கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 10-ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 58,545 வாக்குப்பதிவு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது.73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த நிலையில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. காலை 10 மணி முதல் முன்னிலை விவரம் வெளியாகி 12 மணிக்குள் பெரும்பாலான முடிவுகள் […]

சேலம் மாவட்டம் ஓமலூரில் இருக்கின்ற அதிமுக கட்சி அலுவலகத்தில் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து, அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஒன்றிணைந்து இருப்பது மாயமானும்,மண் குதிரையும் ஒன்று சேர்ந்து இருப்பதை போல உள்ளது என்று தெரிவித்திருக்கிறார். அரசியல் ரீதியாக என்னை எதுவும் செய்ய இயலவில்லை என்பதற்காக மிலானி என்ற திமுக கட்சியைச் சேர்ந்தவர் […]

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து, நாளை வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில், உடுப்பி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 224 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு நேற்று முன்தினம் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 72.67 சதவீத வாக்குகள் பதிவாகின. மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தி முடிக்க 440 கோடி ரூபாய் செலவானதாக தகவல் வெளியாகியுள்ளது. 50 ஆயிரத்துக்கும் அதிகமான மையங்களில் பதிவான […]

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் சேவைக்கான “QR CODE” மென்பொருள் செயலியை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார். தமிழகம் முழுவதும் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் சேவைக்கான “QR CODE” மென்பொருள் செயலியை தொடங்கி வைத்து, ஈரக்கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரத்திற்கு ‘செழிப்பு’ என பெயரிட்டு விற்பனைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைக்க உள்ளார். […]

தமிழக அமைச்சரவையில் இருந்து பழனிவேல் தியாகராஜன் நீக்கப்பட்டால் அவரால் இன்னும் ஏராளமான விஷயங்கள் வெளியாகும் என்பதால் அவரை நீக்காமல் துறை மாற்றம் மட்டும் செய்திருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். இது குறித்து இன்று சேலத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, திமுக அரசியல் ஊழல் தொடர்பாகவும், நிதி அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ தொடர்பாகவும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தெளிவாக கூறியிருக்கிறோம். […]

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாக்காக்கள் தற்போது மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் அமைச்சர் தங்கம் தென்னரசு நிதி மேலாண்மை மனிதவள மேலாண்மை ஓய்வூதியம் மற்றும் புள்ளியியல் உள்ளிட்ட துறைகளுக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் ஏற்கனவே வகித்து வந்த தொல்லியல் துறையும் அவரை கவனிப்பார் என்று கூறப்பட்டிருக்கிறது தங்கம் தென்னரசு கவனித்து வந்த தமிழ் வளர்ச்சித் துறை செய்தி துறை அமைச்சர் சாமிநாதனுக்கு கூடுதலாக […]

முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றது. முக.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றப் பிறகு அவரது அமைச்சரவை 3-வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்த பிறகு 2022 மார்ச் மாதம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர், போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மீண்டும் ஒருமுறை […]

மின்வாரிய அலுவலர்களுக்கும், ஊழியர்களுக்கும் 6% ஊதிய உயர்வு வழங்குவது என அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்துறை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் 19 மின்வாரிய தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில், 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்குவது என உடன்பாடு எட்டப்பட்டது. […]

பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என மூத்த தலைவர் எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் நேற்று முடிவடைந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டும் வேறு எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்து போட்டியிடவில்லை. அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்று இரு கட்சிகளும் நம்பிக்கை தெரிவித்தன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியானதில் பெரும்பாலும் காங்கிரசுக்கு […]

ஆளுநர் மாளிகையில் இன்று அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா பதவியேற்க உள்ளார். தமிழக பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையின் பேரில், அமைச்சர்கள் குழுவில் இருந்து நீக்கப்பட்டார். முதல்வரின் மற்றொரு பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னார்குடியில் இருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த டி.ஆர்.பி.ராஜாவை அமைச்சரவையில் சேர்க்க ஒப்புதல் அளித்தார். இன்று காலை 10.30 மணிக்கு ராஜ்பவனில் அமைச்சராக பதவியேற்பு விழா நடைபெறும் என நடைபெறும் என […]