கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன். கரூர் வேலுசாமிபுரத்தில் செப். 27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரித்து வருகிறது. முன்னதாக, கடந்த 17-ம் தேதி கரூர் வந்த சிபிஐ குழுவிடம், கரூர் டவுன் போலீஸார் மற்றும் […]

கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜயின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நெரிசல் ஏற்பட்டபோது விஜய் சம்பவ இடத்தில் இல்லாமல் சென்னை திரும்பியது குறித்து அவர் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அவர் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கினார். இந்தத் துயரச் சம்பவம் நடந்து ஒரு மாதமாகும் […]

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் இலக்கினை நிறைவேற்றும் நோக்கில், அக்கட்சியின் தேர்தல் பணி வியூகங்கள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இதற்கான அடித்தளமாக, மற்ற கட்சிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகளைத் திமுகவில் இணைக்கும் பணி தமிழ்நாடு முழுவதும் வேகம் எடுத்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ். […]

பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதாவை முதல்வர் ஸ்டாலின் திரும்பப் பெற வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; உயர்கல்வியை முற்றிலும் வணிகமயம் ஆக்குவதற்கு வழிவகுக்கும் ‘தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதாவை’த் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முதலமைச்சர் அவர்களை வலியுறுத்துகிறோம். நடந்து முடிந்த சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் தனியார் பல்கலைக்கழகங்கள் […]

பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக, தனது மகள் ஸ்ரீகாந்தியை ராமதாஸ் அறிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் பென்னாகரம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ தலைமை வகித்தார். கூட்டத்தில் பேசிய ராமதாஸ்: கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தருமபுரி மண்ணில் 4 பேருடன் தொடங்கப்பட்ட பாமக இன்று மாநிலம் முழுவதும் வளர்ந்து நிற்கிறது. இந்தக் […]

விசிக இருக்கும் கூட்டணி தான் வெற்றி பெறும் என அக்கட்சி நிர்வாகி சங்கத்தமிழன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுகவும், காங்கிரசும் இணைந்துள்ளன. இந்த கூட்டணியில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன. கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லாமல் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. ஆனால் கூட்டணியில் உள்ள பிரதான கட்சியான […]

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. கரூர் வேலுசாமிபுரத்தில் செப். 27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரித்து வருகிறது. முன்னதாக, கடந்த 17-ம் தேதி கரூர் வந்த […]

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது.. இதனால் அணைகள், ஆறுகள், ஏரிகள் போன்ற நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரி நீர் ஆங்காங்கே திறந்துவிடப்பட்டு வருகிறது.. அதன்படி சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த 22-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.. ஆனால் தனக்கு தகவல் தெரிவிக்காமல் தண்ணீர் திறந்துவிடப்பட்டதாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏவும், தமிழக காங்கிரஸ் கமிட்டி […]

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விஜய் நேரில் ஆறுதல் கூறாதது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தொடர்புகொண்டு விஜய் ஆறுதல் தெரிவித்தார். விரைவில் நேரில் சந்திப்பதாகவும் அவர் அப்போது உறுதியளித்தார். இந்த சூழலில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து, ஒரு தனியார் அரங்கில் வைத்து சந்திக்க […]