பலர் வீட்டில் கேமராக்களை பாதுகாப்பு காரணங்களுக்காகவே பயன்படுத்துகிறார்கள் குறிப்பாக குழந்தைகள், செல்லப்பிராணிகள் இருப்பது போன்ற சூழலில் கேமரா பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த கேமராக்கள் பாதுகாப்பை கொடுக்க வேண்டிய இடத்தில், எதிர்பாராத முறையில், சட்டவிரோத உள்ளடக்கங்களை உருவாக்க பயன்படுத்தப்பட்டது.. தென் கொரியாவில் இதுபோன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள சுமார் 1,20,000 கேமராக்கள் ஹேக் செய்யப்பட்டு, அவற்றின் படங்களை திருடி, சட்டவிரோதமாக படமாக்கப்பட்ட பாலியல் சுரண்டல் […]

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்குச் சரிந்து, தற்போது ரூ.90.43 என்ற உச்சத்தைத் தொட்டிருப்பது இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் ரூபாயின் மதிப்பு பல மடங்கு வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், இந்த சமீபத்திய சரிவுக்குப் பின்னால் உள்ள காரணங்கள் குறித்துப் பொருளாதார வல்லுநர்கள் விவாதித்து வருகின்றனர். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு எப்படி வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதை பின்வரும் […]

ஆஸ்திரியாவை சேர்ந்த பிரபல மாடல் அழகியும், அழகுக்கலை நிபுணருமான ஸ்டெபானி பைபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வழக்கில், திடீர் திருப்பமாக ஸ்டெபானியின் முன்னாள் காதலனே அவரைக் கொலை செய்து, உடலை சூட்கேஸில் மறைத்து வைத்துப் புதைத்ததாக வாக்குமூலம் அளித்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. கடந்த மாதம் 23ஆம் தேதி மாடல் அழகி ஸ்டெபானி பைபர் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் […]

இன்று அதிகாலை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்கள், ரிக்டர் அளவுகோலில் குறிப்பிடத்தக்க அளவில் பதிவாகியுள்ளன. அதிகாலை 3.05 மணிக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆகப் பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து, அதிகாலை 4.45 மணிக்கு வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆகப் பதிவாகியுள்ளது. அதிகாலை நேரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் அச்சமடைந்தனர். […]

Artificial General Intelligence (AGI) அல்லது Superintelligence என்பது AI உலகில் மிகவும் பேசப்படும் சொற்கள். ஆனால் அவை என்னவென்று, அவை சமூகத்தில் என்ன தாக்கம் ஏற்படுத்தும் என்று நிபுணர்களுக்கிடையே ஒருமித்த கருத்து இல்லை. இது ஒருபுறமிருந்தாலும் OpenAI, Google, Anthropic போன்ற முன்னணி AI நிறுவனங்கள் முதல் AGI உருவாக்கும் போட்டியில் இறங்கியுள்ளன. Anthropic இணை நிறுவனர் மற்றும் தலைமை அறிவியல் அதிகாரி ஜாரெட் காப்லன், மனிதகுலம் மிகப் […]

பலூச் லிபரேஷன் ஃபிரண்ட் (BLF) அமைப்பு, முதல் முறையாக ஒரு பெண் தற்கொலைப்படை (fidayeen) குண்டுதாரி பயன்படுத்தி, பாகிஸ்தானின் பலுசிஸ்தான், சாகாய் பகுதியில் உள்ள சீன நிறுவனம் செயல்படுத்தும் தாமிரம் மற்றும் தங்கத் திட்டத்துடன் இணைக்கப்பட்ட, பலத்த பாதுகாப்புள்ள Frontier Corps முகாமை தாக்கியது. இந்த தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்தது. இதில் 6 பாகிஸ்தான் பாதுகாப்பு பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பாகிஸ்தான் அரசு இதுவரை […]

சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானின் உடல்நிலை பற்றி தெளிவான தகவலை தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், அவரின் ஆதரவாளர்கள் இன்று பெரும் போராட்டம் நடத்த இருக்கிறார்கள். ராவல்பிண்டியின் அடியாலா சிறையில் இம்ரான் கான் கொலை செய்யப்பட்டார் என்ற வதந்திகள் பரவி வரும் பாக் பிரதமர் ஷெரீஃப் அரசுக்கு எதிராக இந்த போராட்டம் நடைபெற உள்ளது.. இம்ரான் கானின் பிடிஐ ஆதரவாளர்கள் அவர் உண்மையில் எப்படி இருக்கிறார் என்பதை அரசு வெளிப்படையாக […]

அண்டார்டிகாவை சுற்றி அமைந்துள்ள தென் கடல், பல தசாப்தங்களாக நமது பூமிக்கு ஒரு முக்கிய காவலனாக இருந்து வந்துள்ளது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட அதிகப்படியான வெப்பத்தில் 90%க்கும் மேலானதையும், வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடில் (CO2) கால் பங்கையும் இந்தக் குளிர்ந்த நீர்ப்பரப்பு தனது ஆழமான அடுக்குகளுக்குள் சேமித்து வைத்துள்ளது. இருப்பினும், விஞ்ஞானிகள் தற்போது ஒரு அதிர்ச்சி தரும் எச்சரிக்கையை விடுத்துள்ளனர். எதிர்காலத்தில் இந்த அமைப்பு திடீரென உடைந்து, தான் […]

உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினமான இன்று, உலக சுகாதார அமைப்பு (WHO) எச்.ஐ.வி (HIV) தொற்றைத் தடுப்பதற்கான ஒரு புதிய மற்றும் புரட்சிகரமான மருந்து குறித்து விழிப்புணர்வு காணொளியை பகிர்ந்துள்ளது. இந்த மருந்து, ‘லெனாகேபாவிர்’ (Lenacapavir / LEN) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், எச்.ஐ.வி தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் 40 மில்லியன் பேர் பாதிப்பு : உலக சுகாதார நிறுவனத்தைச் […]

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மனித உருவ ரோபோக்களின் அபரிமிதமான வளர்ச்சி குறித்து, உலக பணக்காரர் எலான் மஸ்க் அதிர்ச்சியூட்டும் கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது கூற்றுப்படி, அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளுக்குள், உலகில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு வேலை செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. கடின உழைப்பு மற்றும் அறிவு சார்ந்த பணிகளை ரோபோக்களே கையாளும். இந்த மாற்றத்தின் விளைவாக, பணம் அதன் மதிப்பை இழக்கும் என்றும், […]