வயதுக்கு மீறிய உள்ளடக்கத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க ஓடிடி தளங்களில் வலுவான பாதுகாப்பு அம்சங்களை கட்டாயப்படுத்துகிறது மத்திய அரசு. தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் கீழ், தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021-ன் பகுதி-III, ஓடிடி தளங்களில் உள்ளடக்கத்தை வெளியிடுபவர்களுக்கான நெறிமுறை குறியீடுகளை வழங்குகிறது. இதன்படி, சட்டத்தால் தடைசெய்யப்பட்ட எந்தவொரு உள்ளடக்கமும் வெளியிடப்படக் கூடாது. மேலும் வயது அடிப்படையிலான உள்ளடக்கம் 5 வகைகளாகப் […]
தொழில்நுட்பம்
Technology News – Get latest technology news on gadgets launches in India such as Mobile Phone, Latest Smartphones and Computers.
ரயில் பயணச்சீட்டு முன்பதிவு முறையை திருத்தம் செய்து மேலும் வலுப்படுத்துவதற்கு இந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ரயில் பயணச் சீட்டு முன்பதிவு முறையை மேம்படுத்த இந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஐஆர்சிடிசி-யை பயன்படுத்தும் பயனாளர்களின் கணக்குகளை மறு மதிப்பீடு மற்றும் சரிபார்த்தல் மூலம் 2025 ஜனவரி முதல் சந்தேகத்திற்குரிய சுமார் 3.02 கோடி பயனாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டன. தட்கல் […]
ஆதார் பெயர் மாற்றத்திற்கான ஆவணமாக இனி பான் கார்டை ஏற்க முடியாது என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது. இந்திய பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றை ஆவணமாக வழங்கலாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்ய தேவையான ஆவணங்களில் பான் கார்டு இனி செல்லுபடியாகாது. இந்த மாற்றம் நவம்பர் 2025 முதல் […]
ஆஸ்திரேலிய அரசாங்கம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளது. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடையை அமல்படுத்திய உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா மாறியுள்ளது. இந்தப் புதிய, கடுமையான விதிகள் புதன்கிழமை (டிசம்பர் 10, 2025) முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும். இந்தச் சீர்திருத்தம் குழந்தைகள் தங்கள் குழந்தைப் பருவத்தை இழக்காமல் இருப்பதை உறுதி செய்யும் என்று […]
நாடு முழுவதும் பல்வேறு வகையான சைபர் மோசடி வழக்குகள் வெளிச்சத்துக்கு வருகின்றன. அந்த வகையில், அகமதாபாத்திலிருந்து ஒரு புதிய வழக்கு வெளிவந்துள்ளது. Zepto ஆர்டர் செய்யப்பட்ட காய்கறிகளுக்கான பணத்தைத் திரும்பப் பெற முயன்றபோது ஒரு பெண் மோசடிக்கு ஆளானார்.. என்ன நடந்தது? ஒரு பெண் விரைவு வர்த்தக தளமான Zepto-வில் ரூ.24 மதிப்புள்ள கத்தரிக்காய்களை ஆர்டர் செய்தார். அவர் கத்தரிக்காய்களை ஆர்டர் செய்திருந்தார், ஆனால் டெலிவரி பாய் காய்கறிகளுடன் வந்தபோது, […]
ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்களின் தேவைகளுக்கு ஏற்ப புதிய ரீசார்ஜ் திட்டங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. தினசரி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் OTT சந்தாக்களை விரும்புவோருக்கு ஜியோ புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் குறுகிய காலத்தை கொண்டிருந்தாலும், நன்மைகள் அதிகம். நீங்கள் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவைப் பெறுவீர்கள், மொத்தம் 84 ஜிபி. வரம்பற்ற அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், ஜியோஹோம் சேவைக்கு 2 […]
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை விதிகள் குறித்த மறுஆய்வு தொடர்பான ஆலோசனைகள் மற்றும் விமர்சனங்களை தெரிவிப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்புத்துறையில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒழுங்குமுறை விதிகள் குறித்த இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் மறுஆய்வு தகவல்கள் அடங்கிய ஆவணத்தை கடந்த மாதம் (நவம்பர் 2025) 10-ம் தேதி ட்ராய் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனைகளை இம்மாதம் (டிசம்பர் 2025) 8-ம் தேதிக்குள்ளும் அது தொடர்பான விமர்சனங்களை இம்மாதம் (டிசம்பர் 2025) […]
உலகின் பெரும் பணக்காரர் எலான் மஸ்க் தனது செயற்கைக்கோள் இணைய ஸ்டார்லிங்க் சேவைகளை உலகம் முழுவதும் கொண்டு வர முயற்சிக்கிறார். சில நாடுகளில் இந்த சேவைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டிருந்தாலும், விரைவில் இந்தியாவிலும் தொடங்கப்படும். புத்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவில் இந்த சேவைகள் கிடைக்கும் என்று தெரிகிறது. இந்த நேரத்தில், ஸ்டார்லிங்க் நாட்டின் பல நகரங்களில் தரை நிலையங்களைத் தயாரித்து வருகிறது. இவை சிக்னல்களை மேம்படுத்தவும் வேகமான இணையத்தை வழங்கவும் உதவும். இணையம் […]
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) நாளுக்கு நாள் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதன் வேகத்தை பார்த்தால், அதை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கே பயம் உண்டாகிறது. இந்நிலையில், உலகின் முன்னணி AI நிபுணர்களில் ஒருவரான ஸ்டூவர்ட் ரஸ்ஸல், ஒரு பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். அவரது கணிப்புப்படி, இனி வரும் காலங்களில் உலகெங்கிலும் சுமார் 80% வேலைவாய்ப்புகள் AI காரணமாக இல்லாமல் போகும் அபாயம் உள்ளதாகவும், அதிக சம்பளம் பெறும், […]
ரயில்வே கட்டமைப்பில் கவாச் தொழில்நுட்பத்தை செயல்படுத்த இந்த ஆண்டு 1673.19 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். கவாச் என்பது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பாகும். கவாச் என்பது தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சிறந்த அமைப்பாகும்.லோகோ பைலட் எனப்படும் ரயில் ஓட்டுநர் தவறும் பட்சத்தில் தானியங்கி பிரேக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் குறிப்பிட்ட வேக வரம்புகளுக்குள் ரயில்களை இயக்க கவாச் உதவுகிறது. மோசமான […]

