திமுக அரசு இருக்கும் கொஞ்ச நாட்களிலாவது சட்டம் ஒழுங்கைக் காக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நேற்றைய தினம் பவானி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற எழுச்சிப் பயணப் பொதுக்கூட்டத்தில், கடந்த 48 மணி நேரங்களில் நடைபெற்ற பல்வேறு சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்தான செய்திகளைப் பட்டியலிட்டு, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டதை சுட்டிக்காட்டினேன். இன்றைய […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம், 12, 19 ஆகிய தேதிகளில் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார். விஜய்யிடம் சுமார் 12 மணி நேரங்களுக்கு மேல் விசாரணை […]
மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்ற இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு அவர்களின் பயணத்தைச் சுற்றி சர்ச்சை உருவாகியுள்ளது. மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சென்று வரவேற்காதது மட்டுமல்லாமல், ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சில அடிப்படை வசதிகளிலும் குறைபாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக அவருக்காக ஒதுக்கப்பட்ட கழிவறையில் தண்ணீர் இல்லாதது மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் செல்லும் சாலைகளில் குப்பைகள் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் குறித்து […]
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என மும்முரமாக பணியாற்றி வருகின்றன.. இந்த சூழலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிப்பு இன்னும் வெளிவராமல் தாமதமாகி வருகிறது.. அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. ஆனால் எந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் வழங்க வேண்டும் […]
தவெக சார்பில் இன்று மாமல்லபுரத்தில் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் மகளிர் தின விழா நடைபெற்றது.. இந்த விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் யானை தொடர்பான குட்டிக்கதை உடன் தனது உரையை தொடங்கினார்.. பெண்களுக்கான வாக்குறுதிகளை விஜய் அளித்தார்.. மகளிருக்கு மாதம் ரூ.2,500, ஆண்டுக்கு 6 இலவச கேஸ் சிலிண்டர்கள், திருமணத்திற்கு 1 சவரவன் தங்கம், அனைத்து […]
தவெக சார்பில் இன்று மகளிர் தின விழா நடைபெற்றது.. இதில் தவெக தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்.. அப்போது பெண்கள், குழந்தைகள், முதியோர் நலன் பாதுகாப்பில் அக்கறை செலுத்துவதே தவெகவின் அடிப்படை நிலைப்பாடுகளில் ஒன்று.. அதற்கென தனி இலாகா உருவாக்கப்படும். அந்த இலாகா எனது நேரடி கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பிலும் இருக்கும்.. இதுவே நமது தேர்தல் வாக்குறுதி. 60 வயது வரை உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் இனி ரூ.2500 […]
தவெக சார்பில் இன்று மாமல்லபுரத்தில் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் மகளிர் தின விழா நடைபெற்றது.. இந்த விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் யானை தொடர்பான குட்டிக்கதை உடன் தனது உரையை தொடங்கினார்.. அப்போது “ ஒரு ஊரில் ஒரு கோயில் யானை இருந்ததாம்.. அதை யாராலும் ஏமாற்ற முடியாதாம்.. ஆனால் அந்த ஊரில் இருந்த ஒருவர் […]
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் திமுக தலைமை கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.. திமுக கூட்டணியில் இதுவரை இல்லாத அளவுக்கு 26 கட்சிகள் இணைந்துள்ளன.. மறுபுறம் அதிமுக […]
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.. தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஆளுங்கட்சியான […]
மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய முதல்வர் ஸ்டாலின் வெட்டிப்பெருமை பேசிக் கொண்டிருக்கிறார் என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சாடி உள்ளார்.. தனது எக்ஸ் பக்கத்தில் இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் கிராமத்திற்குள், இருசக்கர வாகனங்களில் அரிவாள் மட்டும் பட்டாக்கத்திகளுடன் வந்த ஒன்பது மர்மநபர்கள், கண்ணால் கண்டவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதே […]

