தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஜூன்25) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த […]

இல்லத்தரசிகளின் பணியை கணவரின் 8 மணி நேர வேலையுடன் ஒப்பிட முடியாது என்றும், கணவன் சொத்தில் மனைவிக்கு சம பங்கு உண்டு எனவும் சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேலும் வெளிநாட்டில் வேலை பார்த்து அதன் மூலமாக வாங்கிய சொத்தில் மனைவிக்கு உரிமை இல்லை என்று கணவன் ஒருவர் தொடர்ந்து வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. மேலும் கணவனின் ஊதியத்தின் மூலமாக வாங்கும் சொத்தில் மனைவிக்கும் சம […]

உயர்நீதிமன்ற நீதிபதிகளை சந்திக்கும் போது, சால்வை, நினைவு பரிசுகள் வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என்று கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் ஏராளமான மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளன. குற்றவியல் நீதிமன்றங்கள், குடும்ப நீதிமன்றங்கள் என்ற வகையில் மாவட்ட வாரியாகவும், தாலுகா வாரியாகவும் நீதிமன்றங்கள் உள்ளன. மாவட்ட நீதிபதியாக பணியில் சேரும் ஒருவர் பணி மூப்பின் காரணமாக ஐகோர்ட் நீதிபதியாகவும் பதவி உயர்வு […]

2023 2024 ஆம் நிதி வருடத்திற்கான தங்க பத்திர விற்பனையை மத்திய அரசு தற்சமயம் ஆரம்பித்திருக்கிறது. இந்த தங்க பத்திர விற்பனை வணிக வங்கிகள், தபால் நிலையங்கள் மற்றும் தேசிய பங்கு சந்தை மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. அந்த விதத்தில் குறைந்தபட்சம் ஒரு கிராம் தங்கம் முதல் 4 கிலோ தங்கம் வரையில் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம் என்று கூறப்படுகிறது. தற்சமயம் 1 கிராம் 5,926 ரூபாய் என […]

கிரிக்கெட்டின் ‘மெக்கா’ என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில், இதே நாள் ஜூன் 25, 1983ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் உலகக்கோப்பையை கைப்பற்றியது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். இந்த வெற்றி இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது மட்டுமின்றி, ஒட்டுமொத்த தேசத்திற்கும் மகத்தான மகிழ்ச்சியையும் பெருமையையும் தந்தது. கேப்டன் கபில்தேவ் தலைமையிலான இந்த வெற்றி, இந்திய வீரர்களின் குழுப்பணி, உறுதிப்பாடு மற்றும் அசைக்க முடியாத […]

நேரத்துக்கேற்ப மின் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை வீடுகளுக்கு பொருந்தாது என்று என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மின் பயன்பாடு அதிகம் உள்ள காலை மற்றும் மாலை நேரங்களில் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 20% கூடுதல் கட்டணம் வசூலிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 2024 ஏப்ரல் முதல் தொழிற்சாலைகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் இந்த மின் கட்டண முறை அமல்ப்படுத்தப்பட இருக்கிறது. அதன்படி, நேரத்துக்கேற்ப மின் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை […]

இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடையும் வேளையில் மின்சார தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக வெயில் காலத்தில் தொழிற்சாலைகளை தாண்டி வீடுகளிலும் மின்சார தேவை அதிகரித்து வரும் வேளையில் மின்சார கட்டணம் பெரிய அளவிலான சுமையாக மாறி வருகிறது.   இந்த நிலையில் மத்திய அரசு புதிய மின்சார கட்டண முறையை அறிவித்துள்ளது, இப்புதிய கட்டண முறையின் கீழ் பகல் நேரத்தில் மின் பயன்பாட்டில் 20 சதவீதம் […]

30,000க்கும் குறைவான ஸ்மார்ட் போன் என்பது தற்போது அதிக விற்பனை என்று சொல்லப்படுகிறது. அத்துடன் ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர்கள் பல்வேறு சிறந்த அம்சங்களை வழங்குவதாக உறுதியளிக்கும் விலை பிரிவாக உள்ளது. தற்சமயம் moto edge40 மாடல் தொடர்பாக நாம் தெரிந்து கொள்ளலாம். இது ஒப்பீட்டளவில் அதிக சிறப்பம்சங்களை கொண்ட மேலும் மலிவான விலையில் அதாவது 30 ஆயிரம் ரூபாயில் கிடைக்கிறது இந்த விலையில் கண்ணாடி பின்புறம் ஆனால் பிளாஸ்டிக் பிரேம் […]

கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை காண்பதற்காக சென்ற சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்ற நீர்மூழ்கி கப்பல் அந்த தொகுதியில் இருந்து மாயமானது ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் ஆழத்தி உள்ளது. சற்றேற குறைய 2224 பேருடன் சென்ற டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் இருந்த ஒரு பனிப்பாறையில் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தின் காரணமாக, கடலில் மூழ்கிய அந்த கப்பலில் பயணித்த சுமார் 1500 பேர் மரணம் அடைந்தனர். […]

வாட்ஸ்அப் அல்லது எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும் லிங்க் களை திறக்கும் போது கவனமுடன் இருக்க அரசு எச்சரித்துள்ளது. தற்போது பல்வேறு இணையதள மோசடிகள் நடைபெற்று வருவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. பொதுமக்கள் அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட்போன் இருப்பதால் அதன் வழியே, மோசடிக்காரர்கள் தங்களது மோசடி வேலையை நடத்துகின்றதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் தங்களது வங்கி கணக்குகளை இணைத்துள்ள மொபைல் எண், மூலம் ஸ்மார்ட் போன்களில் வங்கியிடம் இருந்து செய்தி […]