ஓஹியோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஓஹியோ விமான நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை யங்ஸ்டவுன்-வாரன் பிராந்திய விமான நிலையம் அருகே ஆறு பேருடன் செஸ்னா 441 விமானம் மொன்டானாவின் போஸ்மேனு சென்றுக்கொண்டிருந்தது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் விபத்துக்குள்ளானதாக மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் […]

கோவிட் தொற்றின் புதிய மாறுபாடு காரணமாக தற்போது நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. புதிதாக அடையாளம் காணப்பட்ட ஒரு வகைக்கு NB.1.8.1 அல்லது ‘நிம்பஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது, இது சில அசாதாரண அறிகுறிகளைக் காட்டுகிறது. உலகம் முழுவதும் விரைவான விகிதத்தில் பரவுகிறது. இந்த புதிய மாறுபாட்டின் பயங்கரமான அறிகுறிகள் இருந்தபோதிலும், WHO மற்றும் CDC போன்ற சுகாதார அமைப்புகள், பெரும்பாலான மக்களிடையே மிகவும் கடுமையான நோய்க்கு வழிவகுக்காது என்று தொடர்ந்து வலியுறுத்துகின்றன. […]

ஆப்பிரிக்க நாடான சூடான் தங்கம் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. அந்தவகையில் நாட்டில் உள்ள மாகாணங்களில் தங்க சுரங்கங்கள் அதிக எண்ணிக்கையில் செயல்பட்டு வருகின்றன. நிலக்கரி சுரங்கங்களை விட, தங்க சுரங்கத்தில் பணியாற்றுவது அதிக கடினமான காரியம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையொட்டி மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை கையாண்டு, சுரங்கத்தில் பணிகள் நடைபெற்று வரும். இந்தநிலையில், கிழக்கு நைல் நதி மாகாணத்தில் உள்ள கெர்ஷ் அல்பீல் தங்கச் சுரங்கத்தில் நேற்று முன்தினம் […]

பேருந்து மீது லாரி மோதி கோர விபத்திற்குள்ளானதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து நாட்டின் மினொபியா மாகாணம் அர்ப் அல் சன்பாசா கிராமத்தில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 22 தொழிலாளர்கள் பயணம் செய்தனர். நேற்று காலை இந்த பேருந்து அஷ்மொன் பகுதியில் சென்ற போது சாலையில் எதிரே வேகமாக வந்த லாரி, பேருந்து மீது மோதியது. இந்த கோர விபத்தில் […]

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக மே மாதம் தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய ராணுவத்தால் அழிக்கப்பட்ட பயங்கரவாத ஏவுதளங்கள் மற்றும் பயிற்சி முகாம்களை மீண்டும் நிறுவ பாகிஸ்தான் தீவிரமாக செயல்பட்டு வருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு பாகிஸ்தான் ராணுவம், அதன் உளவுத்துறை நிறுவனமான ISI மற்றும் அரசாங்கம் கணிசமான நிதியுதவி […]

பாகிஸ்தானில் தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு இந்தியா மீது குற்றம் சாட்டப்பட்டதற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் ஆப்கனிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தது முதல் பாகிஸ்தானில் தாலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தான் தாலிபான் என்ற தனி அமைப்பு இந்த தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் வடக்கு வஜீரிஸ்தான் மாவட்டத்தில், ராணுவ வாகனங்கள் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை தற்கொலைப் படைத் தீவிரவாதி மோதியதில், ராணுவ […]

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடிபோகும் மக்கள் மற்றும் விசா மோசடியில் ஈடுபடுவோர் கடுமையாகக் கண்காணிக்கப்படுவார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது அதிகாரப்பூர்வ X பதிவில், நாட்டின் சட்டத்தை மீறும் எவருக்கும் “குறிப்பிடத்தக்க குற்றத் தண்டனைகள்” வழங்கப்படும் என்று கூறியுள்ளது. இந்த நடவடிக்கை அமெரிக்காவில் குட்டியேற்றத்திற்கு மீதான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளை மேலும் […]

டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் வரி மற்றும் செலவு மசோதாவின் சமீபத்திய செனட் வரைவை, உலக பணக்காரரும், டெஸ்லா தலைவருமான எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்துள்ளார். டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பின் எலான் மஸ்க்கை சிறந்த நிர்வாகத்துக்கான துறை தலைவர் என்ற சிறப்பு பதவியில் அமர்த்தினார். மஸ்க் இந்த பதவியில் 130 நாள் பணியாற்றுவதற்கு ஒப்புக் கொண்டிருந்தார். சில மாதங்களுக்கு முன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்துக்கு, செலவினங்களை குறைப்பதற்காக […]