பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன், தமிழ்நாடு அரசு புதிய நலத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், உலர் மற்றும் ஈர மாவு அரைக்கும் இயந்திரம் வாங்கும் பெண்களுக்கு அதிகபட்சமாக ரூ.5,000 வரை மானியம் வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்த நிதி உதவிக்காக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 31, 2025 என அறிவித்துள்ளது. இந்தத் திட்டம், குடும்பத் […]

தமிழ்நாடு அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தத் திட்டங்களின் ஒரு பகுதியாக, தொழில் முனைவோரை உருவாக்கும் முயற்சியின் கீழ், “ஆவின் பாலகம் மானிய திட்டம்” பலருக்கு வாழ்க்கையை மாற்றும் வாய்ப்பாகவே அமைகிறது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், குறைந்த வருமானம் கொண்ட சமூகத்தினருக்கு தனி தொழிலை ஆரம்பிக்க அரசு […]

கூல்ஸ்கல்ப்டிங் எனப்படும் எந்திரத்தைப் பயன்படுத்தி கொழுப்பைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கும் சிகிச்சைகள் தொடர்பாக தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக விஎல்சிசி நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ 3 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்நிறுவனம் வெளியிட்டிருந்த உடல் எடைக் குறைப்பு விளம்பரம் புகார் மற்றும் விளம்பர கண்காணிப்பு மூலம் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் கவனத்திற்கு வந்தது. பரிசோதனையில், இந்நிறுவனம் , எடை இழப்பு பற்றிய மிகைப்படுத்தப்பட்ட அறிவிப்புகளை […]

நிம்மதியான தூக்கம் மற்றும் ஓய்வெடுப்பதற்காக, பெரும்பாலான மக்கள் தங்கள் படுக்கையறையில் வசதியான மெத்தை, தலையணைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வைத்திருப்பார்கள். ஆனால் நிபுணர்களின் கூற்றுப்படி, படுக்கையறையில் உள்ள சில பொதுவான பொருட்கள் உண்மையில் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஆச்சரியப்படும் விதமாக, இவை கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் காணப்படும் விஷயங்கள், ஆனால் சரியான நேரத்தில் மாற்றப்படாவிட்டால் அல்லது அகற்றப்படாவிட்டால், அவை உங்கள் நல்வாழ்வை அமைதியாகப் பாதிக்கலாம். […]

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்தியா முழுவதும் சில்லறை வணிகத் துறையில் பலவிதமான சலுகைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக, எப்போதும் “ஒவ்வொரு நாளும் குறைந்த விலை” என்ற கொள்கையை பின்பற்றும் டி-மார்ட், இந்த பண்டிகைக் காலத்திலும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. பண்டிகை காலங்களில் வாடிக்கையாளர்கள் அதிகமாக ஷாப்பிங் செய்வது வழக்கம். குறிப்பாக, வாரம் முழுவதும் வேலைப்பளுவில் இருக்கும் மக்கள் ஞாயிற்றுக்கிழமையை ஷாப்பிங் தினமாக வைத்துள்ளனர். இதை […]

அனைத்து ஓட்டுநர் உரிமதாரர்களும் ஆதார் சரிபார்ப்பைப் பயன்படுத்தி தங்கள் மொபைல் எண்களை உரிமங்களுடன் இணைக்குமாறு சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது . போக்குவரத்து சேவைகளை சீராக அணுகுவதை எளிதாக்குவதற்கும், சலான்கள், பதிவு புதுப்பித்தல்கள் மற்றும் காப்பீட்டு புதுப்பிப்புகள் குறித்த சரியான நேரத்தில் அறிவிப்புகளை உறுதி செய்வதற்கும் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. “அனைத்து ஓட்டுநர் உரிமதாரர்களும் தங்கள் ஓட்டுநர் உரிமங்களுக்கான மொபைல் எண்களை ஆதார் சரிபார்ப்பு மூலம் இணைக்க அல்லது புதுப்பிக்குமாறு […]

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பரிவர்த்தனை எதுவும் இல்லாமலும் அல்லது தேவையான குறைந்தபட்ச இருப்புத் தொகையைக் (Minimum Balance) கடைபிடிக்காமலும் இருந்தால் அவர்களின் சேமிப்புக் கணக்குகள் முடக்கப்பட உள்ளன. வங்கியின் தரவுகளின்படி, சில வாடிக்கையாளர்கள் தங்களின் சேமிப்புக் கணக்குகளில் நீண்ட […]