தமிழ்நாட்டில் உள்ள 52 திருக்கோயில்களில் பக்தர்கள் அமைதியான சூழலில் மனமுருக இறைவனை தரிசனம் செய்வதை உறுதி செய்யவும், நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றி கோயில்களின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கவும் செல்போன்கள் எடுத்துச் செல்வதற்கான தடை அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே பழனி, திருச்செந்தூர், மதுரை மீனாட்சி அம்மன், ராமேஸ்வரம் ஆகிய முக்கிய கோயில்களில் இந்த நடைமுறை செயல்பாட்டில் உள்ள நிலையில், தற்போது மேலும் 52 பெரிய கோயில்களுக்கு இது விரிவாக்கப்பட்டுள்ளது. சுவாமி சிலைகளைப் புகைப்படம் […]
ஆன்மீகம் & ஜோதிடம்
spirituality news | All the latest breaking news on spirituality. Daily news on spirituality from India and abroad. Articles on religion, ethics and conversations about spirituality from around the globe
நேபாளத்தில் சமீபத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய திடீர் வெள்ளப் பேரழிவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே, அந்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாலஞ்சோக் பகவதி அம்மன் சிலையில் இருந்து நீர்த்துளிகள் கசிந்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்ததாக பக்தர்கள் தெரிவித்துள்ள தகவல் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கவ்ரேபலாஞ்சோக் மாவட்டத்தின் மலை உச்சியில் அமைந்துள்ள இத்திருக்கோயில், கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் மன்னர் மானதேவா ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டதாகக் கருதப்படும் நாட்டின் மிக சக்திவாய்ந்த பழமையான சக்தி […]
தமிழக கோயில்களில் இறை தரிசனத்திற்குப் பிறகு வெண்ணிற திருநீறு வழங்குவதே மரபாக உள்ள நிலையில், அதற்கு முற்றிலும் மாறுபட்ட விதமாக ‘கருஞ்சாம்பல்’ பிரசாதம் வழங்கி உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது சேலம் – நாமக்கல் மாவட்ட எல்லையில் (திருச்செங்கோடு அருகே) அமைந்துள்ள காளிப்பட்டி கந்தசாமி திருக்கோயில். சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோயில் கொங்கு மண்டலத்தின் மிக முக்கிய முருகன் வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோயிலின் தலையாய […]
நெல்லை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், அனுமன் நதிக்கரையில் அமைந்துள்ள பணகுடி அருள்மிகு ஸ்ரீ ராமலிங்கசுவாமி திருக்கோயில், ராமாயண வரலாற்று தொடர்புகொண்ட புகழ்பெற்ற புண்ணியத் தலமாக விளங்குகிறது. பழங்காலத்தில் ‘பாண்டியபுரம்’ என அழைக்கப்பட்ட இவ்வூரின் அருகே, சஞ்சீவி பர்வதத்தை அனுமன் சுமந்து சென்றபோது அதன் துகள்கள் விழுந்து உருவானதாக கருதப்படும் புனித மகேந்திரகிரி மலை அமைந்துள்ளது இதன் தனிச்சிறப்பாகும். இலங்கையில் ராவணனை வதம் செய்த பின் நாடு திரும்பிய ஸ்ரீ […]
