கார் ஆர்வலர்கள் பலர் தங்களுக்குப் பிடித்த கார்களை சேகரிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஒருவர் ரோல்ஸ் ராய்ஸ், ஃபெராரி, பென்ட்லி, போர்ஷே மற்றும் லம்போர்கினி கார்களை வைத்திருந்தாலே அவர் நிச்சயம் பெரும்பணக்காரராக தான் இருப்பார்.. ஆனால் இவர் நூற்றுக்கணக்கான ஆடம்பர வாகனங்களை சேகரித்து வைத்திருக்கிறார்.. அவர் வேறு யாருமில்லை புருனே மன்னர் சுல்தான் ஹசனல் போல்கியா தான்.. உலகின் பணக்கார மன்னராக கருதப்படும் இவரின் கார் சேகரிப்பு அனைவரையும் வியப்பை ஏற்படுத்துகிறது.. […]

உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) கண்டுபிடிப்பு போட்டியில் இந்தியா 24 மதிப்பெண்களுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. நாட்டில் 29 குறிப்பிடத்தக்க AI மாதிரிகள் உள்ளன, மேலும் AI தொடர்பான முதலீடுகள் மொத்தம் 7.25 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கின்றன. சுவாரஸ்யமாக, புதிய ஆய்வொன்றின் படி, வேலைத்தளங்களில் AI பயன்பாடு இந்தியாவில் மிகுந்த வளர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 92% ஊழியர்கள் தங்கள் தினசரி பணிகளில் AI-ஐ பயன்படுத்துகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Linkee […]

இந்தியா, அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவைகளை இன்று (ஆகஸ்ட் 25) முதல் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் ஆகஸ்ட் மாத இறுதியில் அமலுக்கு வரும் புதிய சுங்க விதிகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய எண்ணெயை வாங்கியதற்காக இந்தியா மீது 25% வரி மற்றும் அபராதமாக கூடுதல் 25% வரி விதித்ததை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் பதட்டங்கள் நிலவி வருகின்றன.அஞ்சல் துறை […]

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி விரைவில் இந்தியாவுக்கு வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் துல்லியமான தேதியை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் ஒலெக்சாண்டர் போலிஷ்சுக் தெரிவித்தார். இந்த சந்திப்பு இருதரப்பு உறவுகளில் ஒரு முக்கிய மைல் கல் ஆகும். மேலும், ரஷ்யா–உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வை காணும் தற்போதைய உலகளாவிய முயற்சிகளில், இந்தியாவின் பங்கு என்பதையும் வலியுறுத்துகிறது. ANIயிடம் பேசிய தூதர் போலிஷ்சுக், […]

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், உடல்நலம் தொடர்பான பல புதிய அச்சுறுத்தல்கள் உருவாகி வருகின்றன. அவற்றில் ஒன்று மலட்டுத்தன்மை. உலக சுகாதார அமைப்பின் (WHO) சமீபத்திய அறிக்கை இந்தப் பிரச்சினை தொடர்பான அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களை முன்வைத்துள்ளது. அறிக்கையின்படி, உலகம் முழுவதும் இனப்பெருக்க வயதுடைய ஒவ்வொரு 6 பெரியவர்களில் ஒருவர் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த எண்ணிக்கை தனிப்பட்ட ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சமூகம் மற்றும் குடும்பத்திற்கும் மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும். WHO அறிக்கை என்ன […]

இஸ்ரேல்-பாலஸ்தீன தகராறுக்கு மத்தியில், வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22), ஐக்கிய நாடுகள் சபை காசாவில் பஞ்சத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது, இது மத்திய கிழக்கில் முதல் பஞ்சமாகும். நிபுணர்களின் கூற்றுப்படி, 5,00,000 மக்கள் பயங்கரமான பஞ்சத்தை எதிர்கொள்கின்றனர். இஸ்ரேலின் தடைகள் காரணமாக பாலஸ்தீனத்தின் இந்தப் பகுதிகளுக்கு உணவு சென்றடைய முடியவில்லை என்றும், இல்லையெனில் இந்தப் பஞ்சத்தைத் தடுத்திருக்கலாம் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உதவித் தலைவர் டாம் பிளெட்சர் கூறினார். அதே நேரத்தில், […]

பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள கில்கிட்-பால்டிஸ்தானின் கைசர் மாவட்டத்தில் நேற்று பனிப்பாறை வெடிப்பு ஏற்பட்டது.. இதனால் நிலச்சரிவு மற்றும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் பல கடைகள் அழிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பனிப்பாறை ஏரி வெடிப்பால் (GLOF) ஏற்பட்ட இந்த பேரழிவு, நேற்று மீண்டும் பல கிராமங்களில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது, இதனால் ஒரு செயற்கை ஏரி உருவாக்கப்பட்டது. பல பகுதிகள் நீரில் மூழ்கி, விரிவான […]

நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து நியூயார்க் நகரத்திற்கு இந்தியர்கள் உட்பட 54 பேருடன் திரும்பிக் கொண்டிருந்த சுற்றுலா பேருந்து, நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாது.. இந்த விபத்தில் சுமார் 5 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்தனர். நேற்று, பஃபலோவிலிருந்து கிழக்கே சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள பெம்ப்ரோக் அருகே இன்டர்ஸ்டேட் 90 இல் பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததை அடுத்து இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் ஜன்னல்கள் உடைந்ததால் இருந்தவர்கள் வெளியே தூக்கி […]

பூமி என்பது, குறிப்பிட்ட முடிவு இல்லாமல் வட்ட வடிவத்தைக் கொண்டுள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும்..ஆனால் பூமி உருண்டையானது அல்ல தட்டையானது என்று சில ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிற சதி கோட்பாட்டாளர்கள் கூறுகின்றனர். இந்த உண்மை அறிவியலால் கடினமான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டாலும், பூமிக்கு தொழில்நுட்ப ரீதியாக ஒரு முடிவு உள்ளது, மேலும் அதற்கு அப்பால் நிலம் இல்லாத ஒரு சாலை உள்ளது! விரிவாக பார்க்கலாம்.. ‘உலகின் கடைசி சாலை’ எங்கே […]

44 வயதான இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு தொழிலதிபர், சர்வதேச விமானப் பயணத்தின் போது 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக ஒப்புக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையிலிருந்து சூரிச் நோக்கி சென்ற 9 மணி நேரப் பயணத்தின் போது, தன் அருகில் தூங்கிக் கொண்டிருந்த அந்தக் சிறுமியை பார்த்தபோது “தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை” என்று நீதிமன்றத்தில் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், அந்த நபருக்கு ஒரு வருடம் மற்றும் ஆறு […]