ஆதார் இந்தியாவில் மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. உங்கள் வங்கிக் கணக்குகள் தொடங்குவது முதல் அனைத்திற்கும் ஆதார் என்பது அவசியம். அரசாங்கம் வழங்கும் பல்வேறு சேவைகளுக்கு கட்டாய ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாம் அனைவரும் சிறு வயதில் இருக்கும் பொழுது எடுக்கப்பட்ட ஆதார் அட்டையில் புகைப்படங்கள் மிகவும் பழமையானதாக இருக்கும்.. இதனால் சில நேரங்களில் நம்முடைய முக அடையாளங்கள் மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியாத சூழல் உருவாகிவிடுகிறது.. எனவே, ஆதார் […]
தொழில்நுட்பம்
Technology News – Get latest technology news on gadgets launches in India such as Mobile Phone, Latest Smartphones and Computers.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரும், உலக முக்கிய பணக்காரருமான எலான் மஸ்க் ட்விட்டர் சமூக ஊடகத்தை சில நாட்களுக்கு முன் 3.5 லட்சம் கோடிக்கு வாங்கியுள்ளார். இதை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தில் பல அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகின்றார். நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வந்த பராக் அகர்வால் மற்றும் ட்விட்டரின் முக்கிய தலைமை நிர்வாகிகளை சமீபத்தில் நீக்கினார். To all complainers, please continue […]
செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் 26 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ள. ஐடி விதிகள் 2021 இன் படி, செப்டம்பர் மாதத்திற்கான அறிக்கையை நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், பயனர்-பாதுகாப்பு அறிக்கையில் பெறப்பட்ட பயனர் புகார்களின் விவரங்கள் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் எங்கள் தளத்தை தவறாக பயன்படுத்திய நபர்கள் மீது தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது., 2021 ஆம் ஆண்டு புதிய ஐடி […]
வாட்ஸ் ஆப் செயலி பயனர்களுக்கு எவ்வளவோ நன்மைகளை செய்து வருகின்றது . குறிப்பாக அடுத்தடுத்து பல நவீன அப்டேட்களை நமக்கு அளிக்கின்றது. அந்த வகையில்தற்போது வெளியிட்டுள்ள அடுத்தக்கட்ட அப்டேட்டில் உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பிக்கொள்ளலாம். ஒருவருக்கு குறுந்தகவல் அனுப்புவதற்கும், விஷயத்தை பகிர்ந்து கொள்வதற்கும், புகைப்படத்தை அனுப்புவதற்கும், வீடியோக்கள், ஆவணங்கள் பகிர்ந்து கொள்வதற்கும் வாட்ஸ்ஆப் பெரிதும் உதவியாக இருக்கின்றது. இதில் மக்களின் தேவைகளை புரிந்து கொண்ட வாட்ஸ் ஆப் அடுத்தடுத்த புதிய […]
ஓய்வூதியம் பெருநவர்கள் ஆயுள் சான்றிதழை எப்படி ஆன்லைன் மூலம் சம்பாதிக்கலாம் என்பதை பார்க்கலாம். இந்தியாவில் ஓய்வூதியம் பெரும் அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களும் தங்கள் ஓய்வூதியத்தை இடைவேளையின்றி தொடர்ந்து பெறுவதற்கு ஆண்டுதோறும் தங்கள் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். தற்பொழுது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஓய்வூதியம் பெறுபவர்கள் இனி ஆண்டு முழுவதும் எந்த நேரத்திலும் வேண்டுமானாலும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. ஓய்வூதியம் பெறுபவர்களின் […]
எஸ்பிஐ உள்ளிட்ட 18 வங்கி வாடிக்கையாளர்களின் தரவுகளை போலியான செய்தி மூலம் டிரினிக் என்னும் வைரஸ் உங்கள் தரவைத் திருடலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. உங்களது போனில் ஊடுருவி, வங்கிக் கணக்கு எண்கள் மற்றும் OTP போன்றவை முக்கியமான விவரங்களைத் திருடுவதற்கு ஏராளமான வைரஸ் சாப்ட்வேர்கள் உள்ளன. அதுபோன்ற ஒரு மால்வேர் இந்திய வங்கிகளையும் அவற்றின் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை திருட மீண்டும் ஒரு மால்வேர் வந்துள்ளது. இது இந்தியாவில் உள்ள […]
அரசு மின்னணு சந்தை இணைய தளம் தொடங்கப்பட்டதில் இருந்து ரூ.10,000 கோடிக்கு மேல் கொள்முதல் செய்துள்ள முதல் மத்திய பொதுத்துறை நிறுவனமாக இந்திய எஃகு ஆணையம் திகழ்கிறது. கடந்த 2018-19 நிதியாண்டில் ரூ.2.7 கோடி என்ற சிறிய அளவில் கொள்முதலை தொடங்கிய இந்திய எஃகு ஆணையம் இந்த ஆண்டு கொள்முதல் மதிப்பை ரூ.10,000 கோடியாக கடந்தது. முந்தைய நிதியாண்டில் ரூ.4,614 கோடி அளவிற்கு கொள்முதல் செய்து அரசு மின்னணு சந்தை […]
பிரபல யு.பி.ஐ. செயலிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மற்றொரு பிரபல நிறுவன செயலியின் லோகோவை காப்பி அடித்ததால் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாம் அன்றாட வாழ்வில் அத்தியாவசியங்களுக்கு பயன்படுத்தும் ஒரு செயலி போன்பே. யுபிஐ செயலியான போன்பே வை காப்பி அடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட மற்றொரு செயலி மொபைல் பே.. அதே போன்ற லோகோவை காப்பி அடித்து வர்த்தகத்திற்குள் நுழைந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போன்பே நிறுவனம் […]
சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக முடங்கிய வாட்ஸ் அப் செயலி தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியது. இந்தியா உள்பட உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். தகவல் பரிமாற்றத்தில் மக்கள் மத்தியில் வாட்ஸ்அப் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்புவதற்கு வாட்ஸ் அப் செயலி பெரும் உதவியாக உள்ளது. அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் ஒரு சாதனமாக வாட்ஸ் அப் விளங்குகின்றது. இந்நிலையில், […]
நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்புத் துறையின் செப்டம்பர் மாதத்திற்கான தரவரிசை அறிக்கையின்படி, அனைத்து குரூப் ஏ அமைச்சகங்கள், துறைகள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த தரவரிசையில் UIDAI தொடர்ந்து இரண்டாவது மாதமாக முதலிடம் பிடித்துள்ளது. மத்திய பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு மூலம் பெறப்பட்ட பொது மக்கள் குறைகளைத் தீர்ப்பதிலும், ஆதார் அடையாள அட்டைதாரர்களின் […]