கடலூர் மாவட்டம், புதுச்சேரி-விழுப்புரம் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தென்னம்பாக்கம் கிராமத்தில், பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனாக சிமெண்ட் பொம்மைகளை செலுத்தும் புகழ்பெற்ற அருள்மிகு அழகு முத்து அய்யனார் திருக்கோயில் அமைந்துள்ளது. புதுச்சேரியிலிருந்து ஏம்பலம் அல்லது வில்லியனூர் மார்க்கமாக சென்றடையும் வகையில் அமைந்துள்ள இத்திருத்தலம், அதீத ஆன்மீக அதிசயங்களை உள்ளடக்கியது. கோயில் நுழைவு வாயிலில் பிரம்மாண்ட ஆலமரத்தின் நிழலில் கம்பீரமாக வீற்றிருக்கும் அழகு முத்து அய்யனாரின் வலது கையில் உள்ள பிரம்மாண்ட வாளில், […]
மகாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமான ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் அவதார தினமே ஆண்டுதோறும் ‘கிருஷ்ண ஜெயந்தி’ அல்லது ‘கோகுலாஷ்டமி’ என பக்தர்களால் பக்திப் பரவசத்துடன் கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் ‘கிருஷ்ண ஜென்மாஷ்டமி’ என அழைக்கப்படும் இந்நன்னாளில், பக்தர்கள் நாள் முழுவதும் விரதமிருந்து நள்ளிரவில் பாலகிருஷ்ணனை வழிபடுவது வழக்கம். கிருஷ்ணர் அவதரித்த மதுரா மற்றும் அவர் வளர்ந்த பிருந்தாவனத்தில் இத்திருவிழா பிரம்மாண்ட ஆன்மீக விழாவாகக் களைகட்டும். இந்து சாஸ்திரங்களின்படி, ஆவணி மாத தேய்பிறை […]
அஷ்டமா சித்திகளை வசப்படுத்தி, மூலிகை மருத்துவம், ரசவாதம், யோகம் மற்றும் ஞானத்தில் சிறந்து விளங்கிய சித்தர்களின் உலகம் இன்றும் வியக்கத்தக்க மர்மங்கள் நிறைந்ததாகவே உள்ளது. காலத்தை வென்று சூட்சும வடிவில் இன்றும் வாழ்ந்து வருவதாக நம்பப்படும் சித்தர்களின் ஆற்றல் நிறைந்த முக்கியமான 6 ஆன்மீக திருத்தலங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம். பொதிகை மலை : சித்தர்களின் தலைமை குருவான அகத்திய முனிவர் வாழ்ந்து அருள்பாலித்த தலம் பொதிகை மலை. நெல்லை […]
நம் முன்னோர்களின் ஆன்மீக சாஸ்திரங்கள் மற்றும் வாஸ்து நம்பிக்கைகளின்படி, சில குறிப்பிட்ட பறவைகள், பூச்சிகள் மற்றும் விலங்குகள் தானாகவே நமது வீட்டிற்குள் வருவது சுப சகுனங்களாகவும், வரவிருக்கும் நன்மைகளின் அடையாளங்களாகவும் பார்க்கப்படுகின்றன. வளர்ப்பு பிராணிகள் அல்லாமல், இயல்பாகவே இந்த உயிரினங்கள் வீட்டிற்குள் நுழைவதால் ஏற்படும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். அந்த வகையில், வீட்டிற்குள் சிட்டுக்குருவி வந்தால் சுப காரியங்கள் கைகூடும் என்றும், வெட்டுக்கிளி வந்தால் பண வரவு […]
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் இனி தனியார் குத்தகை இன்றி, கோவில் நிர்வாகமே நேரடியாக பிரசாதங்களை தயாரித்துப் பக்தர்களுக்கு நியாயமான விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய மற்றும் நடுத்தரக் கோவில்களில் லட்டு, முறுக்கு, சர்க்கரைப் பொங்கல், புளியோதரை உள்ளிட்ட பல்வேறு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை இப்பணிகள் தனியாருக்கு ஏலம் விடப்பட்டு […]
கடினமாக உழைத்தும் வருமானம் பெருகாமல் பணத்தடையால் தவிப்பவர்களுக்காக, வீட்டில் இருக்கும் எளிய பொருட்களைக் கொண்டு செய்யக்கூடிய தாந்திரீகப் பரிகார முறை ஆன்மீகத்தில் பரிந்துரைக்கப்படுகிறது. மகாலட்சுமியின் அருளை ஈர்த்து நிதி நெருக்கடியைப் போக்க உதவும் இந்தப் பரிகாரத்தை ஒரு சனிக்கிழமை நாளில், ராகு காலம் மற்றும் எமகண்ட நேரங்களைத் தவிர்த்து, சுப ஹோரை அல்லது கௌரி பஞ்சாங்கத்தில் ‘தனம்’, ‘லாபம்’ உள்ள சுப வேளையில் தொடங்குவது சிறந்தது. இதற்கு பன்னீர், அத்தர் […]

