பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உட்பட நாட்டின் முக்கிய பெண்களின் போலியான படங்களை ஒரு ஆபாச வலைத்தளம் வெளியிட்டதை அடுத்து இத்தாலியில் பெரும் சீற்றம் ஏற்பட்டுள்ளது. மெலோனியின் சகோதரி அரியன்னாவும் இலக்கு வைக்கப்பட்ட பெண்களில் ஒருவர். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் எல்லி ஷ்லீன், செல்வாக்கு மிக்க சியாரா ஃப்ரெராக்னி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸாண்ட்ரா மோரெட்டி ஆகியோரின் படங்களும் இந்தப் புகைப்படங்கள் ஆபாசமான மற்றும் பாலியல் ரீதியான தலைப்புகளுடன் […]

இங்கிலாந்து முழுவதும் குறைந்தது 85 இடங்களில் “கும்பல் அடிப்படையிலான குழந்தைகள் பாலியல் சுரண்டல்” சம்பவம் அரங்கேறியுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இந்த கும்பல் பாகிஸ்தானை சேர்ந்தது என்றும் அந்நாட்டு சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் ரூபர்ட் லோவ் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் ரூபர்ட் லோவ், தனிப்பட்ட முறையில் நடத்தப்படும் “grooming gangs” என்ற விசாரணையின் ஒருபகுதியாக, இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த விசாரணையில், பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த “பாலியல் கும்பல்கள்”, […]

போலந்தில் நடைபெற்ற விமானக் கண்காட்சி ஒத்திகையின்போது போர் விமானம் விபத்துக்குள்ளானதில் ராணுவ விமானி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலந்தின் ராடோமில் விமானக் கண்காட்சி இந்த வார இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்காக ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அதன்படி, நேற்று நடைபெற்ற ஒத்திகையி போது அந்நாட்டு விமானப்படையின் F-16 போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் ராணுவ விமானி ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானியின் அடையாளம் உடனடியாகத் தெரியவில்லை. இதனை போலந்து […]

உக்ரைன் தலைநகர் கீவ் மீது இன்று ரஷ்யா தாக்குதல் நடத்தியது.. இதில் 4 குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.. சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர் என்று உக்ரேனிய அதிகாரிகள் கூறுகின்றனர். இது கீவ் நகரில் நடந்த மிகக் கொடிய ரஷ்ய வான்வழித் தாக்குதல்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இன்று அதிகாலையில் கீவ் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள், நகரம் முழுவதும் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்ததாக தகவல்கள் […]

டிசம்பர் 14, 1929 அன்று, தி நியூயார்க் டைம்ஸில் வெளியான ஒரு செய்தி அமெரிக்காவில் மட்டுமல்ல, ஹங்கேரியிலும் மக்களை ஆச்சரியப்படுத்தியது. ஒரு சிறிய ஹங்கேரிய கிராமத்தில் சுமார் 50 பெண்கள், பெரும்பாலான ஆண்களை விஷம் வைத்து கொன்றதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டது. 1911 மற்றும் 1929 க்கு இடையில், புடாபெஸ்டிலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தெற்கே உள்ள நாகிரெவ் கிராமத்தில் பெண்கள், 50 க்கும் மேற்பட்ட ஆண்களைக் கொல்ல ஆர்சனிக் […]

ஆப்கானிஸ்தானில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் பலியாகினர்; 14 பேர் காயமடைந்தனர். மத்திய ஆசிய நாடான ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரிலிருந்து தலைநகர் காபூல் நோக்கி சென்ற பேருந்து நேற்று அதிகாலை 3 மணிக்கு விபத்தில் சிக்கியது. அதாவது, வேகமாக சென்ற பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 26 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், […]

கலிஃபோர்னியாவில் ChatGPT உடனான பல மாத உரையாடல்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்ட 16 வயது சிறுவனின் குடும்பத்தினர், OpenAI மற்றும் அதன் தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். தங்கள் மகனின் மரணத்திற்கு ChatGPT உடனான உரையாடல் தான் காரணம் என்று அந்த பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.. தற்கொலை செய்து கொண்ட சிறுவன் ஆடம் ரெய்ன் என அடையாளம் காணப்பட்டான், அவர் ChatGPT உடனான பல […]