இது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மருத்துவ பணியாளர்‌ தேர்வு வாரியம்‌ நடத்திய தேர்வில்‌ முறையாக தேர்ச்சி பெற்று 13,000 செவிலியர்கள்‌ அரசு மருத்துவமனைகளில்‌ செவிலியர்களாக பணியாற்றி வருகிறார்கள்‌. இவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆணையில்‌, முதல்‌ இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்த முறையில்‌ பணியாற்ற வேண்டும்‌ என்றும்‌பின்னர்‌ அவர்களின்‌ பணி நிரந்தரம்‌ செய்யப்படும்‌ என்றும்‌ குறிப்பிடப்பட்டுள்ளதாக செவிலியர்கள்‌ தெரிவிக்கின்றனர்‌. ஆனால்‌ எட்டு ஆண்டுகளுக்கு மேல்‌ பணியாற்றியும்‌ மேற்படி 13,000 செவிலியர்களில்‌ […]

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் அருகே குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ், தரணிதரன் மற்றும் சங்கர் உள்ளிட்டோர் உயிரிழந்தனர். இந்த செய்தியை கேட்டு மிகுந்த மன வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். தற்சமயம் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கு அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் இந்த […]

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் அனைத்து துறைகளிலும் பல அதிரடியான மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அதே நேரம் பொதுமக்களின் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த சூழ்நிலையில், கட்சி வேலைகளை பொறுப்போடு செய்யவில்லை என்றால் மாற்றப்படுவீர்கள் என்று மாவட்ட செயலாளர்களுக்கு தமிழக முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இணையதளம் மூலமாக திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பேசிய […]

ஒட்டுமொத்தமாக 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது இந்த தேர்தலில் 73.19 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை 8 மணி அளவில் எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிமிடம் முதலே காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வந்தது. அந்த மாநிலத்தில் பெரும்பான்மைக்கு 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில் 135 தொகுதிகளை […]

சமீபத்தில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரின் சந்திப்பு தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பு தொடர்பாகவும் எதிர்கால அரசியல் திட்டம் தொடர்பாகவும் டிடிவி தினகரன் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி வழங்கினார். அப்போது அவர் தெரிவித்ததாவது பன்னீர்செல்வம் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் அதிமுகவிலிருந்து நீக்கபட்டவுடன் சையது கான் என்ற எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் நாங்கள் […]

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 90 நகராட்சித் தலைவர் பதவிகள் மற்றும் 623 வார்டுகளைத் தவிர 17 மாநகராட்சிகளின் மேயர் இடங்களையும் கைப்பற்றியது. கடந்த உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்களின் போது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியிடம் பாஜக தோல்வியடைந்த மீரட் மற்றும் அலிகார் ஆகிய இடங்களிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இது தவிர, முனிசிபல் கார்ப்பரேஷன் ஆன பிறகு இந்த ஆண்டு […]

விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கின் விசாரணையை முடித்து ஒரு மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த வேதா அருண் நாகராஜன் என்பவர் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் விசிக தலைவர் திருமாவளவனை சந்திக்க கட்சி அலுவலகத்திற்கு சென்ற பொழுது அங்கு இருந்த வீரப்பன் என்பவர் உள்ளிட்ட10 பேர் தன்னை தாக்கியதாகவும், 2 லட்சம் […]

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் மாலை 4 மணி நிலவரப்படி 86 தொகுதிகளில் வெற்றி மற்றும் 50 தொகுதிகளில் முன்னிலையுடன் காங்கிரஸ் உள்ளது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. […]

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தில் நேரில் மூழ்கி பலியானவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு நிதி உதவி அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம் புதூர் வட்டம் சிவலார்பட்டி கிராமம் தெற்கு தெருவில் வசித்து வந்த முருகேசன் என்பவரின் மகன்கள் மகேஸ்வரன் (12), அருண்குமார் (9) ஆகியோர் மற்றும் சுதன் த/பெ.கார்திக்கேயன் உள்ளிட்டோர் நேற்று மாலை சிவலார்பட்டி கண்மாயில் குளிக்க சென்றனர். அப்போது […]

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்தமாக இருக்கின்ற 224 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சியின் 136 தொகுதிகளில் முன்னிலை பெற்று இருக்கிறது. ஆளுங்கட்சியான பாஜக 63 தொகுதிகளில் மட்டும் தான் முன்னிலையில் இருக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 21 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான […]