அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்ய திட்டமிட்டுள்ளேன் என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் நடந்த ‘சஹ்கார் சம்வாத்’ நிகழ்ச்சியில் பேசிய அவர், பொது வாழ்க்கையிலிருந்து விலகியவுடன், இயற்கை விவசாயத்தில் கவனம் செலுத்தவும், வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் போன்ற இந்து நூல்களைப் படிக்க அதிக நேரம் செலவிடவும் விரும்புவதாகக் கூறினார். இயற்கை வேளாண்மை என்பது ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் மிகவும் உதவியாக இருக்கும் ஒரு […]

பாஜகவின் டப்பிங் வாய்ஸில் பேசிய பழனிசாமி, தற்போது பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸில் பேசுகிறார் என்று முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் ரூ.846 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின் பல நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அப்போது கலைஞர் கருணாநிதியின் ஆட்சியின் நீட்சி தான் இந்த திராவிட மாடல் ஆட்சி என்று முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். திருவாரூர் என்றாலே, தேரும், கலைஞரும் தான் நினைவுக்கு வரும்.. தமிழ்நாட்டில் […]

தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு மானியம் வழங்க மறுப்பதா? என்று அக்கட்சி தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார். தவெக தலைவர் விஜய் திமுக அரசை கண்டித்து தனது சமூகவலைதள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அந்த பதிவில் “ மீனவ நண்பர்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு மானியம் வழங்க மறுப்பதா? எதேச்சதிகாரப் போக்கில் நடந்துகொள்ளும் முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் தலைமையிலான […]

விசிகவுக்கு தலித் அல்லாத சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு பொதுச்செயலாளர் பதவியை வழங்க திருமாவளவன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் ஜூலை 4 ஆம் தேதி விசிகவின் நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே விசிக தலைவர் திருமாவளவன், “இன்றைய கூட்டத்தில் கூட்டணி பற்றியோ திமுகவிடம் எத்தனை சீட் கேட்க வேண்டும் என்பது பற்றியோ பேச வேண்டாம். தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கின்றன.. அதனால் இவற்றை […]

தமிழக வெற்றிக் கழகம் என்றஅரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள விஜய், 2026-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை குறிவைத்து செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் செயற்குழு கூட்டத்தை கூட்டினார். 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக விஜய் நியமிக்கப்படுவதாக தவெக செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு தவெக தலைமையில் கூட்டணி அமைக்க ஏற்றுக்கொண்ட கட்சிகளுடன் மட்டும் கூட்டணி வைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் […]

ஆகஸ்ட் முதல் வாரத்தில் இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்யக் கோரி மாபெரும் போராட்டம் நடத்துவேன் என்று சீமான் அறிவித்துள்ளார். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்காமல் விசாரணை கைதிகள் சிறையில் இருப்பது இங்கு தான் நடக்கிறது.. சிறை என்றால் சிறை காவலர்கள் கைதிகளை பாதுகாக்க வேண்டும்.. வழக்கு இருக்கு நீதிமன்றம் உள்ளது.. நாங்கள் குற்றவாளியா, நிரபராதியா என்பதை […]

பாமகவில் கடந்த சில நாட்களாக உள் கட்சி மோதல் நிலவி வரும் சூழலில் அன்புமணிக்கு எதிராக சகோதரி ஸ்ரீ காந்தி களமிறக்கப்பட்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சிநிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், கட்சியின் செயல் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. புதுச்சேரியில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் வெட்ட வெளிச்சம் ஆனது. ராமதாஸ் தனது மகள் வழி பேரனான முகுந்தன் […]

2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்து, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்‘ என்ற பெயரில், ஜூலை 23-ம் தேதி வரை கொங்கு மண்டலம், வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொள்கிறார். இப்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகவும், விரைவில் அறிவிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் பாஜக மற்றும் […]

2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்து, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்‘ என்ற பெயரில், நேற்று முதல் ஜூலை 23-ம் தேதி வரை கொங்கு மண்டலம், வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொள்கிறார். முதற்கட்டமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார். மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பிரசார பயண தொடக்க நிகழ்விற்கு, பாஜக உள்ளிட்ட கூட்டணி […]

வேலைவாய்ப்பு குறித்து பொய்யான தகவல்களை அளித்து மக்களை ஏமாற்ற டி.என்.பி.எஸ்.சி துணை போகக்கூடாது என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கடந்த ஓராண்டில் மட்டும் 17 ஆயிரம் பேருக்கும் கூடுதலானோருக்கு புதிதாக அரசு வேலைவாய்ப்பு வழங்கப் பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. கடந்த ஓராண்டில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே புதிய […]