மத்திய அரசின் பல்வேறு கொள்கைகள் முன்முயற்சிகள் காரணமாக மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. மின்சார வாகன உற்பத்தியை ஊக்கப்படுத்தும் திட்டத்துடன்  இவற்றை வாங்குவதற்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தையும் அரசு செயல்படுத்துகிறது. இதனால் இருசக்கர மற்றும் மூன்று சக்கர மின்சார வாகனச் சந்தை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. 2030-க்குள் அதிவேக மின்சார வாகனப்பயன்பாட்டுக்கு நாடு முன்னேறிச் செல்லும் என்பதால் வாகனங்களிலிருந்து வெளியேறும் கரியமில வாயுவை சுமார் ஒரு ஜிகா டன் அளவுக்கு […]

EPFO அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது. EPF-ல் இருந்து அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க ஜுலை 11-ம் தேதி கடைசி நாளாகும். EPF உறுப்பினர்கள் இந்த காலக்கெடுவை தவறவிட்டால், அவர்கள் அதிக ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும். தேவைப்படும் ஆவணங்கள்: உங்கள் […]

வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அப்டேட்டுகளை பயனர்களின் வசதிக்காக வழங்கி வருகிறது. பொதுவாக வாட்ஸ் அப் செயலியில் எமோஜி மற்றும் ஸ்டிக்கர்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அண்மையில், கேலரியில் உள்ள புகைப்படங்களை ஸ்டிக்கர்களாக பயனர்களுக்கு அனுப்பும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த அப்டேட் பயனாளர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இப்போது மீண்டும் எமோஜி மற்றும் ஸ்டிக்கர்கள் குறித்த புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. அந்த […]

ஏஐ கேமரா தொழிற்நுட்பத்தை போலீஸார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த பயன்படுத்துவது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துவரும் நிலையில், இத்தகைய அதிநவீன தொழிற்நுட்பம் பயன்படுத்துவதை தடுக்க முடியாது என கூறியதோடு, கேரள மாநில அரசை கேரள உயர்நீதிமன்றம் பாராட்டியுள்ளது. ஏஐ என சுருக்கமாக அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவை பெற்ற தொழிற்நுட்பங்கள் உலகில் பல்வேறு துறைகளில் நுழைய ஆரம்பித்துவிட்டன. ஏஐ சார்ந்த படிப்புகளை படிக்கவும், பயிற்சிகளை பெறவும் பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆட்டோமொபைல் வாகனங்களில் […]

இந்தியாவில் கார் வாங்குவது ஒன்றும் எளிதல்ல. அது ஒரு மிகப்பெரிய நடைமுறை. நம்முடைய நேரம், முயற்சி, பணம் ஆகியவற்றை கொடுத்தாக வேண்டும். பல படிநிலைகளை கடந்து தான் ஒருவர் கார் வாங்க முடியும். இப்படிபட்ட சூழ்நிலையில் கார் வாங்குவதற்கு முன் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். உங்களுக்கு தேவையான கார் எது..? இதுதான் முதலில் முடிவெடுத்தாக வேண்டிய விஷயம். உங்கள் பட்ஜெட், குடும்பத்தில் […]

பெரும்பாலான கார்களின் இன்ஜின் முன் பக்கம் தான் இருக்கிறது. காரின் மையப்பகுதியிலோ பின் பகுதியிலோ பொருத்தப்படுவதில்லை. இது ஏன் என்று தெரியுமா..? இதற்குப் பின்னால் உள்ள ரகசியம் என்ன? இது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம். இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் இயங்கி வரும் பெரும்பாலான கார்களின் இன்ஜின் (Car Engine) முன் பகுதியில் தான் இருக்கிறது. வெகு சில கார்களின் மட்டுமே மையப் பகுதியிலோ அல்லது காரின் […]

மலேசிய சந்தைக்கான டொயோட்டா இன்னோவா ஜெனிக்ஸ் கார், இந்தோனேஷியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதன்பின் மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெளிப்புற டிசைனை (Design) பொறுத்தவரையில், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரை போலவேதான், டொயோட்டா இன்னோவா ஜெனிக்ஸ் காரும் உள்ளது. இதன்படி டொயோட்டா இன்னோவா ஜெனிக்ஸ் காரில், எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி பகல் நேர விளக்குகள் மற்றும் எல்இடி டெயில்லேம்ப்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மேலும் 18 இன்ச் அலாய் […]

இ-ஸ்கூட்டர்கள் தான் இப்போது டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது. பெட்ரோல் விலை அதிகரித்து வருவதால், மக்கள் மின்சார வாகனங்கள் வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு பல நிறுவனங்கள் ஒரே நேரத்தில் விதைத்து இருந்தாலும், மக்களிடத்தில் அதிகம் கொண்டு சென்றது ஓலா தான். அதனைத் தொடர்ந்து ஏதர் நிறுவனமும் பிரலமடைந்தது. இந்த சூழலில், மின்சார ஸ்கூட்டர்கள் வாங்க நினைக்கும் பயனர்களுக்கு, எந்த ஸ்கூட்டர் சிறந்தது. வங்கி கடன்கள் எவ்வளவு கிடைக்கும் […]

ஆட்டோமொபைல் சந்தையில் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு புதிய பைக்குகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றன. அதில், சில பைக்குகள் விற்பனையில் பெரும் வெற்றியை பெறுகிறது. மற்றவை கொஞ்சம் சந்தையை தாக்குப்பிடித்து நிற்கிறது. ஒரு சிலதோ இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடுகிறது. அப்படிப்பட்ட 7 பைக்குகள் குறித்து தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம். இந்த பைக்குகள் வித்தியாசமான விளம்பர யுக்தியைக் கொண்டு களமிறக்கப்பட்டாலும், சில நாட்களிலேயே இருந்த […]

விவசாயிகளுக்கு வருவாய் ஆதரவளிக்கும் வகையில், மத்திய அரசின் பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவுத் திட்டத்தின் கீழ், முக அங்கீகார அம்சத்துடன் கூடிய பிரதமரின் வேளாண் மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் வீட்டில் இருந்தபடியே ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல் அல்லது கைரேகையில்லாமல், மின்னணு வாயிலான வாடிக்கையாளர் விவரங்களை பூர்த்தி செய்ய முடியும். அத்துடன் மற்ற நூறு விவசாயிகளுக்கும் அவர் உதவமுடியும். இதன் மூலம் மாநில அரசு […]