர்.சுமுகமான உரையாடல், முரண்படும் கட்சிகள்/குழுக்கள் இடையே பேச்சுவார்த்தைகள் உட்பட, மாநிலத்தின் பல்வேறு இனக்குழுக்களிடையே […]

டெல்லியில் நடைபெற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆண்டு விழா நிகழ்வில், தனது மகள் சுப்ரியா சுலேவை செயல் தலைவராக சரத் பவார் அறிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், மூத்த தலைவர்களான சுப்ரியா சுலே மற்றும் பிரபுல் படேல் ஆகியோரை கட்சியின் செயல் தலைவர்களாக அறிவித்துள்ளார். சரத் பவாரின் மருமகனும், மகாராஷ்டிர சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவருமான அஜித் பவார் முன்னிலையில், டெல்லியில் நடந்த கட்சியின் நிறுவன நாள் […]

தமிழகத்தில் உள்ள 12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம்‌ கிடையாது என அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில்‌ உடற்கல்வி, ஓவியம்‌, கணினி உள்ளிட்டஎட்டு பாடங்களில்‌, பகுதி நேரஆசிரியர்களாக, 12 ஆயிரம்‌ பேர்‌ பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாத தொகுப்பூதியமாக 10ஆயிரம்‌ ரூபாய்‌ வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்‌ தமிழ்நாட்டில்‌ உள்ள 12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம்‌ கிடையாது என அரசு வெளியிட்ட […]

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் அமைதியை கொண்டு வரும் நடவடிக்கையாக அமைதிக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. மணிப்பூர் ஆளுநர் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த அமைதிக் குழுவில், மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும் சில அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், தலைவர்கள் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.மாநிலத்தின் பல்வேறு இனக்குழுக்களிடையே சமாதான நடவடிக்கை மூலம் அமைதியைக் காக்கவும், விவாதங்களை நடத்தவும், நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் இந்த அமைதிக் குழு முக்கிய பங்கு […]

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த சின்னமுத்தூர் பகுதியில் அதிமுக கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சிக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் வளர்ச்சி அடைந்துள்ளது. லஞ்சம் கொடுக்காமல் எந்த கோரிக்கையும் நிறைவேறாது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற இரண்டு ஆண்டு காலத்தில் தமிழ்நாடு முழுவதும் கொலை கொள்ளை […]

தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன காரணம் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். உபர், ஓலா நிறுவனங்கள் மூலம் இயக்கப்படும் கார், ஆட்டோக்கள் வாடகை கட்டணத்தில் பயணம் செய்யும் வசதி தற்போது மிகவும் பிரபலமாகி உள்ளது. பஸ் ஸ்டாண்டுகள், ரயில்வே ஸ்டேஷன்கள், ஏர்போர்ட்கள் போன்ற இடங்களில் இந்த வசதியை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இப்போது ரேபிடோ பைக் வசதியும் தரப்பட்டு வருகிறது. […]

நடிகர் விஜய் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், தான் நடிகர் விஜய் டிசம்பரில் அரசியலுக்கு வருகிறார். முதல்வர் ஸ்டாலினுக்கு செக் வைக்கும் வகையில் அவர் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கிறார் என அதிமுக பிரமுகர் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற பேச்சு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்தவகையில், விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில் ஆன்லைனில் உறுப்பினர் சேர்க்கை […]

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் குறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் குறித்து, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அதுபோன்ற மிரட்டல்கள் வராது என்று துணைத் தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருக்கு […]

பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை மாநில உடற்கல்வி முதன்மை ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சமிபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை; டெல்லியில்‌ நடைபெற இருக்கும்‌ பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டிகளில்‌ கலந்துகொள்ள தமிழ்நாடு சார்பாக அணியை தேர்வு செய்யாமல்‌, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மாணவர்களை புறக்கணித்தது குறித்து, கேள்வி எழுப்பியிருந்தார். தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் மாணவர்கள் கலந்து கொள்வதற்குரிய தகவலை சரியாக தெரிவிக்காத தமிழ்நாடு முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணணை பள்ளிக்கல்வித்துறை […]